search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்தி காந்ததாஸ்"

    • ரிசர்வ் வங்கி உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்:

    மும்பை:

    மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

    இதேபோல் மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.

    வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான முழு செயல் முறையும் இடையூறு இல்லாததாக இருக்கும்.
    • வட்டி விகித உயர்வை நிறுத்துவது என் கையில் இல்லை. அது கள நிலவரத்தை பொறுத்தது.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்ப பெறும் பணியை ரிசர்வ் வங்கி நேற்று தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் இந்த நோட்டை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான முழு செயல் முறையும் இடையூறு இல்லாததாக இருக்கும். ரிசர்வ் வங்கி நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.

    வட்டி விகித உயர்வை நிறுத்துவது என் கையில் இல்லை. அது கள நிலவரத்தை பொறுத்தது.

    இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.

    ×