search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viruppa manu"

    • முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.

    முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • அண்ணா அறிவாலயத்திலும், அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் நேர்காணலுக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது.

    இதில் தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டது.

    அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொ.ம.தே.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1-ந்தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் கொடுத்தனர்.

    இதில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, நீலகிரியில் ஆ.ராசா, வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    இதே போல் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் பெரம்பலூர் தொகுதிக்கும், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ், பாரத் ஸ்கேன்ஸ் அதிபர் இம்மானுவேல், முக்கூடல் பேரூராட்சித் தலைவர் லெட்சுமணன் ஆகியோர் நெல்லை தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

    இதில் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பெயரில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்திருந்தனர்.


    அந்த வகையில் 40 தொகுதிகளுக்கும் மொத்தம் 2 ஆயிரத்து 984 பேர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.

    விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களது ஆதரவாளர்கள், பரிந்துரைத்தவர்களை அழைத்து வரக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது.

    நேர்காணலுக்காக வெளிமாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் நேற்றிரவு சென்னை வந்துவிட்டனர். இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் 8 மணியில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணலுக்காக வந்து காத்திருந்தனர்.

    இவர்கள் அமருவதற்காக அண்ணா அறிவாலயத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு நாற்காலிகளும் நிறைய போடப்பட்டிருந்தது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு அறிவாலயம் வந்ததும் அவரது அறையில் நேர்காணல் தொடங்கியது.

    முதலில் கன்னியாகுமரி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவர்களை முதலில் அழைக்கப்பட்டனர்.

    ஒவ்வொருவரிடமும் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்பது போன்ற கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நேர்காணலின் போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரியை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கான நேர்காணல் நடந்தது.

    தூத்துக்குடி தொகுதி நேர்காணலின் போது கனிமொழி எம்.பி. வந்திருந்து வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி சொன்னார். இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் நேர்காணல் வேகமாக நடைபெற்றது.

    இதே போல் அ.தி.மு.க. கட்சியிலும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரிய 2 ஆயிரத்து 475 பேருக்கும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

    அதில் இன்று காலை சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் நேர்காணலை நடத்தினார். அவருடன் தலைமைக் கழக மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்களும் நேர்காணலில் அமர்ந்திருந்தனர்.

    விருப்ப மனுவின் போது பணம் கட்டிய அசல் ரசீதுடன் வந்தவர்களை சரி பார்த்து ஒவ்வொருவரையும் நேர்காணலுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நேர்காணலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் 'சீட்' கேட்டு வந்தவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் இருக்கிறீர்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்? இதற்கு முன் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறீர்களா? எவ்வளவு பணம் செலவிழக்க முடியும்? உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது? என்பது போன்ற விவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    இன்றைக்கு 20 தொகுதிக்கு நேர்காணல் நடப்பது போல் நாளைக்கும் பொள்ளாச்சி, திண்டுக்கல், கருர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்திலும், அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் நேர்காணலுக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இவர்களது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது.

    ஒவ்வொரு நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தபடி புன்னகை ததும்ப நேர்காணலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது.
    • தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

    அ.தி.மு.க.வில் தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

    இந்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இன்று நேர்காணலை நடத்துகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார்.

    அதே போல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது.

    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
    • 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு தனி அணியாக போட்டியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் கடந்த 21-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர். 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    இன்று காலையில் இருந்து தலைமை கழகத்தில் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. விண்ணப்பப் படிவங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் வரிசையில் நின்றனர்.

    காலை நிலவரப்படி 1,500 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். விருப்ப மனுவுடன் வேட்பாளர் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்துவதால் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் பெறப்பட்டதாக தெரிகிறது. தலைமை கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை தொகுதிகள் வாரியாக பிரித்து ஒழுங்கு செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து இன்று ஏராளமான நிர்வாகிகள் விருப்பமனு கொடுத்தனர். அ.தி.மு.க.வுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்கிறது என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனுக்களை கொடுப்பதில் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    இந்நிலையில், விருப்ப மனு பெறும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்.21ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000-ஐ செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #ADMK #EPS #OPS
    தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.



    இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நாளை தொடங்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனு விண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுவினை கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் வருகிற 28-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

    புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விழைவோர் இவ்விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்.


    மாற்றத்தை விரும்புவோர் விருப்ப மனுவில், ‘தான் தகுதியானவர் என்று நினைப்பவரை பரிந்துரைக்கலாம் அல்லது தமக்கே அத்தகுதிகள் இருப்பதாய் நம்புபவர் இம்மனுவை சமர்ப்பிக்கலாம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்ப மனுவைப் பெற விண்ணப்பத்தொகை ரூ.10 ஆயிரம் செலுத்துதல் அவசியம்.

    விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், மக்கள் நீதி மய்யத்தின் சென்னை தலைமையகத்தில் வருகிற 7-ந்தேதிக்கு பிறகு கட்சியின் “தேர்தல் குழு” அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும்.

    சாதனை என்பது சொல் அல்ல, செயல். நாளை நிகழப்போகும் மாற்றத்தை நமதாக்கிக் கொள்ள விரைந்து விண்ணப்பிக்கவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. #DMK

    சென்னை:

    தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது.

    விருப்பமனு பெறுவதற்காக தி.மு.க.வினர் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.

    விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தி.மு.க.வினர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர். மனுவை பூர்த்தி செய்து ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி மனுவை அளிக்க வேண்டும்.

    விருப்பமனுவில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. விண்ணப்பதாரரின் பெயர், பாராளுமன்ற தொகுதியின் பெயர், விண்ணப்பதாரரின் முகவரி, தொழில், எத்தனை வருடம் கட்சியில் உறுப்பினராக இருக்கிறீர்கள்? ஒன்றியம், நகரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண், கட்சியில் இப்பொழுது வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணித்துறை பொறுப்பில் இருந்திருக்கிறீர்களா?

    உள்ளாட்சி அமைப்பு பொறுப்பில் இருந்திருக்கிறீர்களா? கட்சிக்காக போராட்டம் நடத்தி எத்தனை முறை சிறை சென்றுள்ளீர்கள்? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா? வேறு அரசியல் கட்சியில் இருந்துள்ளீர்களா? உள்ளிட்ட 14 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

    வருகிற 7-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.  #DMK
    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் நம் இந்திய நாட்டில் 17-வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.



    பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

    மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.20ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    ×