search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent"

    • சிவகாசி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் தெரிவித்தார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம் சாமி நத்தம் காலனியை சேர்ந்த வர் பூமிநாதன் என்ற புவனே சுவரன். இவரது மனைவி சந்தனமாரி (வயது 20). இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான்.

    கடந்த சில மாதங்களாக பூமிநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனமாரியின் தாய் முத்துலட்சுமி மகள், பேரனை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் கதவு வெளிபுறமாக பூட்டப்பட்டு இருந்தது. செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. சிலமணி நேரம் கழித்து பூமிநாதன் அங்கு வந்து கதவை திறந்தார். அப்போது முத்துலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரு அறையில் சந்த னமாரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சந்தனமாரி ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்ப தாக முத்துலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 29). இவரது கணவர் போதுராஜா. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    மகாலட்சுமி உடல்நிலை பாதிப்பால் அவதிபட்டு வந்தார். பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமா கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று திருச்சுழி பஸ் நிலையத்திற்கு வந்த மகாலட்சுமி விஷம் குடித்தார். பின்னர் கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக வந்து மனைவியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகாலட்சு மியின் தாய் அய்யம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (31). திருமணம் ஆகவில்லை. தனியாக ஆடிட்டிங் தொழில் பார்த்து வந்தார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கினார். இந்த நிலையில் கடன் கொடுத்த 0வர்கள் நெருக்கடி கொடுத்ததால் சகோதரர் மாரியப்பனுடன் சேர்ந்து பூர்வீக சொத்தை விற்று கடனை அடைத்தார்.

    இதனால் அவர் மனவேத னையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில் சகோதர னுக்கு சொந்த மான நிலத்திற்கு சென்று விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயன்றுள்ளார்.
    • மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தேவி (வயது 20). கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    இது தொடர்ந்து நீடிக்கவே கடந்த 2-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ராஜ்குமார், தேவியை வர வழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் ராஜ்குமார் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தேவி சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தேவி அழுது கொண்டே புகார்களை கூறினார். அப்போது அவரது நடவடிக் கையில் மாற்றம் இருந்தது. பேசி கொண்டிருந்தபோது தேவி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தட்டி எழுப்பி கேட்டபோது, வலிப்பு மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு விட்டதாக தெரி வித்தார். இதையடுத்து தேவியை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜபாளைய போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
    • வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சீனிவாசன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் தென்காசி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் மற்றொரு வாலிபரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

    தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தெற்கு வெங்காநல்லூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சக்தி கருப்பசாமி (வயது 23) என தெரியவந்தது.

    அந்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் இருக்கவைத்து விட்டு அவர்கள் மீண்டும் ரோந்துப் பணிக்கு சென்றனர். அப்போது அங்கு ரமேஷ் என்ற காவலர் மட்டும் எழுத்தர் அறையில் இருந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் சக்தி கருப்பசாமி தனது கழுத்தில் அணிந்திருந்த டாலரில் வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து கழுத்து, மார்பு, கைகளில் கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்ட காவலர் ரமேஷ் ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது கத்தியை வைத்து மேலும் கிழித்துக்கொள்ள அந்த வாலிபர் முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த ரமேஷ், அவரை தடுத்து அவர் கையிலிருந்த கத்தியை பிடுங்கிவைத்து வாலிபரை எச்சரித்து அமரவைத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோடு அடுத்த பெரிய க்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 33). பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 11ம் தேதி உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரியக்கொள்ளியூருக்கு வந்தார்.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பகண்டை கூட்டுரோடு போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார்
    • புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகள் சிவப்பிரியா (வயது 24). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தாய் உமா மகேஸ்வரி புகார் அளித்தார். அதில் விருத்தா சலத்தை அடுத்த எருமனூரை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்குமாறும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 25 வயது மதிக்கதக்க வாலிபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.
    • வாலிபர் யார், எப்படி விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவில்,நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் சுமார் 25 வயது மதிக்கதக்க வாலிபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வாலிபர் யார், எப்படி விபத்து ஏற்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆடை வடிவமைப்பு குறித்த போட்டோ சூட் நடத்தி வருகிறேன்.
    • தலையணை உறை, திரைச்சீலைகள் போன்றவை பொதுவாக ஒவன் துணியில் தயாரிக்கப்படும். ஆனால் நான் பின்னல் துணியில் தயாரிக்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் பின்னலாடையில் அசத்தலான நவீன ரக ஆடைகளை உருவாக்கி அசத்தி வருகிறார். திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டே கொரோனா காலத்தில் வைரசை விரட்டும் வகையில் வேப்பிலை, வாழையிலை முககவசத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், திருப்பூரில் பேஷன் டிசைனிங் கல்லூரியில் பட்ட படிப்பு படித்துள்ளேன். குடும்பத்தில் வறுமை நிலை இருந்தாலும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் கொரோனா சூழலில் பாதுகாப்பாக என் துறை சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று வேப்பிலை துணி முககவசம் தயாரிக்க திட்டமிட்டேன். வேப்பிலையை காயவைத்து அரைத்து பொடியாக்கி கெமிக்கல் கலக்காத சாயமாக மாற்றி அதில் துணிகளை நனைத்து எம்பிராய்டரி தைப்பது போல் தைத்து காதுகளில் அணிந்து கொள்ளும் அளவுக்கு மாஸ்க் தயாரித்தேன்.

