என் மலர்

    நீங்கள் தேடியது "Deepa"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது காதலன் சிராஜூதீனிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    'வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்த 29 வயதான நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா, தான் வசித்து வந்த சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நடிகை பவுலின் ஜெசிகா, சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பவரை காதலித்து வந்ததும், தற்கொலைக்கு முன்பாக கடைசியாக சிராஜூதீனுடன் தான் அவர் பேசியதும் தெரிந்தது. சிராஜூதீனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர், காரைக்குடியில் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்படிப்பில் கலந்து கொண்டு இருந்ததால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

     

    இந்நிலையில் நேற்று சிராஜூதீன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான், நடிகை பவுலின் ஜெசிகாவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை காதலித்து வந்தார். அவருக்கு நான் ஒரு நல்ல நண்பராக இருந்து வந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததால் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தேன்.

     

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    அது சம்பந்தமாக என்னிடம் அடிக்கடி பேசி வந்தார். நான் வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி எனது நண்பரிடம் நான் சொல்லவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக என்னிடம்தான் பவுலின் ஜெசிகா பேசினார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

     

    இதையடுத்து போலீசார், நடிகை பவுலின் ஜெசிகாவுக்கு உண்மையாகவே தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததா?. இதற்காக அவர் சிகிச்சை பெற்றது உண்மையா? என்பதை கண்டறிய அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நடிகையின் செல்போன் முடிவுகள் வந்த பிறகு பவுலின் ஜெசிகா தற்கொலையில் இறுதி முடிவு எட்டப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.

    சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.


    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர்.


    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னை, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை தீபாவின் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி அலைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட விவரங்களை வைத்து காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தீபாவின் ஐ போனை காணவில்லை என்று நடிகையின் சகோதரர் ராஜூ ஏற்கனவே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபாவின் சகோதரரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.

    சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

     

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.

     

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

     

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    தீபா (எ) பவுலின் ஜெசிகா

    இந்நிலையில் நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜாராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெசிகாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை கைப்பற்றி இருக்கும் போலீசார், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டுள்ளனர்.

    தீபா

    தீபா

     

    "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று ஜெசிகா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஜெசிகா, ஒருதலை காதலால் உயிரை விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நடிகையின் இந்த ஒருதலை காதலின் பின்னணி பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நடிகை ஜெசிகாவை ஒருதலையாக காதலில் விழ வைத்த வாலிபர் சினிமா துறையைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தீபா

    தீபா

     

     

    நடிகை எழுதிய கடிதத்தில் தான் காதலித்த வாலிபர் யார்? என்பதை குறிப்பிடவில்லை. இதனால் அவர் யார்? என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாததால், நடிகை ஜெசிகாவின் செல்போன் எண்ணை வைத்து அவரது காதலன் யார்? என்பதை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவரது செல்போனை முழு மையாக ஆய்வு செய்து வருகிறார்கள். தற்கொலை தொடர்பாக செல்போனில் ஏதேனும் பதிவுகளை ஜெசிகா வைத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தீபா

    தீபா

     

    நடிகையின் காதலனை அடையாளம் கண்டு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதால், இந்த விசாரணைக்கு பிறகே நடிகை தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவரும். இதற்கிடையே நேற்று காலையில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நடிகை ஜெசிகா வண்ணாரப் பேட்டையை சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, சாகப்போகிறேன் என்று கூறிவிட்டு துண்டித்துள்ளார்.

    தீபா

    தீபா

     

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் அருகில் உள்ள சக நண்பர்களுடன் அங்கு சென்று பார்ப்பதற்குள் ஜெசிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெசிகாவின் மறைவிற்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்தவர் தீபா.
    • சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 29. இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

     

    தீபா

    தீபா

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-


    மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது.  அ.தி.மு.க. எதிர்கால நலன் மற்றும் வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது.

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.  
    அ.தி.மு.க நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.  அ.தி.மு.க. தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தேர்தலுக்கு பிறகு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.   #ADMK #MGRAmmaDeepaPeravai #LSPolls #Deepa
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறி உள்ளார். #Sarkar #JDeepa #Jayalalithaa
    சென்னை:

    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் வில்லி வேடத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். அவருக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்து இருந்தனர்.

