search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apollo Hospital"

    ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். #JayaDeathprobe #CVShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகராஜாபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று திறந்துவைத்தார். அதன்பின்பு விழுப்புரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே தொடங்கி வைத்தார்.

    மேலும் அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

    ஜெயலலிதா சாவில் சந்தேகம் இருப்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்தது யார்? என்று ஆணையம் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யவிடாமல் தடுத்தது யார்? என்பது தெரியவரவேண்டும்.



    மருத்துவமனையை உல்லாச விடுதியாக்கி தங்கியிருந்து இட்லி-தோசை சாப்பிட்டு ரூ.1 கோடி அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் செலவு ஏற்படுத்தி உள்ளனர். சசிகலா தரப்பினர் உண்மையான ஆவணங்களை மறைத்துள்ளார்கள். ஆணையத்தில் பொய்யான தகவல்களை கூறி உள்ளனர். சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார்.

    எனவே ஜெயலலிதா மரணம் குறித்து அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா சாவில் உள்ள உண்மை விபரங்களை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayaDeathprobe #CVShanmugam
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் சாந்த ஷீலா நாயர் ஆகியோர் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை கமி‌ஷனில் வாக்குமூலம் அளித்த பலரும் சசிகலாவுக்கு எதிராகவே கூறியதாக தகவல்கள் வெளிவருகிறது.

    சசிகலா தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் என 13 பேர்களிடம் சசிகலாவின் வக்கீல் 3-ந் தேதி குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

    விசாரணை ஆணையத்தில் திடீர் திருப்பமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வக்கீல்களும் இப்போது குறுக்கு விசாரணை செய்ய உள்ளனர்.

    ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த சாந்த ஷீலா நாயர், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வருகிற 2-ந் தேதி அப்பல்லோ வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த ஆணையத்தில் அனுமதி வாங்கி உள்ளனர்.

    இந்த விசாரணையில் ஆஜராக இருவருக்கும் ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர்தான் அரசின் முடிவுகள் குறித்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்தியவர்கள் என்பதால் இவர்கள் இருவரிடமும் ஆணையம் மீண்டும் சில விளக்கங்களை பெற விரும்புகிறது.

    இதற்காக ராம மோகன ராவ் மற்றும் ராதாகிருஷ்ணன் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி கமி‌ஷன் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக விவாதித்த விசயங்களை ஆணையம் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புவதால் இவர்களிடம் ஆணையம் மேலும் சில விளக்கங்களை கேட்ட உள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital

    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எங்கள் மருத்துவர்களின் வாக்குமூலம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலத்தை தாக்கல் செய்துள்ளது. #Jayalalithaadeath #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் தனது வாக்குமூலத்தை ஒரு மனுவாக தாக்கல் செய்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களில் பலர் பலமுறை ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 3 ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இந்த மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசிடம் ஆணையம் அனுமதி கோரியது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு அனுமதி அளித்தது. இருந்தபோதிலும் மருத்துவ நிபுணர்கள் குழுவை ஆணையம் ஏற்படுத்தவில்லை.

    தவறாக பதிவு செய்யப்படுகிறது

    இதனால் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறைகள், மருத்துவ உண்மைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளிக்கும்போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது உள்ளது. இதன் காரணமாக அப்பல்லோ மருத்துவர்களின் வாக்கு மூலத்தை ஆணையம் பதிவு செய்யும்போது ஏராளமான தவறு ஏற்படுகிறது.

    மருத்துவம் தொடர்பான வார்த்தைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும்போது தவறாக புரிந்து கொண்டு பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்று வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது மருத்துவ சிகிச்சை தொடர்பான உண்மைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்படும்.



    அப்பல்லோ மருத்துவமனையில் 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் மட்டுமே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய முடியும். அதுவே சரியானதாகவும் இருக்கும்.

    இந்த துறைகளில் இருந்து ஒரே ஒரு மருத்துவரேனும் ஆணையம் அமைக்கும் குழுவில் இடம்பெறவில்லை எனில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தவறான கருத்தை ஆணையம் பதிவு செய்யும் நிலை ஏற்படும்.

