search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Treatment"

    • டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி.
    • பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட தகவல் உறுதியானது.

    கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

    துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நான் குணமடைந்தவுடன் அங்கு வருவேன். உ.பி.யில் மக்கள், எனது நண்பர்கள் அனைவருக்கும் நியாய யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரியங்கா காந்தி 'எக்ஸ்' இணைய தளத்தில் பிரியங்காகாந்தி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீர்காழி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து வகையான நோய்களைக் கண்டறியும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் வி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். டி.என்.சாய் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் மருத்துவர்கள் எம். ஸ்ரீநாத் , எஸ். பாரத், எஸ்.அருண் குமார், சி.அபிநயா, எம். சுப்பிரமணியம், சிவநேசன் மற்றும் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    டி.ஆர்.பார்த்தசாரதி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் மாவட்டத்தலைவர் எஸ். சங்கரன், பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் என்.துளசிரங்கன், டி.ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.

    நிறைவில் பள்ளி உதவித் தலைமை யாசிரியர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    • தனியாயா காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரளாவைச் சேர்ந்த ஜீபின் பேபி (வயது 45) நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கியுள்ளனர்.மனநலம் பாதிக்கப்பட்ட ஜாபருல்லா (45) என்பவரை இந்த காப்பகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதின் 2021 அக்டோபர் 1-ந் தேதியன்று சேர்த்தார். பின்னர் 2022-ம் வருடம் ஜாபருல்லாவை காண ஹனிதின் அன்பு ஜோதி காப்பகத்திற்கு வந்தார். அங்கு அவரைக் காணவில்லை. இது குறித்து ஆசிரம உரிமையாளரிடம் விசாரித்த போது, ஜாபருல்லாவை பெங்களூரு காப்பத்திற்கு மாற்றியுள்ளதாக கூறினார். அங்கும் ஜாபருல்லாவை காணவில்லை.இது தொடர்பாக ஹனிதின் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரினை பெற மறுத்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்அதன் மீதான உத்தரவின் பேரில் வருவாய்த் துறை விழுப்புரம் ஆர்.டிஒ. ரவிச்சந்திரன், செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, சமூக நல அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத் திறனாளி நல அலுவலர் தங்கல் மற்றும் போலீசார் காப்பகத்திற்கு சென்றனர். அங்கிருந்த 137 பேர் மற்றும் காப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்று இருந்தது. மேலும், இந்த காப்பகத்தில் இருந்து 17 பேர் காணாமல் போனது தெரியவந்ததுகுரங்கு கடித்ததுஆய்வு நடத்து கொண்டிருந்த போது, காப்பக உரிமையாளர் ஜீபின் பேபியால் வளர்க்கப்படும் குரங்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வெளியேறினர். தொடர்ந்து இன்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

    மருத்துவ சிகிச்சைமேலும், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையை சேர்ந்த மருத்துவக் குழு நேற்று இரவு காப்பகத்திற்கு விரைந்தது. குரங்கு கடித்தவர்களுக்கும், அங்கிருந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து மாத்திரை மருந்துகள் வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • சிறுவன் தமிழ்ச்செல்வன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
    • அமைச்சரிடம், சிவபத்மநாதன் பேசி சிறுவனின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம்,சுரண்டை அருகே உள்ள மேலராஜகோபாலபேரி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. தொழிலாளி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12) இந்த சிறுவன் மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

    இதனால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தன்னிடம் பணம் இல்லை எனவும், தனது மகனின் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் சிறுவனின் தந்தை குருசாமி கோரிக்கை வைத்தார்.

    அதனையேற்று சிறுவனின் மருத்து செலவுக்கு சிவபத்மநாதன் ரூ.5 ஆயிரம் வழங்கினார்.தொடர்ந்து அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பேசி சிறுவனின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, யூனியன் சேர்மன்கள் காவேரி சீனித்துரை, திவ்யா மணிகண்டன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சேசுராஜன்,பொதுக்குழு உறுப்பினர் அருள்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன்,செல்லத்துரை , குமார், டோம்னிங், கண்ணன். கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆண்டு விழா மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திடத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக 3,067 நபர்களுக்கு ரூ.1,98,31,997 மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின்கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் வாயிலாக குணமடைந்த 5 நபர்களுக்கு சிகிச்சை குறித்தும் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து, பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 5 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு திட்ட ஒருங்கிணை ப்பாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது. மேலும், இத்திட்ட த்தின்கீழ் பயன்பெற அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அல்லாதோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் காப்பீட்டுத்திட்ட மையத்தில் பதிவு செய்து, மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும் 22 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்க ப்படுவதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தனி யார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள தொ கையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் காப்பீடு குறித்த விபரங்கள் அடங்கிய தகவல் பலகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக அவ்வப்போது, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மரு.பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளர் மரு.செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்சோ.சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.இளங்கோ பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கிபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 ஆயிரத்து 504 பேர் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி அறிய 14555 அல்லது 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகள், 151 வகையான தொடர் சிகிச்சைகள், 38 வகையான பரிசோதனைகள், மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, காது நுண்திறன் கருவி பொருத்துதல் என உயர்ரக சிகிச்சைகளும் அடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5 பேருக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய அவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்த பின்னர் விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- கட்சியில் பொறுப்புக்கு வருவீர்களா?