    இதற்கு அ.தி.மு.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோமளவள்ளி என்பது முன்னாள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். எனவே அதை நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    சில அமைச்சர்களும் இதே கருத்தை தெரிவித்தனர். அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்துக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.



    இதுபற்றி கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி அல்ல. இதுபற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘ஏன் எனது பெயர் கோமளவள்ளி என்று சொல்லி பிரச்சினை ஆக்குகிறார்கள்?

    எனது உண்மையான பெயர் அது அல்ல. இந்த பெயர் கொண்ட வேடத்திலும் நடிக்கவில்லை’’ என்று தெரிவித்தார் என்று சமீபத்தில் கூறினார்.

    இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவின் உண்மையாக பெயர் கோமளவள்ளி அல்ல என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள்.

    இவ்வாறு தீபா கூறியுள்ளார்.

    ஜெயலலிதாவின் தாயார் இயற்பெயர் வேதவல்லி. அவர் சந்தியா என்ற பெயரில் சினிமாவில் நடித்தார். #Sarkar #JDeepa #Jayalalithaa
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபாவிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். #JayaDeathProbe #Deepa
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதுபற்றி அறிந்தவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். சசிகலா தரப்பு வக்கீல் அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அருகில் இருந்து கவனித்து கொண்ட செவிலியர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

    இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டியவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து அவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணனும் இன்று ஆஜர் ஆனார். அவரிடமும் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் ஜோசப்பும் ஆஜரானார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #JayaDeathProbe #Deepa
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #Deepa #Madhavan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இருவரும் வருகிற 4-ந்தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    இதேபோல டாக்டர்களிடம் 4,5 மற்றும் 6-ந்தேதிகளில் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

    முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் எஸ்.ஜார்ஜிடம் சசிகலா தரப்பு வக்கீல் வருகிற 6-ந்தேதி குறுக்கு விசாரணை செய்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகள் ராஜமாதங்கி, அவரது கணவர் பி.எஸ்.ஜெ.விக்ரம் ஆகியோரிடம் 6-ந்தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. #JayaDeathProbe #Deepa #Madhavan
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Jayalalithaa #Deepa #deepak
    சென்னை:

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதை அடுத்து தானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் அறிவிப்பு வெளியிட்டார். மூத்த இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்தார்.

    இவர்களில் விஜய்யும் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். மூன்று பேர் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர்.

    ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


    ‘ஜெயலலிதா அத்தையின் வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து என்னிடமும் என் சகோதரி தீபாவிடமும் அனுமதி பெற வேண்டும். சசிகலாவிடமும் அனுமதி பெற வேண்டும். இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அத்தையின் வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா கூறியதாவது:-

    “ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். இதுவரை எந்த இயக்குனரும் என்னிடம் அனுமதி வாங்கவில்லை. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டுமானால் அவரின் வாரிசுகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    அதுபோல ஜெயலலிதாவின் வாரிசுகளான என்னிடம் அல்லது என் சகோதரன் தீபக்கிடம் அனுமதி வாங்க வேண்டும். ஜெயலலிதா பற்றி எங்களிடம் பேசவேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் உண்மையான வாழ்க்கை வரலாறு கிடைக்கும். எங்களிடம் பேசினால் மட்டுமே அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

    ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றிய வெளியில் தெரியாத தகவல்கள் வேண்டுமானால், குடும்ப உறுப்பினர்களிடம் பேசினால் மட்டுமே சாத்தியம். ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்பட மாக எடுப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டேன்.

    ஏனென்றால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் எந்தவொரு முடிவும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சியே நடந்திருக்கிறது.

    இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றிய வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த அளவுக்கு, அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவரும்? அதனால், இந்த நேரத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றிய சினிமா எடுப்பதற்கு நான் அனுமதி தரமாட்டேன்”

    இவ்வாறு தீபாகூறினார். #Jayalalithaa #Deepa #deepak
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo