search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus station"

    • ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஸ்கள் நின்று செல்லும் வகையில் ரெயில் நிலையம் அருகே பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படு கின்றன. போதிய பராம ரிப்பின்றி பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.

    இந்த நிலையில் ரூ.20 கோடியில் பஸ் நிலையத்தை சீரமைத்து சந்தை திடல் வரை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு தற்காலிகமாக பயணிகள் வசதிக்காக பழைய பஸ் நிலையம், மூலக்கொத்தளம் பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலையத்தில் புதிதாக தரைத்தளம் அமைத்தல், கழிவறை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறை வடைந்து செயல்பட தொடங்கியதும் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் அகற்றப்பட்டு விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் பட்டா கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அதன் தகவலின் பேரில், பரமத்திவேலுார் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, மதுபோதையில் பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையைச் சேர்ந்த முத்து (வயது 32) என்பதும், தற்போது சமையல் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இவர் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றதாக கூறியுள்ளார்.

    மேலும் அந்த பெண்ணை, சில நாட்களாக முத்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்காததால், அந்த பெண்ணை பார்ப்பதற்காக நேற்று பரமத்திவேலூருக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய பட்டா கத்தி மற்றும் ஒரு சிறிய கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முத்துவை கைது செய்த போலீசார், எதற்காக அவர் பட்டாக் கத்தியுடன் பரமத்திவேலூர் வந்தார்? தொடர்ந்து போன் செய்தும், அந்த பெண் போனை எடுக்காததால் அவரை கொலை செய்ய கத்தியுடன் வந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்த்து கைது செய்யப்பட்ட வாலிபரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு செயல்படும் உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

    பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், கட்டண கழிப்பறைகள், பயணிகள் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.

    • பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த சக பயணி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் திரும்பினார். பொள்ளாச்சி வந்த அவர் அங்கிருந்து திருப்பூருக்கு பேருந்தில் புறப்பட்டார். அவருடன் பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த சக பயணி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண் பேருந்து நடத்துனரிடம் புகார் தெரிவித்து சத்தமிட தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்கினர்.

    பின்னர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் வந்ததும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.

    இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.

    இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.

    பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.

    அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    • தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் நிலையத்தில் போதிய முன்னறிவிப்பின்றி பஸ்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்குவதிலும் குளறுபடி உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    புதியதாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்ற நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், பஸ்கள் நிற்பதை முறைப்படுத்தி வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத 23 கடைகளில் 11 கடைகள் மற்றும் உணவகம், கட்டண கழிப்பிடம் உள்ளிட்டவைகள் வைப்பு தொகையுடன் மாத வாடகைக்கு ஏலம் விடப்பட்டது.

    இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள், துப்புரவு ஆய்யாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்தளத்தில் உள்ள எண்.3 மற்றும் எண்.9 கடைகளுக்கு யாரும் வைப்பு தொகை கட்டவில்லை. இதனால் அந்த கடைகள் ஏலம் போகவில்லை. ஏலம்போகாத கடைகள் மறு ஏலத்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏலம் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • இளையான்குடி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • கட்டுமான நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 18 வார்டுகளில் தினசரி சேகரமாகும். 5.100மெட்ரிக் டன் குப்பைகளை பேரூ ராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள 2.5 ஏக்கர் பரப்ப ளவில் அமைந்துள்ள வளமீட்புப் பூங்காவில் சேகரிக்கப்படுகிறது.

    அதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய திடக்கழிவுகளை உரிய அகழ்வு முறையில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ரூ.44.27 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    அந்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குப்பைகளில் இருந்து பிரிக்கப்பட்ட பழைய திடக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், திடக்கழிவுகளில் இருந்து தரம் பிரிக்கப்பட்ட கண்ணாடி பொருட்கள், தோல் பொருட்கள் ஆகிய வைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி உரிய பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

    இளையான்குடி பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மேம்பாட்டு வளர்ச்சிகாகவும் இந்த பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் புதிய பஸ் நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்ட 22.3.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தொடர்பா கவும், கட்டுமான நிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்ப ட்டது. பஸ் நிலைய சுற்றுச்சுவரின் வெளி ப்புறமும் நெடுஞ்சாலை வரை பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியும் மேற்கொ ள்வதற்கு அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. வருகிற மே மாதம் இறுதி க்குள் இந்த கட்டுமானப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிக்கு கொண்டு வர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இளையான்குடி பேரூராட்சிப் பகுதிக்கென புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 ஏக்கர் இடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் கள ஆய்வுகளும் மேற்கொ ள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, இளநிலைப் பொறியாளர் சந்திரமோகன், இளை யான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. செயலாளர் தேனிஅக்கிம் கோரிக்கை விடுத்தனர்.
    • புதிய பஸ் நிலையத்தை நகரின் வெளியே அமைப்பது சாலச்சிறந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலா ளர் தேனிஅக்கிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக சட்ட சபையில்அறிவித்த அமைச்சர் கே.என். நேருவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராமநாதபுரம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.20 கோடியை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. ராமநாதபுரத்தில் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, அரசு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் உள்ளன.

    தனியார் நிறுவனங்கள் பல இந்த சாலையை ஆக்கிரமித்து புதிய கட்டிடங்கள் கட்டி வருகிறது. அதனை ஒழுங்குபடுத்தாத நகராட்சி நிர்வாகம் இப்போது இருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கி இருப்பது மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பது போன்றுள்ளது.

