search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral Officer"

    தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று நடந்தது. #Allpartymeeting #Electionofficer

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க 9 கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

    ஆனால் 6 கட்சி பிரதிநிதிகளே பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகரும் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், வக்கீல் மனோஜ் பாண்டியன் ஆகியோரும், தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இரா. கிரிராஜன், நீலகண்டன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், தனிகாசலம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆறுமுகநயினார், ராஜசேகரன், தே.மு.தி.க. மதிவாணன், பாலசுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி பாரதிதாசன், கே.எஸ். மோகன், தேசியவாத காங்கிரஸ் சாரதி மற்றும் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (1-ந்தேதி) வெளியிடப்படுவதால், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், முகவரி மாற்றம் இறந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்குதல் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தேர்தல் ஆணையர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும், சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்தும், ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    போலி வாக்காளர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குகள் இருப்பதை கண்டு பிடித்து அதனை ஊழியர்கள் முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். #Allpartymeeting #Electionofficer

    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காக நாளை (சனிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரிதானா? என்பதையெல்லாம் சரிபார்த்து திருத்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதோடு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதற்கும் இந்த காலகட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் ஜனவரி 1-ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடக்கும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்த முகாம் கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை கட்சி பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.
    ×