search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்
    X

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்

    • ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஸ்கள் நின்று செல்லும் வகையில் ரெயில் நிலையம் அருகே பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படு கின்றன. போதிய பராம ரிப்பின்றி பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.

    இந்த நிலையில் ரூ.20 கோடியில் பஸ் நிலையத்தை சீரமைத்து சந்தை திடல் வரை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு தற்காலிகமாக பயணிகள் வசதிக்காக பழைய பஸ் நிலையம், மூலக்கொத்தளம் பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலையத்தில் புதிதாக தரைத்தளம் அமைத்தல், கழிவறை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறை வடைந்து செயல்பட தொடங்கியதும் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் அகற்றப்பட்டு விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×