search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cancellation"

    • தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மற்றும் தேரோட்டம் நடைபெறும்.

    இந்த ஆண்டு, வரும் பிப்ரவரி 5-ந் தேதி, தைப்பூச விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டப்படுகிறது. மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில், ரூ.40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் திருப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, முன் கோபுரம் வர்ணம் பூசுதல், தேருக்கான பழைய மரக் கட்டைகள் அகற்றி, புதிய மரக்கட்டைகள் பொருத்தப்படுகிறது. கோவில் பகுதியில் மேல்தளம் அமைத்தல், பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட் அகற்றி, பூ வேலைப்பாடுகள் அமைத்தல், கதவு, ஜன்னல் அமைத்தல், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு, தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, தைப்பூசக் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது. வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வருகிற பிப்ரவரி 5-ந் தேதி, தைப் பூசத்தன்று, பால் குடம், தீர்த்தக்குடம், அபிசேகம் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெறும். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம்-உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் ரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டம் நடந்தது.
    • கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து அந்த கல்வி மாவட்டங்களை மீண்டும் செயல்பட வைக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    சாமானிய மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு புதிய 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கினார். இதில் திருமங்கலமும் ஒன்று.

    இந்த புதிய கல்வி மாவட்டங்கள் உருவான தன் மூலம் மாணவ, மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் பயடைந்து வந்தனர்.

    இது போன்ற கல்வி மாவட்டங்களை உருவாக்கியதின் மூலம் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகமானது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 80 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    தற்போது தமிழக அரசின் சார்பில் 151 அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயலாகும். இது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

    எடப்பாடி பழனிசாமி 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கி சீர்திருத்த புரட்சி செய்த கல்வி மாவட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. யாரிடமும் கருத்து கேட்காமல் சர்வாதிகார போக்குடன் அரசு இந்த முடிைவ எடுத்துள்ளது.

    மீண்டும் ரத்து செய்யப்பட்ட கல்வி மாவட்டங்களை செயல்பட வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். எஸ். சரவணன், வெற்றிவேல் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.
    • இதையொட்டி 2 நாட்கள் முழுைமயாக ரத்து செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சேலம் ரெயில் நிலையத்தில் நாளை (20-ந்தேதி), நாளை மறுநாள் (21-ந்தேதி) ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி சேலம்- கரூர், கரூர்-சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் முழுைமயாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதன் காரணமாக கோவை- சேலம் ரெயில் (வண்டி எண். 06802) , கோவையில் இருந்து புறப்பட்டு, ஈரோடு வரை இன்று முதல் 21-ந்தேதி வரை பகுதியாக மட்டும் இயக்கப்படுகிறது. ஈரோடு- சேலம் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    அதுபோல் சேலம்- கோவை ரெயில் (வண்டி எண். 06803) ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை சென்றடையும். சேலம்- ஈேராடு இடையே இயக்கப்படாது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
    • அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

    சரக்கு வாகனங்கள்

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.

    • மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கொரோனா தொற்று சூழ்நிலையில் இருந்து, இயல்பு நிலைமைக்கு மக்கள் இன்னும் மாறவில்லை, ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. தற்போது தி.மு.க. அரசு ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ.1.25 வரைஉயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது, சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

    சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் 2018-ம் ஆண்டில் ரூ.7,450 ஆக இருந்தது, தற்போது அந்த கட்டணம் ரூ. 54 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது இது 625 சதவீதமாக உள்ளது. அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, கூடுதல் மின் இணைப்பு பெற்றால் முதல் 100 யூனிட்டுக்கும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த புதிய மின் கட்டண உயர்வின் படி 2 மாதங்கள் சேர்த்து வீடுகளில் 401 முதல் 500 வரை யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,130 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் ரூ.1,725 கட்டணம் செலுத்த வேண்டும். இது 52.60சதவீதம் அதிகமாகும், மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும். மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொது மக்களிடம் தமிழக அரசு சார்பில் கருத்து கேட்பு நடந்தது. மதுரை, கோவை, சென்னையில் நடந்த கூட்டங்களில் ஒரு நபர் கூட மின் கட்டண உயர்வை ஆதரித்து பேசவில்லை.எத்தனை மாவட்டங்களில் நடந்தாலும் யாரும் மின் கட்டண உயர்வை ஆதரித்து பேச மாட்டார்கள். முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் கள நிலவரங்களை உள்வாங்கி கொண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.

    ஈரோடு:

    எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்ப பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கமல்ஹாசன் கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார்.