    அதேபோன்று மருத்துவக்குழுவில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களை போன்று கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகளோ அல்லது அதைவிட அதிக கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டியது அவசியமாகும்.

    உலக அளவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு உலக அளவில் தரம்வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை கண்டறிய முடியும். எனவே, உடனடியாக மருத்துவக்குழுவை ஏற்படுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் அப்பல்லோ நிர்வாகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Jayalalithaadeath #ApolloHospital
    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது என்று மதுசூதனன் தெரிவித்தார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
    ராயபுரம்:

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாசர்பாடி முல்லை நகரில் இன்று நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது. அவர் ரூ. 1½ கோடிக்கு உணவு சாப்பிடவில்லை.

    சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள். மருத்துவ சிகிச்சை பெற்றபோது 75 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அவைத் தலைவரான என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.


    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இதுவே அவரது எண்ணமாகும். அவரது ஆத்மா அங்கு தான் இருக்கிறது.

    டி.டி.வி. தினகரன் ஒரு வழிப்பாதை போல, அவருக்கு எடுக்கதான் தெரியும் கொடுக்க தெரியாது. அதனால் தான் அவரால் செந்தில் பாலாஜியை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

    ஆர்.கே. நகரில் எந்தவித பணியும் நடைபெறவில்லை. தொகுதி பக்கமே அவர் வரவில்லை. தேர்தலின் போது 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றிவிட்டார். தற்போது மக்களை சந்திக்க பயப்படுகிறார். வருகிற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். இன்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.



    அதில், 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584  என்றும், ஜெயலலிதாவின் உணவுக்கு மட்டும் ரூ. 1.17 கோடி செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்டோபர் 13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது என்றும், ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017 ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
    நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  



    இந்நிலையில்,  நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று இரவு நேரில் சந்தித்தனர். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital 
    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று 2 அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.

    அப்பல்லோவில் உள்ள தொற்றுநோய் தடுப்பு சிறப்பு டாக்டர் ராமகோபால கிருஷ்ணன், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன், நரம்பியல் சிகிச்சை பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இன்று மயக்கவியல் துறை டாக்டர் மின்னல் எம்போர, டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.


    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் கொடுப்பதால் விசாரணையில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொருவர் கொடுக்கும் வாக்குமூலமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த டாக்டர்களிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளனர். அடுத்தகட்டமாக மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

    டாக்டர்களிடம் விசாரணை நடத்தி முடித்ததும் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  #JayaDeathProbe #ArumugasamyinquiryCommission
    அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்த்த போது மயக்க நிலையில் இருந்தததாக ஜனாதிபதிக்கு முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #Jayalalithaa #ApolloHospital #VidyasagarRao
    சென்னை:

    ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவரை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்தவர்களிடம் தகவல் பெற்று விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவிடமும் தகவல்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஜனாதிபதிக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் வித்யாசாகர் ராவ் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. மறுநாள் நான் அவர் விரைவில் குணமாக வேண்டி கடிதம் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் செப்டம்பர் 26-ந்தேதி ஜெயலலிதா பெயரில் வெளியான அரசாணையில் சாலை விபத்தில் பலியான 11 பேருக்கு நிதி உதவி அளிப்பதாக அறிக்கை வெளியானது. அதுபோல 27-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற இருக்கும் காவிரி வழக்கு விசாரணை தொடர்பாக அதிகாரிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

    அதற்கு அடுத்த நாள் ஜெயலலிதா பெயரில் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் அறிவிப்பு ஜெயலலிதா பெயரில் வெளியாகி இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

    ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதற்காக பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்பவர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இத்தகைய சூழ்நிலையில் 1-10-2016 அன்று நான் மும்பையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தேன்.

    உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். நேரிடையாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு சென்று பார்த்தேன். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார்.


    இதையடுத்து முதல்- அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், அப்பல்லோ மருத்துவமனை தலைவரிடமும் நான் கலந்துரையாடினேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டு அறிந்தேன்.

