search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashwin"

    • எனது பயிற்சியாளர்களில் அஸ்வினும் ஒருவர் என ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் கூறினார்.
    • அஸ்வினிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

    சிட்னி:

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தனியார் நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அஸ்வின் உலகத்தரம் வாய்ந்தவர். நிச்சயமாக அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு வகையில் அவர் எனது மிகப்பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.

    நான் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் அந்த 500 விக்கெட்களை எட்டுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என புகழாரம் தெரிவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 489 விக்கெட்களும், நாதன் லயன் 496 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்
    • ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு

    உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஸ்மித், 4. மார்னஸ் லபுசேன், 5. கேமரூன் கிரீன், 6. ஜோஷ் இங்க்லிஸ் (விக்கெட் கீப்பர்), 7. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 8. மேத்யூ ஷார்ட், 9. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 10. சீன் அப்போட், 11. ஆடம் ஜம்பா

    இந்திய அணி விவரம்:-

    1. சுப்மான் கில், 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 5. இஷான் கிஷன், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. ஷர்துல் தாக்குர், 10. பும்ரா, 11. முகமது ஷமி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் நட்சத்திர ஜோடியாக அஸ்வின்- ஜடேஜா ஜோடி திகழ்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் இருவரும் இணைந்து விளையாடியது கிடையாது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆறு வருடத்திற்கு முன் இருவரும் இணைந்து விளையாடினர். அதன்பின் தற்போது சேர்ந்து விளையாடுகிறார்கள்.

    • கிரிசிற்குள் நில்லுங்கள் நிம்மதியாக வாழுங்கள் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    • நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷதாப் கானை பரூக்கி மன்கட் செய்தார். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாபர் அசாம் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் ஆப்கான் சீனியர் வீரர் முகமது நபியுடன் நீண்ட வாதத்தில் ஈடுபட்டார். ஆப்கான் வீரர்களிடம் கைகுலுக்கவே மறுத்தார் ஷாஹின் ஷா அஃப்ரீடி.

    இந்தச் சம்பவம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை அரையிறுதியில் அல்லது ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் கோலி, ரோகித், ஸ்மித், ரூட் அல்லது எந்த ஒரு முக்கியமான பேட்டரையும் இப்படி மன்கட் முறையில் ரன் அவுட் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவுதான் நரகமே இடிந்து விழுந்தது போல் கூக்குரல்கள் எழும். இன்னும் பலரும் இதனை ஒரு அவுட் ஆக்கும் முறையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. எந்த பேட்டராக இருந்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் பவுலர் கையை சுத்துவதை நெருக்கமாக கவனித்து அதன் பிறகே கிரீசிலிருந்து கிளம்ப வேண்டும். இதைச்செய்யாமல் முன்னாடியே கிரீசை விட்டு வெளியேறி மன்கட் செய்யப்பட்டு அவுட் ஆனால் அந்த பவுலரை கரகோஷம் செய்து பாராட்டி பேட்டரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்றுதான் கூற வேண்டும்.

    பவுலர் ஆக்ஷனை பூர்த்தி செய்யவே இல்லை. அவர் இதனை 5-வது அல்லது 6வது ஓவரில் செய்ய வேண்டியதுதானே" என்ற வாதங்கள் நொண்டிச்சாக்குதான். பவுலர் கையைச் சுழற்றி பந்தை டெலிவரி செய்யத் தயாராகி விட்டு ரன்னர் முனை பேட்டரை ரன் அவுட் செய்ய முடியாது. ஏனெனில், விதிப்படி அது தவறு.

    இப்போது எல்லா அணிகளும் இதைச் செய்வதில்லை. ஆனால் உலகக்கோப்பை வருவதால் நிச்சயம் இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. சும்மா ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் பேசி நாங்கள் என்ன ஆனாலும் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வதெல்லாம் எதிரணியினருக்கு ஒரு சாளரத்தை திறந்து விடுவதில்தான் போய் முடியும். எந்த ஒரு அணியும் தங்கள் வழியில் வரும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகக்கோப்பையை வெல்வதென்பது வாழ்நாள் சாதனையல்லவா.

