search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
    • தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை 2009 ஜூலை மாதம் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    படப்பிடிப்பில் பிஸியாக இருந்த போதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் கசிந்தது. 

    'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

    விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்ட நிலையில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

    இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார். 

    2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக விரைவில் மாற்றம் செய்ய நடிகர் விஜய் அப்போது மனதில் முடிவு செய்திருந்தார். அதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ' தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் இன்று வெளியிட்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    • நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
    • நான் உங்கள் தளபதி, நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்.

    தமிழ்சினிமாவில் மிக பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.சமீபத்தில் வெளியான இவரது 'லியோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

    படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் போதிலும் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். மக்கள் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

    'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது, "தளபதி என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள், நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்," என அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக தெரிவித்தார்.

     


    விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் சென்னையை அடுத்த பனையூரில் நடந்துவருகிறது.

    இந்நிலையில், விஜய்மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்து ஏராளமான விஜய் மக்கள்இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய், நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளார். இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும், ஆகியவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

    2026- ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் விஜய் மக்கள்இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் செய்து நடிகர் விஜயை தலைவராக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் பிப்ரவரி 4-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
    • பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணியில் இருந்தே மாவட்ட தலைவர்கள் வரத் தொடங்கினர். விஜய் காலை 9 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு பால், ரொட்டி, சத்துணவுகள் வழங்கி வருகிறார்கள்.

    அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

    இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 6.30 மணியில் இருந்தே மாவட்ட தலைவர்கள் வரத் தொடங்கினர். விஜய் காலை 9 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.


    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.


    பயனாளிகள் கலந்து கொள்ள வழங்கப்பட்ட டோக்கன்.


    தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின்சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராபின்சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார்.

    இதேபோல் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

    மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

    • கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
    • நெல்லை கே.டி.சி. நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

    நெல்லை கே.டி.சி. நகரில் காலை 11 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்குகிறார்.

    • முகாமில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மதியம் 1 மணிக்கு மேலும் மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையொட்டி மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு விஜய் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

    இந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 25 இடங்களில் நடந்தது.

    காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் நடந்த மருத்துவ முகாமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    முகாமில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு மேலும் மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தென்சென்னை வட சென்னை, மத்திய சென்னையில் 25 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததுடன் மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்கள்.

    • மருத்துவ முகாம்கள்காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டது.

    சென்னை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஜய் உத்தரவின் பேரில் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு உணவு, பாய், பால், ரொட்டி, ஸ்டவ் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    இது குறித்து மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-ந்தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்து வர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத் துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வடசென்னை

    46-வது வார்டு: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில்.

    45-வது வார்டு: பி.பி.ரோடு, கரிமேடு, வியாசர்பாடி, தீயணைப்பு நிலையம் அருகில்.

    35-வது வார்டு: கொடுங்கையூர், முத்தமிழ்நகர், பள்ளிவாசல் அருகில்.

    72-வது வார்டு: கஸ்தூரிபாய் காலனி, ஏ பிளாக், கன்னிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில்.

    75-வது வார்டு: சுப்பு ராயன் 4-வது தெரு.

    65-வது வார்டு: முத்து மாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் எஸ்.பி.ஐ. அருகில்.

    41-வது வார்டு: கருமாரி யம்மன் தெரு, தூய இருதய மெட்ரிகுலேசன் பள்ளி அருகில், கொருக்குப் பேட்டை.

    தென்சென்னை

    141-வது வார்டு: காமராஜ் காலனி, தி.நகர் பஸ் நிலையம் அருகில்.

    133-வது வார்டு: ஆனந்தன் தெரு, முப்பத்தம்மா கோவில் அருகில்.

    132-வது வார்டு: ஐந்து விளக்கு, புண்ணியகோடி கல்யாண மண்டபம்.

    134-வது வார்டு: பிருந்தா வனத் தெரு, ஹவுசிங் போர்டு அருகில்.

    130-வது வார்டு: அம்மன் கோவில் தெரு, கிழக்கு வடபழனி முருகன் கோவில் அருகில்.

    135-வது வார்டு: 83-வது தெரு, மேல்புதூர், அசோக்நகர்.

    131-வது வார்டு: 61-வது தெரு, அம்மா உணவகம் அருகில், நல்லாங்குப்பம்.

    180-வது வார்டு: திருவான்மியூர் இ.சி.ஆர். சாலை, ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.

    178-வது வார்டு: தரமணி, தந்தை பெரியார் நகர், தரமணி பஸ் நிலையம் அருகில்.

    121-வது வார்டு: கணேசபுரம் அருகில், சிட்டி சென்டர் பின்புறம்.

    123-வது வார்டு: லாக்நகர், மந்தவெளி ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.

    139-வது வார்டு: பாரதிதாசன் காலனி, ஜாபர்கான்பேட்டை அருகில்.

    140-வது வார்டு: சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில்.

    120-வது வார்டு: முத்தையா தோட்டம் அருகில்.

    மத்திய சென்னை

    58, 99, 77-வது வார்டுகள்: ஐயப்ப மைதானம், திரு நாராயணகுரு சாலை, பெரியமேடு, சூளை, சென்னை டவுட்டன் பாலம் அருகில்.

