என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லிடைக்குறிச்சியில் அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேசகுமார் இறந்துவிட்டார். பிரமாட்சி செட்டிமேடு அங்கன்வாடியில் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
- கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு கீழ ஏர்மாள்புரம் பலவேசக்கார தெருவை சேர்ந்தவர் பலவேசகுமார். இவரது மனைவி பிரமாட்சி(வயது 35).
இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலவேசகுமார் இறந்துவிட்டார். பிரமாட்சி செட்டிமேடு அங்கன்வாடியில் சமையல் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் பிரமாட்சி இருந்துள்ளார்.தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வந்த நிலையில் எப்படி குழந்தைகளை வளர்க்க போகிறேன் என மன உளைச்சலில் காணப்பட்டார்.
நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் உத்திரத்தில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்