search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb Threat"

    • இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.
    • வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டம்.

    சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், திருமங்கலம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து 13 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    மேலும், வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

    மும்பை:

    மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

    இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. அவனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவன் எங்கிருந்து பேசினான் என்பது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம். பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

    • டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல்.
    • மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்த போலீசார்.

    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, போலீசார் மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்துள்ளனர்.

    • காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.

    ரிசர்வ் வங்கி, எச்.எடி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி. வங்கிகளுக்கு நேற்று (டிசம்பர் 26) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தாஸ், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மிரட்டல் தொடர்பாக குஜராத் மாநிலத்தை அடுத்த வதோதராவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஏமாற்று வேலை என்று தெரியவந்தது.

    • ரிசர்வ் வங்கி உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்:

    மும்பை:

    மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

    இதேபோல் மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்:

    • சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தகாக போலீசார் கூறினர்.
    • மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். உடனடியாக போலீஸ் ஏ.எம்.எஸ். வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, ராஜ்பவனுக்கு விரைந்து வந்து அப்பகுதி முழுவதும் சோதனையிட்டது.

    சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தகாக போலீசார் கூறினர். நள்ளிரவில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்ம நபர் புரளியை கிளப்பி பீதி அடைய செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதனால் ராஜ் பவனில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் நிம்மதி அடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் அழைப்பு வந்த எண்ணை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த மர்மநபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் கடந்த 1-ந்தேதி பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். கடைசியில் அதுபுரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெங்களூருவில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் வந்தது.
    • காலையில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். முன் எச்சரிக்கையாக பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேறி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த தகவல் பள்ளியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காட்டுத்தீப்போல் பரவியது. இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். மேலும் அங்கு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் விரைந்து சென்று அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என வகுப்பறைகள், கழிப்பிடம், சமையல் அறை, பள்ளி விடுதி மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.


    சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தது. காலையில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைத்தனர்.

    மின்னஞ்சல் அனுப்பி மர்ம நபர் புரளியைக் கிளப்பி இருப்பது தெரியவந்தது. இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.டி.யை கம்ப்யூட்டரில் இருந்து கைப்பற்றி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடம் ஒன்று எனது வீட்டிற்கு எதிரே உள்ளது, இதை ஆய்வுசெய்ய இங்கு வந்தேன். இது சில மர்ம நபர்களின் போலி அழைப்பு போல் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

    • மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும் என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.
    • மர்மநபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் விமான நிலையத்தின் டெர்மினல் 2-வை தகர்க்கப்போவதாகவும், வெடிப்பைத் தடுக்க 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் டாலர்களை பிட்காயினில் தரவேண்டும் என்றும் மர்மநபர் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.

    மேலும், "உங்கள் விமான நிலையத்திற்கு இது இறுதி எச்சரிக்கை. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிட்காயினுக்கு மாற்றப்படாவிட்டால், 48 மணி நேரத்தில் டெர்மினல் 2 ஐ வெடிக்கச் செய்வோம். மற்றொரு எச்சரிக்கை 24 மணிநேரத்திற்குப் பிறகு இருக்கும்" என மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் சஹார் காவல் நிலையத்தை அணுகி, மர்மநபர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 385 (பணம் பறிப்பதற்காக ஒரு நபருக்கு காயம் ஏற்படும் என்ற பயத்தில்) மற்றும் 505 (1) (பி) (அச்சம் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட அறிக்கைகள்) கீழ் எப்.ஐ.ஆர். (பொது அல்லது பொது அமைதிக்கு எதிராக) அடையாளம் தெரியாத நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, மஸ்கட் ஓமன் துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கும் அதே போன்று பெங்களூர் சென்னை புதுடெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் 34 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 2.32 மணிக்கு திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த மெசேஜை அனுப்பியிருந்தார். அதில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    ஆயினும் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இதை தொடர்ந்து வாட்சப் மெசேஜ் அனுப்பிய சங்கீதா வேலப்பனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • தபால் நிலையத்தில் கிடந்த பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பார்த்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவில் வடக்கு ரத வீதியில் மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. நேற்று காலை தலைமை தபால் நிலையம் என குறிப்பிட்டு வந்த கடிதத்தில் தலைமை தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை வெடித்து சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாவட்ட தபால் துறை அலுவலர் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தபால் நிலையத்தில் கிடந்த பார்சல்கள் அனைத்தையும் பரிசோதித்து பார்த்தனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து தலைமை தபால் நிலைய சீனியர் போஸ்ட் மாஸ்டர் செல்வராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது வடிவீஸ்வரம் தபால் நிலையத்திலிருந்து வந்ததாக அஞ்சல் முத்திரை பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வடிவீஸ்வரம் தபால் நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தநிலையில் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சுசீந்திரம் அருகே மருங்கூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்திய போது முதலில் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்பு அவர் தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய கடிதத்தை ஒப்புக்கொண்டார். அசோக்குமார் எதற்காக வெடிகுண்டு கடிதத்தை அனுப்பினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அசோக்குமார் கடந்த சில ஆண்டுகளாக தலைமை தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணி நிரந்தரம் செய்யவில்லை.

    இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக்குமார் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது.
    • வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், விமான எண். யுகே971, கேட் எண். 42ல் உள்ள விமானத்தில் மூன்று வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், அவை ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அழைப்பை உடனடியாக துண்டித்துள்ளார்.

    வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக மர்ம பொருள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில், கட்டாய பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
    • பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

    திருவனந்தபுரம்:

    விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கமான நிகழ்வு. சர்வதேச விமானங்களில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பாதுகாப்பு நடை முறைகள் அதிகநேரம் இருக்கும்.

    அதேபோன்று தான் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல இருந்த ஒரு விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு நடை முறைக்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களில் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த சாபு வர்க்கீஸ் (வயது55 ) என்பவரும் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தார்.

    அவர் திடீரென வரிசையில் நிற்கும் ஒரு பயணியின் பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். திடீரென்று அவர் கூறிய இந்த தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    பின்பு சாபு வர்க்கீஸ் சுட்டிக்காட்டிய பயணியின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பயணியின் பையில் வெடிகுண்டு இல்லை என்பதும், சாபு வர்க்கீஸ் கூறியது பொய் என்பதும் தெரியவந்தது.

    பாதுகாப்பு நடை முறையால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் எரிச்சல் அடைந்த சாபு வர்க்கீஸ், வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். சாபு வர்க்கீசை நெடும்பாசேரி போலீசார் கைது செய்தனர். பயணி வெடிகுண்டு புரளியை கிளப்பிய சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×