search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa dead inquiry"

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகராவ் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள், அரசு செயலாளர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி உள்ளனர்.

    இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் 3 முறை ஆஜராகி இருந்தார்.

    இப்போது அவரிடம் மேலும் சில விவரங்களை கேட்பதற்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் ராமமோகனராவ் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #RamaMohanaRao
    ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.#JayadeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.

    டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. #JayadeathProbe #ApolloHospital

    சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #Deepa #Madhavan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இருவரும் வருகிற 4-ந்தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    இதேபோல டாக்டர்களிடம் 4,5 மற்றும் 6-ந்தேதிகளில் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

    முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் எஸ்.ஜார்ஜிடம் சசிகலா தரப்பு வக்கீல் வருகிற 6-ந்தேதி குறுக்கு விசாரணை செய்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகள் ராஜமாதங்கி, அவரது கணவர் பி.எஸ்.ஜெ.விக்ரம் ஆகியோரிடம் 6-ந்தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. #JayaDeathProbe #Deepa #Madhavan
    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவனை நர்ஸ் விஜயலட்சுமி ஆஜரானார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த ஆணையத்தில் போலீஸ் அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் மற்றும் போயஸ் கார்டனில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்ஸ் விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #Apollohospital
    ×