    பிறகு தலைமை செயலாளரை அழைத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து சரியான மருத்துவமனை அறிக்கை வெளியிடுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினேன். மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்குமாறும் உத்தரவிட்டேன்.

    இதுதொடர்பாக அன்றே அறிக்கை ஒன்றையும் நான் வெளியிட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்று சென்று விட்டு வந்தபிறகு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தினமும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி மருத்துவ அறிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

    ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் ஆண்டிபயாடிக் சிகிச்சைகள் பற்றி அப்பல்லோ மருத்துவமனை தெளிவாக தகவல்கள் வெளியிட்டது.

    ஜெயலலிதா உடல் நிலை நன்றாக தேறி வருவதாகவும் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் மேலும் சில நாட்களுக்கு மட்டும் அவர் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டியதுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை ஒரு குறிப்பை வெளியிட்டது. மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்பீலே மூலம் சிகிச்சை அளிப்பது பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

    அதன் பிறகு ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் தொடர்பான வதந்திகள் பற்றிய சந்தேகங்கள் கணிசமாக குறைந்தன. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா விரைவில் குணமாக எதிர்க்கட்சிகளும் வாழ்த்து தெரிவித்தன.

    இதற்கிடையே ஜெயலலிதா உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒருபொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் தனது மனுவில், "ஜெயலலிதா முழுமையாக குணம் அடையும் வரை இடைக்கால முதல்-அமைச்சர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    அந்த வழக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்கள்.

    நானும் சென்னையில் முகாமிட்டுள்ளேன். இந்த பிரச்சனை தொடர்பாக நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். #Jayalalithaa #ApolloHospital #VidyasagarRao
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், தங்கராஜ், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #ApolloDoctors #JayaDeath
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் நரசிம்மன், தங்கராஜ், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரனை மேற்கொண்டனர்.

    விசாரணை ஆணையத்தில் இதுவரை 140-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இன்னும் விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். #ApolloDoctors #JayaDeath
    எம்ஜிஆருக்கு 1984ம் ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வழங்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

    ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். எம்ஜிஆருக்கு அளித்ததுபோன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

    1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விளக்கம் கேட்டுள்ளது.



    1984ல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் வழங்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது? என்ற விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது.

    எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதுபோல், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியாக இந்த ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை விவரங்களை 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையம் கேட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
    இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார். #Jayadeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

    அப்போது அவர், ‘22.9.2016 அன்று இரவு 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வருமாறு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மேலாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். நான் மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் ஜெயலலிதாவை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து சேர்ந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. தற்காலிகமாக அவருக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்தினோம்’ என்று சாட்சியம் அளித்தார்.

    ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட தகவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு 22.9.2016 அன்று இரவு 10 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் சத்தியமூர்த்தி இரவு 9.45 மணிக்கு தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக சாட்சியம் அளித்தது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

    அதற்கு மருத்துவர் சத்தியமூர்த்தி, உத்தேசமாக இரவு 9.45 மணி இருக்கும் என்றும், அதுதான் மிகச்சரியான நேரம் என்றால் சரியல்ல என்றும் பதில் அளித்தார்.

    உடனே கோபம் அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஏன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.


    இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்பட 4 பேரை ஆணையம் விசாரிக்க வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜோசப் என்பவர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் விசாரிப்பது குறித்து ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. அவ்வாறு முடிவு செய்யாதபோது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்களை விசாரிக்கக்கூடிய தருணம் வரும்பட்சத்தில் மனுதாரர் ஜோசப் மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    விசாரணை முடிவடைந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘22.9.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது வரை என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஆணையமே இடைக்கால அறிக்கை வெளியிட்டால் சரியாக இருக்கும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோ பதிவை வெற்றிவேல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதுவரை ஆணையத்தால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த வீடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி அது உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிந்து அதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’ என்றார். #Jayadeathprobe
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து சிசிடிவி காட்சிகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.



    இதற்கு சி.சி.டி.வி காட்சிகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் பதிலளிக்கவே, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது.

    அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால்தான் நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    ×