என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத் பூஜை- பொங்கி வழியும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் யமுனையில் நீராடிய மக்கள்
Byமாலை மலர்8 Nov 2021 4:06 AM GMT (Updated: 8 Nov 2021 6:40 AM GMT)
சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விழாவான சாத் பூஜையை பெரும்பாலும் பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே கொண்டாடுகின்றனர்.
புதுடெல்லி:
வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டின் சாத் பூஜை இன்று தொடங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி டெல்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கலிந்தி கஞ்ச் அருகே யமுனா நதியில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். யமுனையில் ரசாயனம் கலந்த நுரை பொங்கி வருவதையும் பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
சாத் பூஜையை பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். தற்போது நாட்டின் பிற பகுதிகளிலும் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறியிருப்பதால் அந்தந்த மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடுகின்றனர்.
இதையும் படியுங்கள்... மரங்களை வெட்டுவதற்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து - கேரள அரசு நடவடிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X