search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில்  தாயின் 2-வது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார்
    X

    குமாரபாளையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் தாயின் 2-வது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார்

    • வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று படுவோம், உறுதி ஏற்போம் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த பகுதி வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது தாயை 2-வதாக திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் (வயது 40) என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார் கூறினார். இது குறித்து விசாரணை செய்ததில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது.

    இதை அடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி மற்றும் அதிகாரிகள் குமாரபாளையம் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு இருந்த பிரகாஷ் மற்றும் சிறுமியின் தாய் துளசி (35) ஆகிய 2 பேரையும் திருச்செங்கோடு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அச்சிறுமி துளசியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. சிறுமி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    Next Story
    ×