search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi"

    • அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
    • போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.

    இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
    • 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 சிறியஅங்கன்வாடிகளில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள இடங்களுக்கு அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கே கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

    இதனால் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. சில நேரங்களில் அங்கன்வாடியில் உள்ள சமையலர் விடுப்பு எடுத்து விட்டால், அங்கன்வாடி பணியாளர்களே கூடுதலாக சமையல் வேலையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படுகிறது.குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்து அங்கன்வாடி மையங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இது அரசின் முதன்மை திட்டமாக பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் தேவைக்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் திட்டத்தின் நோக்கம் எதிர்பார்த்த பலன் தருவதில் சிக்கல் உள்ளது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுக்க அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம், முழு அளவில் பலன் தரும் என்றனர்.

    • தலைவர்கள் வேடமணிந்த மாறுவேடப்போட்டி நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா பரிசளித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அங்குள்ள குழந்தைகள் பாரதியார்,காந்தி,நேரு, காமராஜர் போன்ற தேச தலைவர்கள் வேடமணிந்த மாறுவேடப்போட்டி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா பரிசளித்தார். இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று படுவோம், உறுதி ஏற்போம் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த பகுதி வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது தாயை 2-வதாக திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் (வயது 40) என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார் கூறினார். இது குறித்து விசாரணை செய்ததில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது.

    இதை அடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி மற்றும் அதிகாரிகள் குமாரபாளையம் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு இருந்த பிரகாஷ் மற்றும் சிறுமியின் தாய் துளசி (35) ஆகிய 2 பேரையும் திருச்செங்கோடு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அச்சிறுமி துளசியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. சிறுமி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    • பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
    • இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாநகரின் மையப்பகுதியில் வண்ணார் பேட்டை அமைந்துள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் பலர் கூலி தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். அவர்களது குழந்தைகள் அப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அங்கன்வாடி பள்ளியில் தங்களது தொடக்கப்பள்ளி படிப்பை படித்து வந்தனர்.

    தற்போது அந்த பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. தற்போது அந்த பள்ளியில் 40 குழந்தைகள் வரை படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பல்வேறு இடங்களில் கோரிக்கை வைத்தனர்.

    தற்போது 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி இளைஞர்களின் முயற்சியில் பல்வேறு விதமான புனரமைப்பு பணிகள் இந்த பள்ளியில் செய்யப்பட்டுள்ளன.

    பள்ளி முழுவதும் சிதலமடைந்த இடங்கள் புதுப்பிக்கப்பட்டு வகுப்பறை, சுற்றுச் சுவர், கரும்பலகை உள்ளிட்டவைகள் வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் ஓவியங்கள், விலங்குகள், மலர்கள், பழம், காய் போன்ற ஓவியங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் ஆகியவை இளைஞர்களின் முயற்சியால் வரையப்பட்டுள்ளது.

    மேலும் அந்த பள்ளியில் உள்ள தோட்டம், குடிநீர் தொட்டிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

    இந்த பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் சிதிலமடைந்து காணப்படுவதை அரசு கவனம் செலுத்தி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் ஜன்னல்கள் உடைந்தும், பெயர்த்தும் உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செங்காலன் வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 20 குழந்தைகள் பயின்றுவந்தனர்.

    இந்த நிலையில் தற்போது கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் ஜன்னல்கள் உடைந்தும், பெயர்த்தும் உள்ளது.

    இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கட்டிடத்தின் அவல நிலையால் இங்கு கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகின்றனர். சேதமான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மிக அருகில் ஆரம்ப பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

    ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகள் இப்பகுதியில் தான் விளையாடுகின்றனர். மேலும் இந்த பழுதடைந்த கட்டிடத்தின் அருகே குடிநீர் குழாய் இருப்பதால் குடிநீர் குடங்களில் தண்ணீர் பிடித்துச் செல்லும் பொதுமக்களும், ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளும் குடிநீர் தேவைக்காக இந்த கட்டிடத்தின் அருகே சென்று வருகின்றனர்.

