search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "all party meeting"

    இலங்கையில் நாளை காலை 10 மணிக்கு அதிபர் சிறிசேனா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SrilankanBlasts #Sirisena
    கொழும்பு:

    இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை 8.45 மணியளவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் 2 தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

    இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.  அதனை தொடர்ந்து  இலங்கையில் மாலை 4 மணிக்கு அதிபர் சிறிசேன தலைமையில் சர்வ சமய கூட்டம் நடைபெறவுள்ளது. 

    இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களால் நிலவும் பதற்றத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SrilankanBlasts #Sirisena
    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீரில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.

    பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதிகளுக்கும், அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம், நீங்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள், அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ஆவேசத்துடன் பேசினார்.

    பிரதமர் மோடி நேற்று மத்திய மந்திரிசபையை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

    தேசிய புலனாய்வு அமைப்பு, உளவு அமைப்பான ‘ரா’, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். இதில் காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்பட்டது.

    உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பியதும் பிரதமர் மோடி வீட்டில் மீண்டும் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்தது.

    இதில் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு காஷ்மீரில் உள்ள நிலைமை தொடர்பாக விளக்கி கூறினார். அறிக்கையும் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்திலும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.



    இந்நிலையில், டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நிதி மந்திரி அருண்ஜெட்லி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்தன.

    எனவே, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடும் பாகிஸ்தானுக்கும் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு செம்படம்பர் மாதம் காஷ்மீரில் உரி பகுதி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி துல்லியல் (சர்ஜிகல்) தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டது. ஏராளமான பயங்கரவாதிகளும் பலியானார்கள்.

    அதுபோன்ற தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பாகிஸ்தானும் தனது எல்லையில் படைகளை உஷார்படுத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானையொட்டியுள்ள காஷ்மீர் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.

    பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்தினரும், நாட்டு மக்களும் தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு பதிலடி கொடுத்தால்தான் அவர்களது ஆவேசம் அடங்கும் என்பதால் ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. #PulwamaAttack
    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு இரு அவைகளின் சபாநாயகர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். #LokSabha #SumitraMahajan #allpartymeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தது.

    எனினும், வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேறியது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 30-ம் தேதி அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

    இதேபோல், மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு வரும் 31-ம் தேதி அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அவைத்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #LokSabha #SumitraMahajan #allpartymeeting 
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக வருகிற 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. #ParlimentWinterSession #OppositionParties
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்கி ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் முழுமையான கூட்டத் தொடர் இது என்பதால் பாராளுமன்ற இரு அவைகளையும் சுமுகமாக, ஒருமித்த கருத்துடன் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

    இதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளான 10-ந் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.

    கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வது மரபாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடி 10-ந் தேதி கூட்டத்தில், சபை அமளி இன்றி சுமுகமாக நடைபெறவும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பார்.



    குறிப்பாக மாநிலங்களவையில் நிலுவையில் கிடக்கும் உடனடி முத்தலாக் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பித்து இருப்பது நினைவு கூரத்தக்கது.

    இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா, கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற பா.ஜனதா அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குளிர்கால தொடருக்காக பாராளுமன்றம் கூடும் தினத்தில், அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் அன்று ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அனல் பறக்க மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

    வழக்கமாக நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடர் தாமதமாக தொடங்குவதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParlimentWinterSession #OppositionParties
    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். #ParlimentWinterSession #SumitraMahajan #AllPartyMeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இதையடுத்து, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது. அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.



    இதற்கிடையே, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதம் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க எதிர்கட்சிகள் சார்பில் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க முடிவாகியுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 11-ம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். #ParlimentWinterSession #SumitraMahajan #AllPartyMeeting
    மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை என்று சரத்குமார் தெரிவித்தார். #MekedatuDam
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தபோது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேரில் வந்து பார்த்த போது உண்மையான சேத விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகள் செய்து வருகிறது.

    அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. தமிழக அரசு தாங்களால் இயன்ற அளவு செய்து உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அதிக அளவு நிதி வாங்கி, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும். அரசை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.


    மேகதாது அணை பிரச்சனை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய அரசு ஆய்வுக்காக அனுமதி அளித்து உள்ளது வருத்தம் அளிக்க கூடிய செயல். அதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலையை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை மீண்டும் ஒரு ஆய்வு நடத்தி அதில் என்னென்ன கூறப்பட்டு உள்ளது. அதை மூடுவதற்கு என்னென்ன செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #Sarathkumar #AllpartyMeeting
    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin #AllPartyMeeting
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழக அரசு நாளை இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.

    இந்த நிலையில் மேகதாது பிரச்சனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை தி.மு.க. இன்று கூட்டியது. அண்ணா அறிவாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. உள்பட 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.



    கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய் மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

    5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத் திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் அந்த இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது.

    காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் கருத்தினைக் கேட்காமல் புதிய அணை கட்டுவது, இரு மாநிலங்களின் நெடுங்கால நல்லுறவிற்கும் கூட்டாட்சிக் கொள்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.



    தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொது நலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.

    அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு “நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக்கூடாது. காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது” என்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.

    மத்திய அரசின் இந்த அனுமதி, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரை மட்டமாக்கிப் புதைத்து விடும் படுபயங்கர வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

    “கடிதம்” எழுதி விட்டாலே “கடமை” முடிந்து விட்டது என்று அ.தி.மு.க. அரசு, அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மத்திய அரசு விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது.

    மாநில உரிமைகளை- மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துக் கொண்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தீராத தொல்லையாகவும், தீர்க்க முடியாத வாழ்வாதாரப் பிரச்சனையாகவும் மாறும் பேரிடர் உருவாகி வருகிறது.

    அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் “மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்து, தங்கள் சுயநலத்தைத் தவிர, மாநிலத்தின் பொதுநலன் பற்றிக் கவலையில்லை என்ற போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு தமிழகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்த கவலை கொள்கிறது.

    எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் “விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை” தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

    அ.தி.மு.க. அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த அனுமதியை ரத்து செய்ய தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல், நடைபெற இருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் வி.அன்புராஜ், கலிபூங்குன்றம் பங்கேற்றனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மு.வீரபாண்டியன்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., யூசுப் குலாம் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். #DMK #MKStalin #AllPartyMeeting
    ‘கஜா புயல் பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதித்து, மத்திய அரசிடம் போதிய நிவாரண தொகையை பெற வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #anbumani #gajacyclone
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் 2 நாட்கள் சென்று பார்வையிட்டேன். வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் கொடைக்கானலிலும் சேதமடைந்து உள்ளது. பலநூறு கிராமங்களில் மீட்பு பணிக்காக ஒரு அதிகாரிகள் கூட செல்லவில்லை. மழையால் வீடுகளை இழந்து பொதுமக்கள் முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

    மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற்ற பின்னர் தான் மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்ற மனநிலையில் மாநில அரசு இருக்க கூடாது. உடனடியாக மீட்பு பணியில் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்ட எவரும் பார்வையிட வரவில்லை. மாறாக கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக பிரதமர் வந்து பார்வையிட்டு ரூ.500 கோடி நிவாரணமும் அறிவித்தார்.

    எத்தனையோ புயல் வந்தும் மாநில அரசு பாடம் கற்பிக்கவில்லை என்றால் அதிகாரிகள் எதற்கு?, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்றவை எதற்கு?. மீட்பு பணியும் நடக்கவில்லை, நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணியும் நடக்கவில்லை. குடியிருப்புகளும் சேதமடைந்ததுடன், கால்நடைகள் இறந்ததுடன், 10 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர நெல்பயிர், கரும்பு, வாழை மற்றும் முந்திரிதோப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    எனவே இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் உடனடி தேவைக்கு ரூ.50 ஆயிரம் போட வேண்டும். வேதாரண்யம் பகுதியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் சரணாலயமும் சேதமடைந்து உள்ளன.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் பொருட்களும், சேவையும் அளித்து வருகிறோம். இதுவரை ரூ.20 லட்சம் மதிப்பில் பொருட்களை வழங்கி உள்ளோம். மருத்துவ சேவையையும் அளித்து வருகிறோம். இதனை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசும் அதிகளவில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வானிலை மாற்றங்களால் எதிர்காலத்தில் இதுபோன்று பல புயல்களை சந்திக்க இருக்கிறோம். மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததும் ஒரு குறையாகும். புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன்.

    தமிழக அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதித்து, குழு ஒன்றை அமைத்து டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் பாதிப்புகளை கூறி உரிய நிவாரணத்தை பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.  #anbumani #gajacyclone
    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காக நாளை (சனிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரிதானா? என்பதையெல்லாம் சரிபார்த்து திருத்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதோடு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதற்கும் இந்த காலகட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் ஜனவரி 1-ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடக்கும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்த முகாம் கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை கட்சி பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 58 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதையடுத்து நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தலில் அதிக அளவு பெண்களை பங்கு பெற வைப்பது, கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்வது உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் கமி ஷன் திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை 27-ந்தேதி) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் மொத்தம் 8 வி‌ஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் விவாதம் நடத்த தேர்தல் ஆணையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்துக்கு 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 4.4 சதவீதம் பெண் வேட்பாளர்களே பங்கேற்றனர். அது 2014-ல் 11.9 சதவீதமாக உயர்ந்தது.

    2014-ம் ஆண்டு தேர்தலின் போது மொத்தம் களம் இறங்கிய 8251 வேட்பாளர்களில் 668 பேர்தான் பெண்களாக இருந்தனர். 2019-ம் ஆண்டு பாராமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படும் பெண்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் விரும்புகிறது. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2009-ல் 55.82 இருந்தது. 2014-ல் அது 65.54 சதவீதமாக அதிகரித்தது.

    பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து விட்டதால், அதற்கு ஏற்ப பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

    பெண்களை அதிக அளவில் போட்டியிட செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் 58 அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேட்பாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரலாமா என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. சுவீடன், அர்ஜெண்டினா, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ருவாண்டா, பொலிவியா ஆகிய நாடுகளில் பெண் வேட்பாளர்களுக்கு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு உள்ளது.