    பதில்:- கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை நான் செய்கிறேன். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்கிறோம்.


    அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுவார். சிங்கத்துக்கு நிகரான தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.

    கே: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வீர்களா?

    ப:- இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் முதலில் அரசியலுக்கு வந்தது விஜயகாந்த் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக பணியாற்றி உள்ளோம். எனவே தே.மு.தி.க.வை லேசாக எடை போட வேண்டாம்.

    கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர்களுடைய வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? எதுவுமே இல்லாதபோது கூட்டணி என்றால் ஒரு நாள் செய்தியுடன் முடிந்துவிடும்.

    எனவே அவர்கள் களத்திற்கு வரட்டும். நாங்கள் தேர்தல் களத்தில் எங்களை நிரூபித்துள்ளோம். ஆனால் இருவரும் தங்களை இன்னும் நிரூபிக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் போதிய மின்சப்ளை இல்லாததால் அரசு மருத்துவமனையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #OdishaHospital #PowerCrisis
    மயூர்பஞ்ச்:

    ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது. எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராரன் தாலுகா மருத்துவமனையில் மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு நோயாளிகளின் உறவினர்கள் உதவி செய்கின்றனர்.



    இதுபற்றி மருத்துவமனையின் டாக்டர் கூறுகையில், “தினமும் இங்கு 180 முதல் 200 நோயாளிகள் வரை வருகின்றனர். இங்கு கடுமையான மின்பற்றாக்குறை உள்ளது. நோயாளிகள் வரும்போது மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நான் சிகிச்சை அளிக்கிறேன்’’ என்றார்.

    மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #OdishaHospital #PowerCrisis




    கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக வருகிற 3-ந்தேதி அமெரிக்கா செல்கிறார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த மாதம் 19-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருந்தார். அப்போது கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் பினராயி விஜயனின் அமெரிக்கா பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து அவர், வருகிற 3-ந்தேதி அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெறு கிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன், அமெரிக்கா செல்வதை தொடர்ந்து அவரது இலாகா பொறுப்புகளை மந்திரி இ.பி. ஜெயராஜன் கவனித்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. #PinarayiVijayan

    காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். #karunanidhi #DMK
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டதால் மூச்சுவிடுவதை எளிதாக்கும் வகையில், அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    தொடர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணாநிதி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வருகிறார். 

    இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கருணாநிதி இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரக்யாஸ்டமி கருவில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததை அடுத்து, அவர் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார். 
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய இடத்தை பிடித்தார்.

    முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார்.

    அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளிலும் கட்சியினர் அங்கம் வகித்தனர். தமிழக அரசியல் கட்சிகளில் 3-வது இடத்திற்கு வளர்ந்து வந்த தே.மு.தி.க. கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

    கடந்த சில வருடங்களாக விஜயகாந்தின் பேச்சுத் திறன் குறைந்து குரல் வளமும் பாதித்தது. மேலும் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பொது இடங்களில் அவரால் நீண்ட நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை கூட அவர் தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்ற அடைய தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர்.


    இதற்காக அவர் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கின்றார். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் செல்கிறார்கள்.

    அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது.

    அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அவற்றை குணமாக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து அதன் பிறகு சென்னை திரும்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜயகாந்த் சுகம் பெற்று திரும்பி வர கட்சி தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா செல்வதற்காக அவர் குடும்பத்தினருடன் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். தொண்டர்கள் யாரும் தன்னை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் வருகிற 7-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

    வேகமாக நடக்க முடியாமலும், தெளிவாக நீண்ட நேரம் பேசமுடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தே.மு.தி.க. சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் சில நொடிகள் மட்டுமே பேசிவருகிறார்.

    கடந்த மாதம் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கூட அவர் நன்றியுரை மட்டுமே ஆற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மைத்துனரும், தே.மு.தி.க. துணை செயலாளருமான எல்.கே.சுதீஷ் பேசும்போது, “விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் (இம்மாதம்) வெளிநாடு செல்கிறார். செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்சி ஆண்டுவிழாவில் அவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவார்”, என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தநிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். விஜயகாந்துடன், அவரது மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அமெரிக்காவில் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெறும் விஜயகாந்த், அடுத்த மாதம் (ஆகஸ்டு) தனது பிறந்தநாளான 25-ந் தேதிக்குள் தாயகம் திரும்புவார் என்று தே.மு.தி.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 
    ×