    அதிகாரிகளின் மெத்தனத்தால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்தபகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடப்பு கல்வியாண்டில் மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது.
    • குழந்தைகளை அதிக கவனத்துடன் கண்காணிக்கவும் வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை ஒன்றியத்தில் பள்ளி வளாகத்தில் செயல்படும் 21 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது. அவ்வாறு சேர்க்கை துவங்கினால் உடுமலை ஒன்றியத்தில் பள்ளி வளாகத்தில் செயல்படும் 21 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு நடத்தப்படும்.

    இது குறித்து சமூக நல அதிகாரிகள் கூறியதாவது:-

    அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்பு துவக்குவதற்கான உத்தரவு, குழந்தைகளை வளர்ச்சி திட்ட அலுவலர்களை சென்றடையவில்லை. உத்தரவு கிடைக்கப் பெற்றால் அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். அதேநேரம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களைக்கொண்டு பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு. குழந்தைகளை அதிக கவனத்துடன் கண்காணிக்கவும் வேண்டும்.இதனால், அங்கன்வாடிகளுக்கு விரைந்து சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். அதேபோல அங்கன்வாடி மையங்களையே வகுப்பறையாக பயன்படுத்த அதற்கான தளவாடப்பொருட்கள் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேசகுமார் இறந்துவிட்டார். பிரமாட்சி செட்டிமேடு அங்கன்வாடியில் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு கீழ ஏர்மாள்புரம் பலவேசக்கார தெருவை சேர்ந்தவர் பலவேசகுமார். இவரது மனைவி பிரமாட்சி(வயது 35).

    இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேசகுமார் இறந்துவிட்டார். பிரமாட்சி செட்டிமேடு அங்கன்வாடியில் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் பிரமாட்சி இருந்துள்ளார்.தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்த நிலையில் எப்படி குழந்தைகளை வளர்க்க போகிறேன் என மன உளைச்சலில் காணப்பட்டார்.

    நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்திரத்தில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர்மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் தொகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 செம்மறியாடு, வெள்ளாட்டு குட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் அருகே உள்ள சொக்க நாதன்புத்தூரில் நடந்தது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் (2021-22) சார்பில் 100 பயனாளிகளுக்கு 500 ஆட்டு குட்டிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், யூனியன்சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விதவை என்ற பெயரை கைம்பெண் என மாற்றியமைத்து அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    அதுபோல் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களின் வளர்ச்சிக்காக அரசு நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம், மாணவி களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன்வழியில் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தி.மு.க.வும், தமிழக முதல்வரும் தான். விரைவில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரப்பப்படவுள்ளது.அதில் ஏழை, எளிய, கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவிந்தராஜ், உதவி இயக்குநர் ராஜேஸ்வரி முனியசாமி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளை செயலாளர்கள் அமுதரசன், சின்னதம்பி, சீதாராமன், தங்கப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மகளிரணி சொர்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
    • மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.10.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • அருப்புக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் படிப்பதற்காக நகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.

    சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம், சின்னக்கடை தெரு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரமான காற்றோட்ட வசதி கட்டிடம் கிடையாது. டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் ஆபத்தான சூழல் உள்ளது.

    குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிப்பறை வசதி இல்லை என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சில அங்கன்வாடி மைய கட்டிடம் விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது. சிறு குழந்தைகள் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய கட்டிடத்தில் படிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான நாற்காலி, மின்விசிறி, பாய் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 54-வது வார்டுக்கு உட்பட்ட அய்யன் கோவில்தெரு, நாடார் தெரு, வைகோ தெரு அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான நாற்காலி, மின்விசிறி, பாய் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநகர தி.மு.க. கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, நிர்வாகிகள் சிராஜுதீன், அன்சார், கங்கசேகர், தீபக், ராஜேஷ், அசோக், கவுன்சிலர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகர தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×