search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamizhaga Vetri kazhagam"

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • தவெக நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
    • நீட் குறித்து விஜய் கருத்தை வரவேற்கிறோம்.

    சென்னை:

    நீட் தேர்வு முறைகேடால் நீட் மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.

    நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    இந்நிலையில் நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. விஜயின் கருத்தை வரவேற்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
    • விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    சென்னை: 

    நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    இதனிடையே திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.

    நீட் தேர்வு மட்டுமல்லாது கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி இருக்கிறாரே என்று கேட்டதற்கு...

    வரவேற்கத்தக்கது. கொஞ்ச கொஞ்சமாக he is on the line என்று கூறினார்.

    • உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன்
    • உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா பேசியதாவது:-

    விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன். உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.

    தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவி சண்முகப்பிரியா பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
    • நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

    * நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    * மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?

    * நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    * மாநில மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை கூடாது.

    * கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

    விஜய் தனது உரையின்போது மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    NEET நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

    • கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு விஜய் வருகை.

    தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.

    இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர். 

    • சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.
    • பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.

    பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.
    • இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும்

    நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். 

     


    அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டராக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.

    ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும்.

    நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர் சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான்.

    விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவை தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அது வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும்.

    விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கனும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கனும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கனும்.

    நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு வருகை தந்துள்ளார்.

    அங்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.

    இரவு 8 மணிக்குள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்றடைவார் என தகவல் வெளியான நிலையில், விஜய் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

    சம்பவம் குறித்து காலை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் நேரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையை தொடர்ந்து, கருணாபுரம் கிராமத்திற்கும் விஜய் செல்லயிருப்பதாக கூறப்படுகிறது.

    • தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.
    • விஜய் மக்களை சந்திக்க திட்டமிடுவதாக தகவல்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பதிவு செய்யப்பட்டது.

    பிறகு, தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது. உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக செயலியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டு இருந்தது.

    இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது. இடையில் வரும் மற்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், விஜய் விரைவில் மக்களை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுக்க மக்கள் சந்திப்பு பயணங்கள் மூலம் விஜய் மக்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கை பற்றிய தகவல்கள் கட்சியின் முதல் மாநாட்டில் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை, உள்கட்டமைப்பு கட்சி வளர்ச்சி திட்டங்கள் என ஒவ்வொன்றையும் கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநாடு நடத்துவற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் விஜய் ஆலோசனையின் பேரில் புஸ்ஸி ஆனந்த் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

    முதல் மாநாடு என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார்.


    வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இதற்காக பயனாளிகளின் பெயர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

    மாநாடு, பிறந்தநாள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு, விஜய் பிறந்தநாள் விழா பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் குமார பாளையம் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் ரூ.8 லட்சம் செலவில் கல்வி உதவித்தொகை தலா ரூ.3000 வீதம் 9 பேர்களுக்கும், ரூ.2000 வீதம் 6 நபர்களுக்கும் சில்வர்குடம் 70 நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 80 பேருக்கு சீருடை, 300 பேருக்கு அரிசி, 350 பெண்களுக்கு புடவை மற்றும் முதியோர் உதவித் தொகை, தையல் எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மருத்துவ உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாலை கரூரிலும், தொடர்ந்து சேலத்திலும், நாளை கோயம்புத்தூரிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

    நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதுவரை 5 நாட்களில் 27 இடங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடி வடைந்து

    உள்ளது. அனைத்து ஊர்களிலும் நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    அடுத்தடுத்து அதிரடியாக விஜய் எடுத்து வரும் பணிகள் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் தேதி, இடம் விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    • தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சமபந்தி நடைபெற உள்ளது.
    • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சி மற்றும் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கட்சி பணிகளோடு மக்கள் நலப்பணிகளிலும் தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

    ஏழை மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் தளபதி பயிலகம் என்ற பெயரில் மாலை நேர பயிற்சி வகுப்பும் கட்சி சார்பில் நடந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணி மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி ஏழை பொதுமக்களின் பசியை போக்குவதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மாபெரும் சமபந்தி விருந்து விஜய் உத்தரவுக்கு இணங்க பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சமபந்தி நடைபெற உள்ளது.

    சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

    இதுபற்றி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வருகிற 28-ந்தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழி காட்டும் விதி முறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து சமபந்திக்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். உலக பட்டினி தினத்தையொட்டி கடந்த ஆண்டும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமின்றி தஞ்சை, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் பொதுமக்களுக்கு கட்சி சார்பில் அன்னதானம் நடந்து வருகிறது.

    சமபந்தியில் உணவுடன் வடை, பாயாசம், மைசூர் பாக்கு, சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், மோர், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குளம் அருகே நடைபெறும் சமபந்தி விருந்தை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

    ×