    மேலும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை தயார் செய்துள்ளேன். அதன் படி கொரோனா உருவம் செய்து பிரிண்டிங் இட்டு செய்துள்ளேன். தலையணை உறை, திரைச்சீலைகள் போன்றவை பொதுவாக ஒவன் துணியில் தயாரிக்கப்படும். ஆனால் நான் பின்னல் துணியில் தயாரிக்கிறேன். இதை தவிரவும் புது வித ரகங்களில் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் என்னிடம் ஆலோசனை பெற வருவோருக்கு மார்டன் வடிவமைப்பு குறித்து விளக்கம் அளிக்கிறேன். பேஷன் ஷோக்களுக்கு வடிவமைப்பு செய்து தருகிறேன். ஆடை வடிவமைப்பு குறித்த போட்டோ சூட் நடத்தி வருகிறேன். பெண்களுக்கு் பிரத்யேக முறையில் மயில் தோகை முறையில் அலங்கார ஆடைகளை தயாரித்து கொடுக்கிறேன். சென்னையில் நடந்த நட்சத்திர மாடல் அழகுப்போட்டியில் நான் தயாரித்த ஆடைகளை அணிந்தவருக்கு பரிசு கிடைத்தது .இதனை அங்கீகரமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிக வளாகத்தில் தனதுஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
    • மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 69 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஜமீலா பானு பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 18-ந்தேதிமதியம் ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர்திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தனதுஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த ரகுமான்கான்(வயது 26) என்பவர் ஜமீலா பானு மற்றும் அவருடைய மகளைகொலை செய்யும் நோக்கத்தில் வெட்டுக்கத்தியால் இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது.

    இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமான்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரகுமான்கான் மீது சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ்நிலையத்தில் பெண்களை துன்புறுத்துதல் பிரிவில் ஒரு வழக்குஉள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால்அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கமாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து கோவை மத்தியில் சிறையில் உள்ள ரகுமான்கானிடம், ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 69 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • சதீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    • ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் செல்போன் திருடுவதாகவும் ரயிலில் பயணம் செய்ய உடைமை களுடன் வரும் பயணிகளிடம் கைப்பைகளை திருடுவதாகவும் திருப்பூர் ரயில்வே போலீசருக்கு புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்ப டையில் திருப்பூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையி லான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலைத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பதும் இவர் தான் திருப்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலக்குமார் என்பவரிடம் செல்போனையும் திருப்பூர் தாராபுரம் ரோட்டை சேர்ந்த இளமுருகன் என்பவரிடம் இருந்த கைப்பையை திருடி அதிலிருந்த 1 பவுன் நகை மற்றும் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அவனிடம் இருந்த 2 செல்போன்கள் 1 பவுன் நகையை மீட்டனர். பின்னர் சதீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் வசித்துவந்தவா் விஜய் (23), கட்டுமானத் தொழிலாளி. இவா், உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா். அப்போது, விஜய்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

    இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 34 வயது பெண்ணை பார்க்க மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த அந்த வாலிபர் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது.

    இதனை அடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த அந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.இதையடுத்து பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றி மோட்டார் சைக்கிளில் இருந்தது தங்க நகைகளா அல்லது கவரிங் நகையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற வாலிபர் யார்? எதற்காக மோட்டார் சைக்கிளில் விட்டுவிட்டு அவர் தப்பி சென்றார்? அந்த வாலிபர் பார்க்க வந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×