என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையங்கள்
    X

    ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்.

    ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருப்புக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் படிப்பதற்காக நகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.

    சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம், சின்னக்கடை தெரு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரமான காற்றோட்ட வசதி கட்டிடம் கிடையாது. டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் ஆபத்தான சூழல் உள்ளது.

    குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிப்பறை வசதி இல்லை என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சில அங்கன்வாடி மைய கட்டிடம் விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது. சிறு குழந்தைகள் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய கட்டிடத்தில் படிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×