search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை தீபா தற்கொலை வழக்கில் காதலனிடன் 3 மணி நேரம் விசாரணை
    X

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    நடிகை தீபா தற்கொலை வழக்கில் காதலனிடன் 3 மணி நேரம் விசாரணை

    • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது காதலன் சிராஜூதீனிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    'வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்த 29 வயதான நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா, தான் வசித்து வந்த சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நடிகை பவுலின் ஜெசிகா, சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பவரை காதலித்து வந்ததும், தற்கொலைக்கு முன்பாக கடைசியாக சிராஜூதீனுடன் தான் அவர் பேசியதும் தெரிந்தது. சிராஜூதீனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர், காரைக்குடியில் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்படிப்பில் கலந்து கொண்டு இருந்ததால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    இந்நிலையில் நேற்று சிராஜூதீன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான், நடிகை பவுலின் ஜெசிகாவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை காதலித்து வந்தார். அவருக்கு நான் ஒரு நல்ல நண்பராக இருந்து வந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததால் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தேன்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    அது சம்பந்தமாக என்னிடம் அடிக்கடி பேசி வந்தார். நான் வாங்கி கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி எனது நண்பரிடம் நான் சொல்லவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக என்னிடம்தான் பவுலின் ஜெசிகா பேசினார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தீபா(எ) பவுலின் ஜெசிகா

    இதையடுத்து போலீசார், நடிகை பவுலின் ஜெசிகாவுக்கு உண்மையாகவே தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததா?. இதற்காக அவர் சிகிச்சை பெற்றது உண்மையா? என்பதை கண்டறிய அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நடிகையின் செல்போன் முடிவுகள் வந்த பிறகு பவுலின் ஜெசிகா தற்கொலையில் இறுதி முடிவு எட்டப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×