search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent"

    • மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் முனீஸ்வ–ரன் (வயது 34). இவரது மனைவி இசக்கியம்மாள் (30). கூலி வேலை பார்த்து வரும் முனீஸ்வரன், திரும–ணமான நாள் முதல் தின–மும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    2 குழந்தைகள் பிறந்த நிலையிலும் அவர் குடிப்ப–ழக்கத்தை மறக்கவில்லை. இதற்கிடையே தனது உற–வுக்கார பெண் ஒருவருடன் முனீஸ்வரனுக்கு ெதாடர்பு இருப்பது மனைவி இசக்கி–யம்மாளுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இத–னால் கணவன், மனைவிக்கி–டையே மேலும் பிரச்சினை முற்றியது.

    இதையடுத்து இசக்கியம்மாள் குழந்தைகளை அழைத் துக்கொண்டு, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். அவ்வப்போது முனீஸ்வரன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று காலை மனைவி, பிள்ளைகளை பார்த்து தான் வாங்கிச்சென்ற பல–கா–ரங்களை கொடுத்து–விட்டு வந்தார். பின்னர் அதேநாளில் இரவு 11 மணிக்கு மீண்டும் அங்கு சென்றார். அப்போது மனைவி அவரை கண்டித் தார். இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், உன்னையும், உன் தாய் கூடம்மாளையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி கத்தரிக்கோலால் அவர்களை குத்தி காயப்ப–டுத்தி உள்ளார்.

    உடனே அங்கு சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள், அக்கம்பக்கத்தினர் திரண்ட–னர். இதையடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியினர் போலீசா–ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார், முனீஸ்வரன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.

    அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.

    இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.

    இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் அந்தனப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 21). இவர் தனது நண்பர்க ளோடு காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்திற்கு உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருடன் உடன் சென்ற நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் கோகுலை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வாலிபரின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை யில் சேர்த்த அவரது நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நண்பர்களோ டு மது அருந்த சென்ற 21 வயது வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. கோகுல் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இறந்தாரா, அல்லது வேறு காரணமாக என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார்‌ மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் குமார் (வயது 22) அவரது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஜேடர்பாளையம் பரிசல் துறை பகுதி காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் மட்டும் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீ சார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவி யுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை நேற்று மாலை வரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டாவது நாளாக ஜேடர்பாளையம் போலீசார் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் தேடி வந்தனர்.

    தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றின் எதிர்கரை யான ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பகுதி காவிரி ஆற்றின் ஓரத்தில் சதீஷ்குமார் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.
    • செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சுனிதா. சம்பவத்தன்று அவரது தாத்தா வீட்டில் சென்றார். அங்கிருந்த அவர் திடீரென மாயமானார்.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் தாத்தா பெரியசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலைக்கு செல்வதாக தந்தையிடம் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    • எங்கு தேடியும் சுகாசினி கிடைக்காததால் இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே அங்காளம்மான் கோவில் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகள் சுகாசினி (வயது 20). சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சாமிதுரை பாகூரில் தங்கி வேலை பார்த்து மாதம் ஒரு முறை அல்லது நீண்ட நாட்கள் கழித்து மேல்புவனகிரியிலுள்ள தனது வீட்டிற்கு வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிதுரை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

    மீண்டும் நேற்று இரவு பாகூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த சுகாசினி திடீரென மாயம் ஆனார். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் இவரது தந்தையை பஸ்சில் வேலைக்கு ஏற்றி விட சென்றுள்ளனர் என நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகாசினி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து சுகாசினி தாய் பேபி இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் சுகாசினி கிடைக்கவில்லை. இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுகாசினி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      சேலம்:

      அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டம், போகா அருகே நகோபரா கிராமத்தை சேர்ந்த ராஜாக் ரப்பா என்பவர் மகன் ப்ரோஹலாத் ரப்பா (வயது 35). இவர் கடந்த மே மாதம் 25-ந் தேதி, தனது உறவினரான அக்ஷய் ரப்பா என்பவருடன், குவாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

      இந்த ரெயில் கடந்த மே மாதம் 30-ந் தேதி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது, தண்ணீர் குடிப்பதற்காக 4-ம் எண் நடைமேடையில் இறங்கினார். அவர் திரும்பி வருவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

      இதன் பின்னர் ப்ரோஹலாத் ரப்பாவை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ப்ரோஹலாத் ரப்பாவின் அக்கா வினிதா ரப்பா (37), சேலம் ரெயில்வே போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • மதுரையில் வாலிபர் திடீர் மாயமானார்
      • சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திருமங்கலம்

      திருமங்கலம் டி.உச்சப் பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது42), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் தாயார் இறந்ததில் இருந்தே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

      அவர் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த காளிராஜன் என்ற வாலிபர் வந்தார்.
      • போலீசார், சிங்காநல்லூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

      பல்லடம்:

      பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த காளிராஜன் என்ற வாலிபர் வந்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், தான் சிங்காநல்லூரில் வேலை செய்வது வருவதாகவும், தனக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் புகார் கொடுக்க வந்ததாக கூறினார். அதற்கு போலீசார், சிங்காநல்லூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து புலம்பிக் கொண்டே சென்ற அவர், திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை மீட்டு காப்பாற்றினர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

      • இளம்பெண்-வாலிபர் தற்கொலை செய்தனர்.
      • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

      மதுரை

      இஸ்மாயில்புரம் 6-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (28). இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

      கோச்சடை கலை சம்பளக்காரர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

      • கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
      • படுகாயமடைந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

      சுவாமிமலை:

      தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் தமிழ்வளவன் (வயது 28).

      இவர் வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார்.

      இந்நிலையில் வில்லிய வரம்பலில் நேற்று இரவு நடந்த கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது சுவாமி புறப்பாடு நடந்தது.

      இதனை தமிழ்வளவன் கோவில் சுவர் மீது ஏறி வேடிக்கை பார்ப்பதற்காக மண்டபத்தில் இருந்த பொம்மையை பிடித்துக் கொண்டு ஏறி உள்ளார்.

      இதில் பொம்மை உடைந்து எதிர்பாராத விதமாக வளவன் தவறி விழுந்தார்.

      தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

      ஆனால் செல்லும் வழியில் தமிழ்வளவன் இறந்தார்.

      இதுகுறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • மேலே சென்ற மின் வயர்மீது எதிர்பாராத விதமாக கைவைத்து விட்டார்.
      • அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

      தஞ்சாவூர்:

      தஞ்சை ஞானம் நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவர் தஞ்சை- நாகை ரோட்டில் புதிதாக ஒரு நிறுவனம் தொடக்க விழா சம்பந்தமாக விளம்பர பதாகை வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் வயர்மீது எதிர்பாராத விதமாக கை வைத்து விட்டார்.

      இதில் மின்சாரம் தாக்கி ஆகாஷ் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இறந்தார்.

      இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×