search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madhusudhanan"

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது என்று மதுசூதனன் தெரிவித்தார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
    ராயபுரம்:

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாசர்பாடி முல்லை நகரில் இன்று நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது. அவர் ரூ. 1½ கோடிக்கு உணவு சாப்பிடவில்லை.

    சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள். மருத்துவ சிகிச்சை பெற்றபோது 75 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அவைத் தலைவரான என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.


    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இதுவே அவரது எண்ணமாகும். அவரது ஆத்மா அங்கு தான் இருக்கிறது.

    டி.டி.வி. தினகரன் ஒரு வழிப்பாதை போல, அவருக்கு எடுக்கதான் தெரியும் கொடுக்க தெரியாது. அதனால் தான் அவரால் செந்தில் பாலாஜியை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

    ஆர்.கே. நகரில் எந்தவித பணியும் நடைபெறவில்லை. தொகுதி பக்கமே அவர் வரவில்லை. தேர்தலின் போது 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றிவிட்டார். தற்போது மக்களை சந்திக்க பயப்படுகிறார். வருகிற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ApolloHospital #Madhusudhanan
    தண்டையார்பேட்டையில் மதுசூதனன்-தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Madhusudhanan #TTVDhinakaran
    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை இரட்டை குழி தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்தார்.

    அப்போது மதுசூதனன் ஆதரவாளர்கள் என அ.தி.மு.க. தொண்டர்கள் 20 ரூபாய் நோட்டுகளை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கும், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். பாட்டில்கள் மற்றும் செருப்புகளும் வீசப்பட்டன.

    இந்த மோதலில் மதுசூதனன் ஆதரவாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தினகரன் ஆதரவாளர்கள் 8 பேர் காயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கல்வீச்சில் காயம் அடைந்த பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துமீறி பொது இடத்தில் கூடுவது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Madhusudhanan #TTVDhinakaran
    ×