search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை ரெயில் நிலையம்"

    • ரெயில்வே கமிட்டி தலைவர் மோகன் சிங் எம்.பி. தலைமையில் 16 எம்.பி.,க்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தமிழ்நாட்டின் எம்.பி இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். அவர் வராதது ஏமாற்றமாக உள்ளது

    கோவை:

    கோவை ரெயில் நிலையத்தில் இந்தியன் ரெயில்வே கமிட்டி தலைவர் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி.,கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், ரெயில் நிலையத்தில் உள்ள கைத்தறி ஆடைகளையும் பார்வையிட்டனர்.

    ஆய்வுக்குப் பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரெயில்வே கமிட்டி தலைவர் மோகன் சிங் எம்.பி. தலைமையில் 16 எம்.பி.,க்கள் நேற்று கோவை வந்தனர். இன்று அவர்கள் கோவை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ரெயில்வே அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ரெயில் நிலையத்தை பார்வையிட்டனர். ஒன் ஸ்டேஷன் ஒன் பிராடக்ட் பிரதம மந்திரியின் திட்டம் எப்படி செயல்படுகிறது என நேரடியாக ஆய்வு செய்தனர்.

    ஒவ்வொரு 15 நாட்களுக்கும் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற பொருள்களுக்காக ரெயில்வே துறை அவர்களின் பொருட்களை மிக குறைந்த வாடகையில் இங்கு கடை போட்டு விற்பனை செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

    குறிப்பாக தென் தமிழகத்திற்கு திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு கோவையிலிருந்து ரெயில்வே சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம்.

    வடகோவை ரெயில் நிலையத்தை இன்னும் சீரமைத்து கோவை மத்திய ரெயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தை குறைக்க வடகோவையில் பயணிகள் ஏறி இறங்கி செல்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.

    கோவை ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை தென்னக ரெயில்வே தயாரித்து வருகிறது.

    அதனால் பக்கத்தில் உள்ள நிலங்களை எடுப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு தேவைப்படக்கூடிய நிலம் கிடைத்தால் உலகத்தரம் வாய்ந்த காந்தி நகர் ரெயில் நிலையம் போல கோவை ரெயில் நிலையத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடிய ஆலோசனை இன்று நடைபெற்றுள்ளது.நான் இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேச உள்ளேன்.

    இந்தக் குழுவில் டி.ஆர். பாலுஎம்.பி. உள்ளார். ஆனால் அவரை இங்கு வந்து பார்க்கவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா என தெரியவில்லை. இங்கு வந்துள்ள எம்பிக்கள் அனைவரும் ஒடிசா, ராஜஸ்தான், குஜராத் ,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.

    அவங்களுக்கு தற்போது மொழி பிரச்சனை இருந்தது. தமிழ்நாட்டின் எம்.பி இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். அவர் வராதது ஏமாற்றமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

    தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. கோவையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரும்பாலான அமைப்புகள் ரெயில் மறியல் போராட்டத்தை அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முன்பே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

    ஆனால் நேற்றுமுன்தினம் மாணவர் அமைப்புகள் போராட்டத்தின் போது போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலையம் பின்புறமாக உள்ளே புகுந்து ரெயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். நேற்றும் ரெயில் மறியலுக்கு திரண்டவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

    இதையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி குறித்து ரெயில் நிலையம் முன்பு ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழையாதவாறு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    ×