என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Apollo Hospital"
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு சி.சி.டி.வி காட்சிகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் பதிலளிக்கவே, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது.
அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால்தான் நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இரவு 11.30 மணிக்கு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வலது கால் தொடையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடையில் இருந்த நீர்க்கட்டி அகற்றப்பட்டதாகவும், பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. அதன்படி இன்று பிற்பகல் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி ஸ்டாலினுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் வழக்கமான கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #MKStalin #ApolloHospital
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.
டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. #JayadeathProbe #ApolloHospital
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 28-ந்தேதி பதவி ஏற்றார்.
அதற்கு பிறகு அவர் அதிக அளவில் வெளி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படும் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் இரவு 11.30 மணிக்கு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது வலது கால் தொடையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் தொடையில் இருந்த நீர்க்கட்டி அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நிலை நன்றாக உள்ளது. இன்று பிற்பகல் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டாலின் நலமாக உள்ளார் என்று வைகோவும், தி.மு.க. மூத்த தலைவர்களும் நிருபர்களிடம் தெரிவித்தனர். இன்று பிற்பகலில் வீடு திரும்பும் மு.க.ஸ்டாலின் ஓரிரு நாட்கள் மட்டும் வீட்டில் ஓய்வு எடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எந்த பிரச்சினையும்இல்லை.
கட்சிப் பணிக்காக அவர் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டதால் கடந்த 2 மாதமாக அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்லவில்லை. இதனால் அவர் காலில் நீர்க்கட்டி ஏற்பட்டு விட்டது.
தற்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சையளித்து முடித்து விட்டனர். ஒன்று அல்லது 2 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் டி.ஆர்.பாலு கூறினார்.
ஓரிரு நாட்கள் கழித்து மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். #DMK #MKStalin #ApolloHospital
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவிய தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலைக்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் காரணம். தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலங்கையில் மிகப்பெரிய போர் நடக்கும் சூழல் உருவாகி இருந்தது.
அப்போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்குமாறு ஜெயலலிதா பல முறை வலியுறுத்தினார். ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது ஜெயலலிதா சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அதற்கும் பயனில்லை.
அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இலங்கையில் போர் மும்முரமாகி விட்டது. அதனை மறைக்க மனித சங்கிலி போராட்டத்தை கருணாநிதி அறிவித்தார். மேலும் அரைமணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தி விட்டு இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டதாக கருணாநிதி கூறினார்.
இலங்கையில் நடந்த இந்த இனப்படுகொலைக்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் காரணம் என்று ஜெயலலிதா பல முறை குற்றம்சாட்டியுள்ளார். அப்போது பேசிய வைகோ தான் உயிரோடு இருக்கும் வரை மீண்டும் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ முதல்வராக வர விடமாட்டேன் என்றார். ஆனால் தற்போது மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆக்கியே தீருவேன் என்று கூறுகிறார். மக்கள் மன்றத்தில் வைகோ தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டு வருகிறார். அவர் அப்போதும் பேசியதை மறந்து விடுவார். வேறு எதையாவது பேசி மாட்டிக் கொள்வார். நல்ல அரசியல்வாதியாக இருந்த அவர் தற்போது கெட்டுப்போய் விட்டார்.
இலங்கை தமிழர்களுக்கு இத்தனை பெரிய துரோகத்தைச் செய்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. எப்போதும் மக்கள் மன்றத்தை சந்திக்கவும் முடியாது. இனப்படுகொலையில் ஆயுதங்கள் கொடுத்து உதவிய தி.மு.க. - காங்கிரசை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
காங்கிரசையும், தி.மு.க.வையும் ராஜபக்சேயுடன் சேர்த்து போர் குற்றவாளி கூண்டில் ஏற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வெளிநாடு கொண்டு செல்ல வேண்டும் என்று அங்கிருந்த டாக்டர்களிடம் வலியுறுத்தினோம். ஆனால் அதனை யாரும் கேட்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் மக்கள் எங்களை ரோட்டில் நடமாட விடமாட்டார்கள். எனவே நாங்கள் ஜெயலலிதாவை அமெரிக்கா கொண்டு செல்கிறோம் என்று அப்பல்லோ நிர்வாகத்திடம் கெஞ்சினோம். அதற்கு அங்கிருந்த டாக்டர்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறி வெளிநாடு கொண்டு செல்வதை தடுத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுவரை ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் குற்றம்சாட்டி வந்த ஓ.பன்னீர்செலவம் முதல் முறையாக அப்பல்லோ நிர்வாகம் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Jayalalithaa #ApolloHospital #OPanneerSelvam
தமிழக சட்டத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் சி.வி.சண்முகம் (வயது 45). இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும்போது, ‘சி.வி.சண்முகத்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றனர். #CVShanmugam #ApolloHospital
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய விசாரணை கமிஷனின் காலம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சாட்சியம் அளித்தும் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது திடீரென்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கு மாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மேலும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார்.
அதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் கடந்த 11-ந்தேதி சுருக்கமான பதில் அனுப்பப்பட்டது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி. டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:-
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி வக்கீல் மைமூனா பாஷா கூறுகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சி.சி. டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது. அதற்கு உரிய விளக்கம் அளித்து இருக்கிறோம். அதில் தங்களால் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சி.சி. டி.வி. பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சர்வரில் சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்றார்.
இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. பதிவு சர்வரை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும் முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியிருந்தது. இது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிலையில் வருகிற 25-ந்தேதி அவர் மீண்டும் ஆஜராகிறார்.
அப்போது அவரிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் (அக்டோபர்) அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #Apollohospital #Jayalalithadeath
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும், பல உறுப்புகளில் பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, அவர் நினைக்கையில் வீடு திரும்புவார் என கூறியது ஏன் என்றும், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வெளியிட்ட அறிக்கைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இதுவரை 100-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தி இருக்கிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஆஜராகாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சம்மனில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டாக்டர்கள் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.
நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஜெயலலிதா சிகிச்சை பற்றி வாக்குமூலம் அளித்தார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார். #JayaDeathProbe #ApolloHospital
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், சில மருத்துவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் கட்டணம் பெற்றுக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இன்னும் 6 பேர் ஆஜராக வேண்டும் எனவும், அவர்கள் ஆஜராகவில்லை என்றால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் எச்சரித்துள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
விழுப்புரத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். சென்னை திரும்பிய பிறகு இன்று காலை மீண்டும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. #Thirumavalavan #ApolloHospital
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்