search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவோயிஸ்டுகள்"

    • கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கேரளா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

    தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது 2 பேர் குண்டுகாயங்களுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    கேரளாவில் போலீசார் தேடுதல் வேட்டை அதிகரித்து உள்ளது. எனவே அவர்கள் எல்லையோர சோதனைச்சாவடி வழியாக தமிழகத்துக்குள் புகுந்து, இங்கு உள்ள ஏதேனும் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதையடுத்து தமிழகம்-கேரளாவில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கேரள மாநிலத்தில் இருந்து வாளையார், வேலந்தாவளம், க.க.சாவடி வழியாக கோவை வரும் வாகனங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி வழியாக பொள்ளாச்சி வரும் வாகனங்கள் ஆகியவை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர தமிழகம்-கேரளா மாநில எல்லையோரத்தில் அமைந்து உள்ள ஆனைக்கட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 14 சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய 90 போலீசார் உள்பட 160 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சிகிச்சை பெறவரும் நோயாளிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாநகர எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    கேரளா துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தனியார் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. எனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் யாராவது குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற வந்தாலோ, சந்தேக நபர்கள் சிகிச்சை பெற்றாலோ உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
    • சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யங்குன்னு இடிப்பகுற்றி வனப்பகுதியில் கடந்த 13-ம் தேதி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் 3 துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ், கேரளாவை சேர்ந்த சேர்மன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கேரளா போலீசார், கர்நாடகா நக்சல் தடுப்பு பிரிவு, தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு தப்பி செல்லலாம் என்பதால் அங்குள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ் முருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து பர்கூர், அந்தியூர் வழியாக ஈரோடு செல்லக்கூடிய அனைத்து பஸ்கள் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு, அந்தியூர், பர்கூர் வழியாக மைசூரு செல்லக்கூடிய அனைத்து கார் பஸ் மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    மேலும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் போட்டோவை காண்பித்து இவர்களை பார்த்தால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதேபோல் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான கார பள்ளம் சோதனை சாவடி, பாரதி புரம், எல்ல கட்டை சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர். பண்ணாரி சோதனை சாவடி வழியாக ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கர்நாடகா சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது.
    • மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பி சென்றனர்.

    அந்தியூர்:

    கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரட்டி உட்பிரிவு வரம்பு கரிகோட்டகரி அடுத்த அய்யன்குன்னு அருகே உறுப்பும்குட்டி பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக அந்த மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கேரளா மாநில போலீசார், மாவோயிஸ்ட்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கோடர் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பி சென்றனர். அவர்களுடம் இருந்து 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டது தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் ரமேஷ், கேரளாவைச் சேர்ந்த சோமன் மற்றும் மனோஜ் ஆசிக் கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா என தெரிய வந்தது.

    இதையடுத்து தப்பி சென்ற மாவோயிஸ்ட்டுகளை பிடிக்க கேரளா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தப்பி சென்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இதனால் இரு மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வரட்டு பள்ளம் அணை அருகே வனத்துறை சோதனைசாவடியும், பர்கூர் அருகே ஒரு சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனைசாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. போலீசாரும் சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பர்கூர் சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தப்பி சென்ற மாவோயிஸ்டுகள் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால் இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    அதன்படி பர்கூர் சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு முழுவதும் சோதனையை தீவிர படுத்தி அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விசாரணை நடத்திய பிறகே அனுப்பி வைக்கிறார்கள்.

    மேலும் தலைமறைவான மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வைத்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    • கேரள மாநில வனப்பகுதிகளில் வனத்துைறயினர் மற்றும் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.
    • மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இருக்கும் வனத்துறை அலுவலகம் மீது கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கேரள மாநில வனப்பகுதிகளில் வனத்துைறயினர் மற்றும் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

    இந்நிலையில் கண்ணூர் ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து தப்பி வந்தனர். மாவோயிஸ்டுகள் தாக்குதலில் இருந்து தப்ப ஓடிய போது வன காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோழிக்கோட்டில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
    • எல்லையோர கிராமங்கள், வனங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தையொட்டி கேரள மாநிலத்தின் வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதி உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நுழைந்த மாவோயிஸ்டுகள், அங்கிருந்த அரசு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடியதுடன், அங்கு சுவரொட்டிகளையும் ஓட்டி சென்றனர்.

    இதையடுத்து கேரள போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கம்பமலையில் இருந்து 1 அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்கி மலைக்கு மாவோயிஸ்டுகள் இடம் பெயர்ந்தனர். அவர்கள், அங்குள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் சென்று தாங்கள் வந்து சென்றது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூடாது என மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள 8 போலீஸ் நிலையங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து உளவுத்துறை கேரள அரசை தொடர்பு கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு எச்சரிக்கை செய்துள்ளது. இதனை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    மேலும் மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளிலும் கேரள அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிகின்றனரா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கேரள எல்லையையொட்டி உள்ள நீலகிரி மாவட்ட த்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரள அதிரடிப்படை போலீசார் தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதிகளில், தமிழக போலீசார் உதவியுடன் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    எல்லையோர கிராமங்கள், வனங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். புதிதாக யாரேனும், கிராமப்பகுதிகளில் நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வனப்பகுதி மற்றும் வனத்தையொட்டி இருக்க கூடிய கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது.
    • சுக்மா மாவட்டம் இட்டாபுரம் என்ற ஊரில் கட்டிட வேலை நடந்து வரும் பகுதியில் 2 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சரண் அடைந்து தாங்கள் திருந்தி வாழபோவதாக தெரிவித்தனர். மற்ற மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சுக்மா மாவட்டம் இட்டாபுரம் என்ற ஊரில் கட்டிட வேலை நடந்து வரும் பகுதியில் 2 டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த 2 லாரிகளுக்கும் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர். இதில் அந்த லாரிகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் நடத்திய என்கவுண்டரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ராஞ்சி:

    சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம் அதிகமாக இருக்கிறது. நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பாதுகாப்பு படை வீரர்களும், போலீசாரும் நடத்திய என்கவுண்டரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் 2 பேரது தலைக்கு தலா ரூ.25 லட்சமும், 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2 நாட்களாக ஒரு ஆணும், பெண்ணும் துப்பாக்கியுடன் கிராமத்திற்குள் வந்தனர்.
    • கிராமத்திற்குள் உணவு பொருள்களை கொள்ளை அடித்து சென்றது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அடிக்கடி புகுந்து தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம்.

    இதையடுத்து வயநாடு, கல்பேட்டா பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் அதிரடிபடை போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களில் உள்ள வீடுகளில் உணவு பொருள்கள் கொள்ளை அடித்து செல்லப்பட்டதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருள்களை கொள்ளை அடித்து செல்வது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து வயநாடு, கல்பேட்டா மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு அதிரடி படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சந்தேகப்படும் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடமும் இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 2 நாட்களாக ஒரு ஆணும், பெண்ணும் துப்பாக்கியுடன் கிராமத்திற்குள் வந்தனர். அவர்கள் உணவு பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை நோட்டமிட்டப்படி சென்றனர்.

    ஜோடியாக ஊருக்குள் சுற்றி வந்தனர் எனவும் மலைகிராம பெண்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளங்களை கொண்டு கிராமத்திற்குள் உணவு பொருள்களை கொள்ளை அடித்து சென்றது மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

    • மாவோயிஸ்டுகள் அல்லூரி சீதா ராம ராஜூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் முன்னிலையில் படேரு பகுதியில் சரண் அடைந்தனர்.
    • பெண் மாவோயிஸ்டு சிலோ இந்து என்கிற கெம்மேலி பாரதி என்பவரும் சரண் அடைந்தார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 35 பேர் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் அல்லூரி சீதா ராம ராஜூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் முன்னிலையில் படேரு பகுதியில் சரண் அடைந்தனர்.

    இவர்களில் பெண் மாவோயிஸ்டு சிலோ இந்து என்கிற கெம்மேலி பாரதி என்பவரும் அடங்குவார். இவர் கொலை, துப்பாக்கி சூடு, போலீசாரை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர். இவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை சரண் அடைந்துள்ளனர்.

    மாவோயிஸ்டு அமைப்பின் உயர் தலைவர் பிரசாந்த் போஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
    மேதினிநகர்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ரெயில் தண்டவாளங்களை குண்டு வைத்து தகர்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு சிங்பம் மாவட்டத்தில் சோனுவா, லோதபகர் ரெயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று இரவு தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இதேபோல் லதேகர் மாவட்டம் ரிச்சுகுடா-தேமு ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் நள்ளிரவில் தண்டவாளத்தை தகர்த்துள்ளனர்.  

    இந்த தாக்குதல் காரணமாக அந்த வழித்தடங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. 

    தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அப்பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    மாவோயிஸ்டு அமைப்பின் உயர் தலைவர் பிரசாந்த் போஸ் என்ற கிஷன் தா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவோயிஸ்டு அமைப்பு நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்திஸ்கர், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடந்த 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களின் மூளையாக போஸ் செயல்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஆத்திரம் தணியாத மாவோயிஸ்டுகள், 4 பேரின் உடல்களையும் மாட்டு கொட்டகையில் தொங்கவிட்டுள்ளனர்.
    கயா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டம், துமரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்து, சரயு சிங் போக்தா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்துள்ளனர்.  அப்போதும்,  ஆத்திரம் தணியாத மாவோயிஸ்டுகள், 4 பேரின் உடல்களையும் மாட்டு கொட்டகையில் தொங்கவிட்டுள்ளனர். வீட்டை வெடிவைத்து தகர்த்து தரைமட்டமாக்கி உள்ளனர். தாக்குதல் நடந்தபோது சரயு சிங் போக்தா வீட்டில் இல்லாததால் உயிர்தப்பினார்.

    மாவோயிஸ்டுகள் ஒரு துண்டு பிரசுரத்தை அந்த வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அதில், சரயு சிங் போக்தாவும் அவரது குடும்பத்தினரும் போலீஸ் இன்பார்மர்கள் என்று கூறியிருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, மார்ச் மாதம் நடந்த என்கவுண்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    மார்டின்டோலா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஆண்ககள் 20 பேர், பெண்கள் 6 பேர் என 26 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது, கோர்சி பகுதியில் தேடுதல் வேட்டையின்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

    நேற்று என்கவுண்டர் நடந்த கட்சிரோலி மாவட்டமானது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்கவுண்டர் குறித்து மகாராஷ்டி உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் பாட்டீல், ‘‘என்கவுண்டரில் நக்சலைட் தலைவன் மிலிந்த் தெல்தும்டே சுட்டு வீழ்த்தப்பட்டார். இவன் தலைக்கு 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டவன்.

    மொத்தம் 26 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    26 மாவோயிஸ்டுகளில் 20 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். இதில் தலைக்கு 16 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட மகேஷ் சிவாஜி என்பவரும் அடங்குவார். தலைக்கு 6 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நான்கு பேர் அடங்குவர்’’ என்றார்.
    ×