search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வனத்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு
    X

    வனத்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு

    • கேரள மாநில வனப்பகுதிகளில் வனத்துைறயினர் மற்றும் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.
    • மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இருக்கும் வனத்துறை அலுவலகம் மீது கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கேரள மாநில வனப்பகுதிகளில் வனத்துைறயினர் மற்றும் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

    இந்நிலையில் கண்ணூர் ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து தப்பி வந்தனர். மாவோயிஸ்டுகள் தாக்குதலில் இருந்து தப்ப ஓடிய போது வன காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×