search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபாத் போராட்டம்"

    • அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என பொதுநல மனுவில் தகவல்
    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தப்படுகின்றன. அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில், அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இந்த திட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஜூன் 14ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    'ஆயுதப்படைகளுக்கு நிரந்தர கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அதிகாரி, 60 வயது வரை நாட்டிற்காக பணியாற்ற முடியும். குறுகியகால சர்வீஸ் கமிஷனில், ஒரு அதிகாரி ராணுவத்தில் சேர்ந்து 10 முதல் 14 ஆண்டுகள் வரை அதிகாரியாக பணியாற்றுவதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. எனினும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள், மீதமுள்ள 75% பேர் சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.' என்ற தகவலையும் வழக்கறிஞர் ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக சமூக வலைத்தங்களில் நியூஸ் கார்டு பரவியது.
    • கலவரம் ஏற்படுத்த தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும் என நிர்மல் குமார் கூறுகிறார்

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. வன்முறையாளர்களுக்கு ராணுவத்தில் இடம் இல்லை என ராணுவ உயர் அதிகாரி கூறி உள்ளார்.

    இந்த சூழ்நிலையில், அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளவேண்டும் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக சமூக வலைத்தங்கள் மூலம் தகவல் (நியூஸ் கார்டு) பரவியது. அந்த கார்டில், "மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது – நிர்மல் குமார் ( பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு)" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நியூஸ் கார்டு வைரலான நிலையில், இது போலியாது என நிர்மல் குமார் கூறி உள்ளார். அந்த நியூஸ் கார்டையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு Fake Card என தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், அக்னிபாத் போராட்டத்திற்கு எதிராக நிர்மல் குமார் தொடர்ந்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.

    இன்று வெளியிட்ட பதிவில், "17 வயதில் ஏழை எளிய மக்களுக்கு வேலையை உறுதி செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சொத்துக்களை சேதம் விளைவிக்க மற்றும் கலவரம் ஏற்படுத்த தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும்..." என கூறியிருக்கிறார் நிர்மல் குமார்.

    ×