    108-வது வார்டு: எம்.எஸ்.நகர், அம்பேத்கர் திடல், மங்களபுரம் போலீஸ் பூத் அருகில், எழும்பூர்.

    84, 95-வது வார்டு: திரு வெங்கடய்யா முதல் தெரு, வில்லிவாக்கம்.

    98-வது வார்டு: குட்டி யப்பன் தெரு, பம்பிங் ஸ்டே ஷன், அயனாவரம் மன நிலை காப்பகம் அருகில், அயனாவரம், கீழ்ப்பாக்கம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
    • மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.


    இதையடுத்து நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் "வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


    இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை காப்பாற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


    • விஜய் ஆலோசனையின்படி மக்கள் நலன் திட்டங்களை இயக்கத்தின் மூலம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்.
    • நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதியும், வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    சென்னை:

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாட சாலை திட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக இளைஞர்கள், மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளபதி விஜய் நூலக திட்டம் நேற்று 11 இடங்களில் தொடங்கப்பட்டது.

    முதற்கட்டமாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் தொகுதி சி.ஐ.டி.யூ காலனி, பாலாஜி நகர் 3-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பல்லாவரம், அரியலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை உள்பட 11 இடங்களில் நேற்று நூலகம் தொடங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களிலும் கோவையில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், தென்காசியில் 2 இடங்களிலும், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 21 இடங்களிலும் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது.

    நூலக திட்டம் குறித்து மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் ஆலோசனையின்படி மக்கள் நலன் திட்டங்களை இயக்கத்தின் மூலம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம். அந்த வகையில் மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நூலக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    முதற் கட்டமாக நேற்று 11 இடங்களில் தொடங்கி உள்ளோம். இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி 21 இடங்களில் புதிய நூலகங்கள் தொடங்க உள்ளோம். விரைவில் 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பார்வை சமூக வலைதளங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு திறன் குறைந்து வருகிறது.

    இதை கட்டுப்படுத்தும் விதத்தில் நூலக திட்டத்தை கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் விஜய் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தி வருகிறோம். அவரவர் வசதிக்கேற்ப நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதியும், வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நூலகத்தில் மாணவ-மாணவிகளின் பொது அறிவினை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
    • மாணவ-மாணவிகள் நல்ல முறையில் விஜய் நூலக திட்டத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி ஏழை குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு சிறப்புடன் நடந்து வருகிறது. தொடர்ந்து அடித்தட்டு மக்களின் தேவைக்காக இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது.

    இதன்மூலம் பட்டா மாற்றம், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீதிமன்ற வழக்கு குறித்த சட்ட உதவிகள் ஏழை பொதுமக்களுக்கு இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த அதிரடி திட்டமாக மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு திறனை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 'தளபதி விஜய் நூலகம்' என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது.

    இதுபற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் ஆலோசனையின் பேரில் மக்கள் இயக்கத்தின் அடுத்த திட்டமாக நூலகம் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.

    முதல்கட்டமாக நாளை 11 இடங்களில் தொடங்க இருக்கிறோம். செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் தொகுதி சி.டி.ஓ. காலனி பாலாஜி நகர் 3-வது தெருவிலும், பல்லாவரம் மும்மூர்த்தி நகர் 5-வது தெருவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகங்களை காலை 10 மணியளவில் நான் தொடங்கி வைக்கிறேன்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 3 இடத்திலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, வடசென்னை கிழக்கு, வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட 11 இடங்களில் நாளை காலை நூலகம் திறக்கப்பட உள்ளது.

    இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 4 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்கள், தென்காசியில் 2 இடங்கள் மற்றும் புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 21 இடங்களிலும் நூலகம் தொடங்க இருக்கிறோம். மொத்தம் 32 இடங்களில் நூலகத்தை தொடங்க இருக்கிறோம்.

    இதைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் ஆலோசனையின் படி 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். நூலகத்தில் மாணவ-மாணவிகளின் பொது அறிவினை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

    தலைவர்கள் வரலாறு, பொது அறிவு புத்தகங்கள், வரலாற்று கதைகள் என பல்வேறு அரிய புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். மாணவ-மாணவிகள் நல்ல முறையில் இந்த திட்டத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.
    • பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்

    அந்த வகையில் அன்னதானம், இரவு நேர பாட சாலை போன்ற புதிய திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் அந்த திட்டங்கள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

    ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களை கொண்ட இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

    இதையொட்டி முதல் கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தலைவர் தன்ராஜ் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று மாலை தொடங்கப்பட்டது.

    இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    நமது தளபதி விஜய் ஆலோசனையின்படி மக்கள் திட்டங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் மக்கள் இயக்கம் மூலம் செய்து வருகிறோம். இப்போது ஏழை பொது மக்கள் வசதிக்காக இலவச சட்ட மையத்தை தொடங்கி உள்ளோம். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வதும், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமயை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

    சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும் தனியார் நிறுவனத்தால் வங்கி கடன் வீட்டுக் கடன் வாங்கி பாதிக்கப்படுவோருக்கு சட்ட உதவியும், வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும். சட்டப் படிப்பு படிக்க வரும்புவோருக்கு வழிகாட்ட வேண்டும். பொது பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண வழி வகைகள் போன்ற மக்களுக்கு பயனுள்ள விடியங்களை நம் இயக்கத்தினர் இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சிறப்பாக நல்ல முறையில் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×