    சிலருக்கு வெற்றி பெறுவதுதான் அனைத்தும். மற்ற சிலருக்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். நாம் இரண்டு நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    கிரிசிற்குள் நில்லுங்கள்! நிம்மதியாக வாழுங்கள்!

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
    • இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.

    அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.

    • பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கேப்டனான பாண்ட்யா டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் பும்ராவுடன் இணைந்துள்ளார். பாண்ட்யா 89 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 95 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் 3-வது இடத்தை பாண்ட்யா பிடித்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழக வீரர் அஸ்வின் (72) உள்ளார். பும்ரா 70 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்
    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 75 டெஸ்ட் விக்கெட்

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 2-வது இன்னிங்சில் இதுவரை வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    கபில்தேவ் 89 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 712 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    • கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. சென்னையை சேர்ந்த 36 வயதான அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். நேற்றும் அஸ்வின் பந்து வீச்சில் அனல் பறந்தது. இதனால் 2-வது இன்னிங்சில் அவர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    உலகின் முதல் வரிசை பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த டெஸ்டில் 12 விக்கெட் (முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 7) கைப்பற்றினார்.

    அஸ்வின் 8-வது முறையாக டெஸ்டில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்தார். அவர் தனது 93-வது டெஸ்டில் இந்த சாதனையை தொட்டார். கும்ப்ளே 132 டெஸ்டில் விளையாடி 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார்.

    அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களில் கும்ப்ளேவுடன் இணைந்து அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    முரளிதரன் (இலங்கை) 22 முறையும், வார்னே (ஆஸ்திரேலியா) 10 தடவையும், ஹேட்லி (நியூசிலாந்து), ஹெராத் (இலங்கை) தலா 9 முறையும் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முறையே முதல் 4 இடங்களில் உள்ளனர்.

    அஸ்வின் ஒரு இன்னிங்சில் 34-வது தடவையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் ஹெராத்துடன் அவர் இணைந்தார்.

    முரளிதரன் 67 முறையும், வார்னே 37 தடவையும், ஹேட்லி 36 முறையும், கும்பளே 35 தடவையும் ஒருஇன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர். இந்த வரிசையில் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் அஸ்வின் 6-வது தடவையாக இரண்டு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தார். முரளிதரன் (11), ஹெராத் (8) ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் இருக்கிறார்.

    அஸ்வின் 2-வது இன்னிங்சில் 71 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசில் இந்திய வீரர்களின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இஷாந்த் சர்மா 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 131 ரன் கொடுத்து 12 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் இது 4-வது சிறந்த பந்து வீச்சாகும்.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது.

    இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜெய்ஸ்வாலுக்கு நல்ல திறமை இருக்கிறது, அவர் தயாராக இருக்கிறார் என்பதை கடந்த காலத்தில் நமக்குக் காட்டினார்.

    அவர் விவேகமாக பேட்டிங் செய்தார். போட்டியின் எந்த சமயத்திலும் அவர் அச்சம் அடையவில்லை. நாங்கள் நடத்திய அரட்டைகள் அவருக்கு, நீங்கள் இங்கு சொந்தமானவர் என்பதை நினைவூட்டுவதாக இருந்தது.

    பந்து வீச்சில் இது ஒரு சிறந்த முயற்சி. அவர்களை 150 ரன்களுக்கு வெளியேற்றுவது எங்களுக்கு சவாலாக அமைந்தது.

    பேட்டிங் கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரன்கள் எடுப்பது எளிதானது அல்ல. நாங்கள் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்ய விரும்பினோம். எனவே 400 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அதன்பின் வெளியேறி நன்றாக பந்து வீசினோம்.

    அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக அஸ்வின் பந்துவீசியது மிகவும் சிறப்பு என தெரிவித்தார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன், விராட் கோலி 76 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் சுழல் பந்துவீச்சில் அந்த அணி திணறியது.

    இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
    • கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 700 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின் ஆவார்.

    இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இத்தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

    டொமினிகா:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் இந்திய அணி அசத்தலாக பந்து வீசியது. குறிப்பாக, அஸ்வின், ஜடேஜா சுழலில் அந்த அணி சிக்கியது.

    அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    ×