என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிலைய கடைகள் ஏலம்
- சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டது.
- செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலைய கடைகள் ஏலம் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத 23 கடைகளில் 11 கடைகள் மற்றும் உணவகம், கட்டண கழிப்பிடம் உள்ளிட்டவைகள் வைப்பு தொகையுடன் மாத வாடகைக்கு ஏலம் விடப்பட்டது.
இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கண்ணன், இளநிலை உதவியாளர் கண்ணம்மாள், துப்புரவு ஆய்யாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீழ்தளத்தில் உள்ள எண்.3 மற்றும் எண்.9 கடைகளுக்கு யாரும் வைப்பு தொகை கட்டவில்லை. இதனால் அந்த கடைகள் ஏலம் போகவில்லை. ஏலம்போகாத கடைகள் மறு ஏலத்தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏலம் விடப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story






