search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணை தேவை - அமித் ஷா வலியுறுத்தல்
    X

    சத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணை தேவை - அமித் ஷா வலியுறுத்தல்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். #LoksabhaElections2019 #BJP #AmitShah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ராஜ்நந்தகாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா,  சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நடைபெற்ற நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி கொல்லப்பட்டார்.

    பீமா மாண்டவி கொல்லப்பட்டது அரசியல் சதி.  எனவே, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.  #LoksabhaElections2019 #BJP #AmitShah
    Next Story
    ×