    கரூர் சின்னதாராபுரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு அவர் வாக்கு சேகரித்தார். இரண்டாவது நாளாக இன்றும் அவர் அரவக்குறிச்சி நகர், தளவாபாளையம், புஞ்சை புகளூர் பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அத்துடன் இரவில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங்கூடலூர், குரும்பப்பட்டி மந்தை, இனங்கனூர், வேலம்பாடி, குப்பம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாம் கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதேபோல் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் இன்று இரண்டாவது நாளாக அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அவர் இரவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேச உள்ளார்.

    எனவே வேலாயுதம்பாளையம் கிராமத்தில் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் இன்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது இரண்டாவது நாள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். அவர் கார் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

    அதற்கு பதிலாக வருகிற 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்ய உள்ளார். அன்றைய தினம் வேலாயுதம்பாளையம் கிராமத்தில் மாலையில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார்.

    ஏற்கனவே நேற்று பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தீவிரவாதம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அவரது பேச்சை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் வன்மையாக கண்டித்துள்ளனர்.

    இதற்கிடையே அரவக்குறிச்சி தொகுதியில் கமல் ஹாசன் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டு இருப்பதாக வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் தெரிவித்தார்.
    சிவகாசி:

    மத்திய அரசின் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் சிவகாசியில் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் 694 பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுஉள்ளது. இந்த கடையின் உரிமையாளர்கள் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுசெயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுஉள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக பட்டாசு கடைகளில் சிறப்பு சோதனை நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது 110 பட்டாசு கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் 18 பட்டாசு கடைகள் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. பட்டாசு கிப்ட் பாக்சுகளில் கேப் வெடி மற்றும் கலர் மத்தாப்பூ பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் இது போன்ற வெடிகளை கிப்ட் பாக்சுகளில் வைக்க வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை தடை விதித்துள்ளது.

    இதை தொடர்ந்து அந்த பட்டாசு கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமத்தை ரத்து செய்துள்ளோம். அதே போல் தயாரிப்பு முகவரி இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என விதி உள்ளது.

    ஆனால் சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தயாரித்தவர்களின் முகவரி இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடைகளின் உரிமங்களையும் ரத்து செய்துள்ளோம். மொத்தத்தில் இந்த ஆய்வில் விதிகளை மீறியதாக 18 பட்டாசு கடைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததற்கு தடை விதித்த கீழ் கோர்ட்டு உத்தரவை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. #MaduraiHighCourt #Nithyananda
    மதுரை:

    மதுரை ஆதீன மடம் 2,500 ஆண்டுகள் பழமையானது. இந்த மடத்தின் 292-வது மடாதிபதியாக கடந்த 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த மனுக்களை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அதே கோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ‘என்னை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடருவது குறித்து முறைப்படி அறநிலையத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர்கள் அறநிலைய துறையினரிடம் அனுமதி பெறவில்லை. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தார். ஆனால் நித்யானந்தாவின் மனுவை கடந்த 2014-ம் ஆண்டு மதுரை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்த தீர்ப்பு வருமாறு:-

    மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு அறநிலையத்துறை சட்டப்படி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் கீழ்கோர்ட்டில் நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் முறையாக அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. அதன்படி நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 
    பெரம்பலூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை வணிகம் செய்தால் உரிமமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை ஆகிய போதை பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்தல், வாகனங்களில் கொண்டு செல்லுதல், வினியோகம் மற்றும் சில்லறை விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை வணிகம் செய்யும் வியாபாரிகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். இதன்மூலம் உணவு வணிகர்கள் தமது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் போகும். செல்போன் கடைகள் மற்றும் சில இடங்களில் சில நபர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் எந்த குடியிருப்பு பகுதியிலாவது தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வீடு மூடி சீல் வைக்கப்படும்.

    மேலும், வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குட்கா, நிக்கோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை விற்கப்பட்டாலும், உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பான புகார் அளிப்பதற்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் கொடுக்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருப்பூர் கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 20162 உணவு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 19004 நபர்கள் உரிமம்- பதிவு பெற்றுள்ளனர். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்ற பின்பே உணவுத் தொழில் புரிய வேண்டும். அவ்வாறு உரிமம், பதிவு பெறாதவர்கள் மீது பிரிவு 63, 55-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    உணவு பாதுகாப்பு துறையில், உணவின் தரம், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, கலப்பட டீத்தூள், போலி குடிநீர் நிறுவனங்கள், கலப்படம் மற்றும் போலி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள்

    ஆகியவை குறித்து 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். அதன்மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக புகையிலைப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக குஷ்பு, வடிவேலு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #Khushboo #Vadivelu
    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியிலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளில் நடந்து வந்தன.

    இதேபோல நத்தம் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

    தங்கள் மீது வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குஷ்பு, வடிவேலு ஆகிய இருவர் சார்பிலும் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். #Khushboo #Vadivelu
    ×