search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு ராஜ்பவன்"

    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூர்:

    பெங்களூர் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதைதொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் உடனடியாக ராஜ்பவனுக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதில் அந்த தொலைபேசி எண் கோலார் மாவட்டம் கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டாக இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தகாக போலீசார் கூறினர்.
    • மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். உடனடியாக போலீஸ் ஏ.எம்.எஸ். வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, ராஜ்பவனுக்கு விரைந்து வந்து அப்பகுதி முழுவதும் சோதனையிட்டது.

    சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தகாக போலீசார் கூறினர். நள்ளிரவில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்ம நபர் புரளியை கிளப்பி பீதி அடைய செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதனால் ராஜ் பவனில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் நிம்மதி அடைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் அழைப்பு வந்த எண்ணை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த மர்மநபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் கடந்த 1-ந்தேதி பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். கடைசியில் அதுபுரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×