    அர்ஜெண்டினா, வங்க தேசம், பொலிவியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெண்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை சதவீதம் இடம் வழங்க வேண்டும் என்று தனி சட்டமே உள்ளது. அது போன்று உரிய இட ஒதுக்கீடு முறையை பெண்களுக்காக இந்தியாவிலும் கொண்டு வரலாமா? என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    அடுத்து தேர்தல் செலவை குறைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த சில தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்யும் செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது. இது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.

    தேர்தலில் செலவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது கருப்புப் பணத்தை தண்ணீராக செலவு செய்வதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    ஆனால் செலவு உச்சவரம்பை கட்சிகள் ஏற்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.


    தேர்தலின்போது அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமி‌ஷன் ஒரு பிரசாரம் போல செய்து வருகிறது. அதன் பலனாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. என்றாலும் பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தொழிலாளர்களை வாக்களிக்க செய்ய முடியாத நிலை உள்ளது. அத்தகைய தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்ய ஏதாவது மாற்று வழியை கொண்டு வர வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.

    தபால் ஓட்டு, இ-வோட்டிங் முறைகளை பயன்படுத்தி வேறு ஊர்களில் உள்ளவர்களையும் வாக்களிக்க செய்வது பற்றியும் திங்கட்கிழமை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்ய 5 நவீன திட்டங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கி இருக்கிறது. அவை பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து வாக்களிக்க வைப்பது, இடம் மாறிய தொழிலாளர்களுக்கு ஹெல்ப்-லைன் உருவாக்கும் திட்டங்களை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமும் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு மக்கள் மத்தியில் அமைதியான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக செல்வதை தவிர்க்க கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது. இது தவிர கடைசி 48 மணி நேரத்தில் நடக்கும் ஆன்லைன் பிரசாரம் பற்றியும் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.

    சமூக வலைதளங்களை தேர்தல் பிரசாரத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றும் விவாதம் நடத்தப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. வெற்றிக்கு சமூக வலைதளங்கள் மிகவும் உதவியாக இருந்தன. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபடி உள்ளன.

    எனவே சமூக வலைத்தள பிரசாரத்தை எப்படி கையாள்வது என்று கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். தேர்தல் தொடர்பான தகவல்கள் வெளியிட அரசியலமைப்பு பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126(1) (பி)படி அச்சு ஊடகங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தெடர்பான தகவல்களை அச்சு ஊடகங்களும் 48 மணி நேரத்துக்கு முன்பே நிறுத்தி விடுவது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. இரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை 2019-ம் ஆண்டு தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
    காவிரி ஆணைய நடவடிக்கை தெரிந்தபிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினை தொடர்பாக நீண்ட நெடுங்காலம் போராடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்குபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    அதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது நல்ல முறையில் நடந்து நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் நமக்கு 14ž டி.எம்.சி. தண்ணீர் இழப்புதான். என்றாலும் இந்த தண்ணீராவது நமக்கு நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள்.

    காவிரி நீரை நமக்கு தராமல் தடுக்க கர்நாடக முதல்-மந்திரி முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில் நமது உரிமைகளை பெரும்வகையில் உறுதியாக இருக்க வேண்டும். அதிக மழை பெய்து வரும் வெள்ளத்தையெல்லாம் நமது பங்கில் அவர்கள் கணக்கு வைத்துவிடக் கூடாது. சுமூகமான முறையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எதிரான கருத்து இல்லை.

    கர்நாடக முதல்-மந்திரி பிரதமரை சந்தித்து விட்டு வந்த பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாக கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும். எனவே இன்றைய முதல் கூட்டத்தில் நமது கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் காவிரி பற்றிய அனைத்து கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். இந்தப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. 15 ஆண்டு இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.



    காவிரி ஆணையம் தொடர்பாக குழு அமைப்பது பற்றியும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவது குறித்தும் விளக்கமாக சொன்னது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் உடனே நியமிக்கப்பட்டனர். கர்நாடக அரசும் குழு உறுப்பினர்களை நியமித்துள்ளது. இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நமது தரப்பில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பதை நமது பிரதிநிதிகளுக்கு சொல்லி இருக்கிறோம். மூத்த அமைச்சர்கள், அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் கலந்து பேசி அவர்கள் செயல்பட வேண்டிய முறைகளை தெரிவித்து இருக்கிறோம்.

    முதல் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு இப்போது கூடி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப் படி நமக்கு 177.25 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் ஒழுங்காற்று குழு கூடி நமக்கு தர வேண்டிய தண்ணீர் அளவை நிர்ணயிப்பார்கள்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்திற்கு பிறகு அது செயல்படும் விதம் நமக்கு தெரிய வரும். அதன் பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நாம் தக்க முடிவை எடுப்போம்.

    இவ்வாறு பழனிசாமி பேசினார். #CauveryManagementAuthority #EdappadiPalaniswami

    காவிரி விவகாரம் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதற்காக, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. #Kumaraswamy #Allpartymeet #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.



    இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. #Kumaraswamy #Allpartymeet #CauveryIssue
    ×