search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agnipath"

    • தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அறைகூவல் விடுத்திருக்கிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • ரெயில் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து பெண் போலீசாரை தாக்கி காயப்படுத்தியது உள்பட 5 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மதுரை:

    மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மதுரை ரெயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதப்படை போலீஸ்காரர் மணிராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுரை ரெயில் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்களை பெண் போலீசார் உள்பட பலர் தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்களுக்கும் அடி உதை விழுந்தது.

    இதுகுறித்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிராஜா ஆகியோர் திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தொகுப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமிராவில் இடம்பெற்றிருந்த காட்சிப் பதிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரெயில் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து பெண் போலீசாரை தாக்கி காயப்படுத்தியது உள்பட 5 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் போலீசாரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதாக மதுரை வெங்கடேசன் எம்.பி., நிர்வாகிகள் விஜயராகவன், கணேசன், ராஜேந்திரன், ரமேஷ், நரசிம்மன், சசிகலா, பார்த்தசாரதி, அரவிந்தன் உள்பட 458 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 60 பேர் பெண்கள் ஆவர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ்காரரை மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்குவது வீடியோ காட்சிகளின் வாயிலாக தெரியவந்தது. இதுதொடர்பாக திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரை தாக்கியது களத்து பொட்டல் பகுதியைச் சேர்ந்த பிச்சை (58) என்பதும், இவர் அந்த பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது.

    • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
    • கேப்டன் பானா சிங்கின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    அவ்வகையில், அக்னிபாத் திட்டத்தை விமர்சித்து பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவை ராகுல் காந்தி இன்று பகிர்ந்துள்ளார்.

    ஒரு பக்கம் நாட்டின் பரம்வீரும், மறுபக்கம் பிரதமரின் ஆணவமும் சர்வாதிகாரமும் உள்ளது. புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டும் கேட்கப்படுமே தவிர, நாட்டின் ஹீரோக்களின் கருத்துக்கள் அல்ல என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    கேப்டன் பானா சிங்கின் ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்துள்ளார்.

    • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

    தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரும்பாலான அமைப்புகள் ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

    ஆனால் நேற்றுமுன்தினம் மாணவர் அமைப்புகள் போராட்டத்தின் போது போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலையம் பின்புறமாக உள்ளே புகுந்து ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். நேற்றும் ரெயில் மறியலுக்கு திரண்டவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

    இதையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி குறித்து ரெயில் நிலையம் முன்பு ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழையாதவாறு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
    • மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து தஞ்சைரெயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்டச்செயலர் தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் திருவாரூர்-நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்சண்முகசுந்தரம்,குடந்தை வழக்குரைஞர்ஜெயபாண்டியன்,தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில இணைச்செயலர் ராவணன் மற்றும் அருள், எழுத்தாளர் தஞ்சை சாம்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போரா–ட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • ரெயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ, மாணவிகள் போ–ராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.

    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போ–ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் 40க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்தின் பின்புற வழியாக ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை- நாகர்கோவில் ரெயில் முன்பாக மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ, மாணவிகள் போ–ராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த ரெயில்வே போலீசாரும், கோவை மாநகர போலீசாரும் போராட்ட–த்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முயன்றனர்.

    ஆனால் மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கவே போரா–ட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது அவர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    ரெயில் நிலைய வளாகத்தில் நடை–பாதையில் முழக்கங்கள் எழுப்பியபடி வந்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த திட்டம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினா்.

    அப்போது போரா–ட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்கள் காரணமாக கோவை ரெயில் நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த ‘அக்னிபாத்’ திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
    • நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ராணுவத்தில் 'அக்னிபாத்' திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்ல நல்ல தேச பக்தியுள்ள, நேர்மையான, கட்டுக்கோப்பான, செயல் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கி, இந்த தேசத்தின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் சிறந்த இந்தியாவை உருவாக்க அவர்களை வடிவமைக்க கூடிய ஓர் அருமையான திட்டம் என்றால் அது மிகையாகாது.

