search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurse vijayalakshmi"

    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவனை நர்ஸ் விஜயலட்சுமி ஆஜரானார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த ஆணையத்தில் போலீஸ் அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் மற்றும் போயஸ் கார்டனில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்ஸ் விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #Apollohospital
    ×