

வேலூர்:
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேலூர் காட்பாடி வஞ்சூர் ஊராட்சியில் நலிவுற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு வாரந்தோறும் விலையில்லா ரொட்டி, பால், முட்டை மற்றும் சிறுதானியம் வழங்கும் திட்டம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில்இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வஞ்சூர் கிளை மன்ற நிர்வாகிகள் வினோத், குமார், பூபாலன்,
சுரேஷ், சஞ்சய், முனிசாமி, வெங்கட், சிலம்பரசன், கோகுல், காட்பாடி ஒன்றிய துணை தலைவர் கோவிந்தன், காட்பாடி ஒன்றிய துணை அமைப்பாளர் ரமேஷ், சேனூர் நிர்வாகிகள் நவீன் குமார், பிரசாந்த், தினகரன், முகேஷ், டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.