    ராமநாதபுரத்தில் எந்த முக்கிய சாலையிலும் ஆக்கி ரமிப்புகள் அகற்றப்ப டவில்லை. மேலும் சாலைகள் விரிவுபடுத் தப்படவில்லை. அவசரத்திற்கு நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சு வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    ஆக்கிரமிப்பால் பொது மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. போக்கு வரத்துக் காவல் துறைக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தினமும் பிரச்சினை மேல் பிரச்சினை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இப்போது இருக்கும் பஸ் நிலைய பகுதியில் விரிவாக்கம் என்ற நிலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க முற்பட்டால் நகரின் உள்ளே அதிகமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. அப்படி வாகனங்கள் வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்.

    மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள வார சந்தையை மட்டும் எடுத்துக் கொண்டால் போக்கு வரத்திற்கு உகந்த சாலை வசதிகள் செய்யப்படாமல் பெரிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் அது சில வருடங்களிலே உபயோக மற்றதாகிவிடும்.

    ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழைய பஸ் நிலையம் இப்போது எதற்கும் உபயோகப்படாமல் உள்ளது போல் புதிய பஸ் நிலையமும் மாறிவிடும். முதல்வர் இதனை கருத்தில் கொண்டு அவசர கதியில் செய்யாமல் இன்னும் காலம் எடுத்து மிகச்சிறந்த முறையில் பெரிய நகரை விட்டு வெளியே ஒருங்கிணைந்த பெரியளவில் பஸ் நிலையம் அமைக்க முடிவு எடுக்க வேண்டும்.

    இப்போதிருக்கும் புதிய பஸ் நிலையம் நகர போக்குவரத்துக்கு மட்டும் வந்து செல்லும் பஸ் நிலையமாக மாற்றப்பட வேண்டும். இதையே விரிவுபடுத்தி பஸ் நிலையம் அமைக்கும்போது வாகனங்களின் இப்போதைய நிலை சில ஆண்டுகளில் எந்த அளவுக்கு அதிகமாகும் என்பதனை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தை நகரின் வெளியே அமைப்பது சாலச்சிறந்தது.

    இதுகுறித்து முதல்வர் சிறந்த முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகி களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதையெல்லாம் தவிர்த்து இப்போது இருக்கும் புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் இது விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிடும்.

    மக்களின் வரிப்பணம் ரூ.20 கோடியை முறையான வழியில் செலவு செய்ய வேண்டும். வீண் விரயம் செய்ய கூடாது என்பதை நன்கறிந்த முதல்வர் இதனை உடனே தடுத்து நிறுத்தி செம்மைப்படுத்தி நகரத்துக்கு வெளியே பஸ் நிலையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    மானாமதுரை
     
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். 

    இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான   பணிகள் தொடங்க ப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டியும், அனைத்து  கட்சியினர், உள்ளூர் அனைத்து ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடந்தது. 

    இதில்  பங்கேற்ற பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா, செயலாளர் துருக்கி ரபீக்ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் கூடி அங்கிருந்து  கோஷங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். 

    அதன்பின்  பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டும், புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகவும், கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.  போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து   வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

    இதுகுறித்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் சைபுல்லா கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 4 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரத்து செய்யவும், இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். 

    விரைவில் தேதி அறிவிக்காமலேயே  சென்னையில்   தலை மை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பஸ் நிலைய பிரசனைக்கு தீர்வு கிடைக்கும்வரை   போராட்டம் தொடரும் என்றார்.
    இளையன்குடியில் புதிய பஸ் நிலையத்தை திட்டமிட்ட இடத்தில் அமைக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் புதிய பஸ்நிலையம் அமைக்க சிவகங்கை ரோட்டில் கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். நகருக்கு வெளியே அமைப்பதாக பஸ்நிலைய எதிர்ப்பு  குழுவினர் பஸ்நிலையம்  அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இந்த நிலையில் அரசு சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டது. புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் குழு கூட்டம் தி.மு.க. நகர செயலாளர் நஜீமுதின் தலைமையில் நடைபெற்றது. இதில் திட்டமிட்ட இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். 


    தற்போது உள்ள பஸ் நிலையமும் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும். தற்போது உள்ள பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக அமைக்க உள்ள பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ்களும் மகளிர் கட்டணம் இல்லாத பஸ்களும் அதிக அளவில் இயக்க வேண்டும் என புதிய பஸ்நிலைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்ய பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
    மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் எதிரே திறந்தவெளியில், குறுகிய இடத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், உடமைகள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் ஏதும் இல்லாமல் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    உலகப்பாரம்பரிய நகரமாக "யுனஸ்கோ" அங்கிகாரம், சிற்ப புவிசார் நகரம், சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடக்க இருக்கும் மாமல்லபுரத்தில் போதிய வசதி இல்லாமல் பஸ் நிலையம் இருந்து வருகிறது.

    மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது., பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் முயற்சி நடந்து அதுவும் நடைபெறவில்லை.

    பின்னர் கருகாத்தம்மன் கோயில் வடபுறம் அரசுக்கு சொந்தமான 6.80 ஏக்கர் நிலத்தில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட உறுதி செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு, தேர்தல், திட்ட மதிப்பீட்டில் குளறுபடி என அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் பூங்கா, தங்கும் அறை, டிஜிட்டல் வரைபட விளக்க போர்டு, சி.சி.டி.வி பாதுகாப்பு, அதை கண்காணிக்க காவல்துறை கட்டுப்பாட்டு அறை, தானியங்கி நடைமேடை, விசாலமான பார்க்கிங் போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான கள ஆய்வு மற்றும் புதிய வரைபட ஆலோசனை பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா, கலெக்டர் ராகுல்நாத், எம்.பி செல்வம், எம்.எல்.ஏ பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அடுத்த மாதம் முதற்கட்ட பணிகள் துவங்கி 15 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

    ×