search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "probe commision"

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து சிசிடிவி காட்சிகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.



    இதற்கு சி.சி.டி.வி காட்சிகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் பதிலளிக்கவே, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது.

    அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால்தான் நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இந்நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடுதான் என அறிக்கை வெளியிட காரணம் என்ன? என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.



    மேலும், பல உறுப்புகளில் பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, அவர் நினைக்கையில் வீடு திரும்புவார் என கூறியது ஏன் என்றும், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வெளியிட்ட அறிக்கைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு முறைப்படி ஒத்துழைப்பு வழங்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், சில மருத்துவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும், ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் கட்டணம் பெற்றுக்கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

    மேலும், இன்னும் 6 பேர் ஆஜராக வேண்டும் எனவும், அவர்கள் ஆஜராகவில்லை என்றால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் எச்சரித்துள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    ×