என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு
- ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
- ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு செயல்படும் உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், கட்டண கழிப்பறைகள், பயணிகள் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்களிடம் கேட்ட பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டார்.
Next Story






