search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.


    சிவகிரியில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    • ஏ.ஐ.ஒய்.எப்‌. இளைஞர் அமைப்பு சார்பாக சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த திட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    சிவகிரி:

    சிவகிரியில் ஏ.ஐ.ஒய்.எப்‌. இளைஞர் அமைப்பு சார்பாக அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காந்திஜி கலையரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகிரி நகர செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் விவசாய அணி நகர துணை செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் வேலுச்சாமி, ஜோதி ராமலிங்கம், குருவு, குருசாமி, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன கோசங்களை எழுப்பினர்.

    Next Story
    ×