search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஸ்சார்ஜ்"

    • இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.
    • இதையொட்டி இன்று மாலையில் மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் காரில் ஏறி புறப்பட்டார்

    கோவை 'ஈஷா' யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கடும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 17- ந்தேதி மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பு சிகிச்சையில் இருந்தார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றும் வெளியானது.அதில் சத்குருவின் உடல்நிலை முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.




    இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.இதையொட்டி இன்று மாலையில் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார்

    அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதாரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் 'சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர், டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது". என்று  கூறி உள்ளது.

    • ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட உடல் நலனில் முன்னேற்றம்.
    • சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா நன்றி.

    கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    மகா சிவராத்திரி மற்றும் பிற கூட்டங்களில் கலந்துக் கொண்ட சத்குரு, கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமயைில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து, சத்குரு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, சத்குரு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    சத்குருவை நேரில் சந்தித்த தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி நலம் விசாரித்தார்.

    சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்தது.

    • டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி.
    • பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட தகவல் உறுதியானது.

    கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நான் குணமடைந்தவுடன் அங்கு வருவேன். உ.பி.யில் மக்கள், எனது நண்பர்கள் அனைவருக்கும் நியாய யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரியங்கா காந்தி 'எக்ஸ்' இணைய தளத்தில் பிரியங்காகாந்தி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்தனர்.

    தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    • செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவ குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

    திரவங்கள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதில் அவர் ஓரளவு குணமடைந்தார். இந்நிலையில் இன்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    • கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விக்கிரவாண்டி:

    கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

    தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×