    தேசத்தை வலுப்படுத்த இளைஞர்களின் சக்தி மிகத்தேவை. அந்த தேவையை முறையாக நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக கட்டமைக்க மத்திய அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    இந்த திட்டம் ராணுவத்தில் புதுமையையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்துவதோடு இளைஞர்களின் பங்களிப்பால் நாட்டை வல்லரசாக மாற்றக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

    இளைஞர்கள் குறுகிய காலத்தில் தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துகொள்ளவும், பணிக்குப் பின்னர் அவர்களின் திறமைக்கு ஏற்ப ராணுவத்திலேயோ அல்லது பல்வேறு அரசுப் பணியிலேயோ, தனியார் துறை பணியிலேயோ அமைப்பதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது.

    குறுகிய காலத்தில் பணி ஓய்வு என்று இல்லாமல் தொடர் பணிக்கும் வழிவகுக்கிறது என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

    இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த 'அக்னிபாத்' திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

    நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது. உண்மையான தேசபக்தியும், சமூக சிந்தனையும் கொண்ட இளைஞர்களை சிறந்த பணிக்காக ஒன்று திரட்டும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    • டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அக்னிபாத் திட்டத்துக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றனர்.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான புகைப்படங்களை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என பொதுநல மனுவில் தகவல்
    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தப்படுகின்றன. அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில், அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இந்த திட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஜூன் 14ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    'ஆயுதப்படைகளுக்கு நிரந்தர கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அதிகாரி, 60 வயது வரை நாட்டிற்காக பணியாற்ற முடியும். குறுகியகால சர்வீஸ் கமிஷனில், ஒரு அதிகாரி ராணுவத்தில் சேர்ந்து 10 முதல் 14 ஆண்டுகள் வரை அதிகாரியாக பணியாற்றுவதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. எனினும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள், மீதமுள்ள 75% பேர் சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.' என்ற தகவலையும் வழக்கறிஞர் ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
    • காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக ஜனாதிபதியிடம் புகார் மனு அளித்தனர்.

    புதுடெல்லி:

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகினற்ன. இதேபோல் நேசனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் மனு அளித்தனர். மேலும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


    இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதனால் அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

    • போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது.
    • டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்ற இளைஞர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரூ.700 கோடி அளவுக்கு பொது சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன.

    இந்த நிலையில் சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக அப்பாவி இளைஞர்களை தொடர்ந்து போராட்டத்துக்கு தூண்டி வருகின்றனர்.

    போராட்டம் நடத்த வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள். குறிப்பாக ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் மையத்தினர்தான் இந்த செயலை செய்வதாக தெரிய வந்துள்ளது. இதனால் போராட்டத்தை தூண்டிய 34 வாட்ஸ் அப் குரூப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதனால் முக்கிய நகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை தொடர்பு கொண்டு உஷார்படுத்தியது.

    அதன்படி எல்லா மாநிலங்களும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளன. இன்று அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டம், வன்முறை அதிகம் நடந்த பீகார் மாநிலத்தில் தொடர்ந்து ரெயில் சேவை முடக்கப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று அனைத்து போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, அங்கு 9, 11-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியில் சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 2000 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப் ட்டுள்ளனர். முழு அடைப்பு காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 380 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேப்போல ஆம் ஆத்மி கட்சியினரும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    • ஏ.ஐ.ஒய்.எப்‌. இளைஞர் அமைப்பு சார்பாக சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த திட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    சிவகிரி:

    சிவகிரியில் ஏ.ஐ.ஒய்.எப்‌. இளைஞர் அமைப்பு சார்பாக அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காந்திஜி கலையரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகிரி நகர செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் விவசாய அணி நகர துணை செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் வேலுச்சாமி, ஜோதி ராமலிங்கம், குருவு, குருசாமி, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன கோசங்களை எழுப்பினர்.

    ×