search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வயிற்று வலியால் அவதிப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்- மு.க.ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்
    X

    வயிற்று வலியால் அவதிப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்- மு.க.ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்

    • பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இதனையடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

    திரவங்கள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதில் அவர் ஓரளவு குணமடைந்தார். இந்நிலையில் இன்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் உடல் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    Next Story
    ×