search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer sun"

    • இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள்.
    • சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம்.

    சூரியனிலிருந்து வரும் வெப்பம் கூந்தலுக்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது. இது உலர்ந்த உடையக்கூடிய மற்றும் கடினமான கூந்தலை உண்டாக்குகிறது. ஏற்கனவே பளபளப்பாக இருக்கும் கூந்தலே சூரியனின் வெப்பத்தால் பல விளைவுகளை சந்திக்கும் போது வறட்சியான கடினமான கூந்தலின் நிலை இன்னும் மோசமானதாக ஆகிவிடுகிறது. ஹேர் கலர் செய்த கூந்தல் மங்கலான தோற்றத்தில் மாறிவிடுகிறது. வெளுத்து வெண்மையாகிவிடுகிறது. இந்த காலத்தில் முடியை பாதுகாக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம்.

    சூரியனின் புற ஊதாக்கதிர்கள் முடியை உலர்த்தி விட செய்யும். இது கூந்தல் இழையின் மென்மையான அல்லது வெளிப்புற அடுக்கை கடினமாக்குகிறது. இது ஃப்ரீஸ் முடியை கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சிக்கலான பிரச்சனை வர செய்கிறது. இது முடி உதிர்தலை அதிகமாக்குகிறது.

    கோடையின் வெப்பத்தை தணிக்க நீச்சலில் ஈடுபடும் போது அது மேலும் கூந்தலின் எண்ணெய்ப்பசையை நீக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள குளோரின் கூந்தலில் இருக்கும் ஈரப்பசையை வெளியேற்ற செய்கிறது. அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்படும் முடியை எப்படி பராமரிப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


    கோடைக்காலத்தில் முதலில் முடி பிளவை கட்டுப்படுத்துங்கள். அவை வராமல் தடுக்க முன்கூட்டியே கூந்தலை வெட்டி விடுவது பாதுகாப்பானது. அதே நேரம் குளிர்காலத்தை காட்டிலும் கோடைக்காலத்தில் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

    அதனால் பெண்கள் தங்கள் கூந்தலின் நுனியில் சிறிதளவு வெட்டி விடுவது நல்லது. ஆண்களும் கழுத்துவரையிலும் காது வரையிலும் ஒட்டியிருக்கும் முடியை மேலும் வளரவிடாமல் வெட்டிவிடுவது நல்லது.

    சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம். அதனால் கூந்தலுக்கு முடி பராமரிப்பு பொருளை பயன்படுத்துவதை தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களின் தன்மைக்கேற்ப ஜெல் அல்லது க்ரீம் வகைகளாக இருக்கலாம்.

    இது சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து சேதத்தை தவிர்க்கலாம். இது கலரிங் செய்த முடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் பணி அதிகம் வெயில் என்றால் நீங்கள் கூந்தலின் உச்சந்தலையை முழுமையாக மறைக்கும் தொப்பியை அணிவது அவசியம். இது உச்சந்தலையை பாதுகாப்பதோடு சரும புற்றுநோயையும் தடுக்க செய்யும்.

    தலை குளியலுக்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யுங்கள். குறிப்பாக கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு என்றால் அது நீங்கள் உப்புநீரில் குளித்தாலும் ரசாயனங்களை உறிஞ்சாது. குறிப்பாக நீங்கள் நீச்சல் குளங்களில் குளிப்பதாக இருந்தால் இது பாதுகாப்பானது. இயற்கை பொருள்களையும் பயன்படுத்தலாம்.

    உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கோடையில் வெளியேறும் வியர்வை பிரச்சனைக்கு நீங்கள் கண்டிப்பாக ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷரை பயன்படுத்த வேண்டும். வியர்வை பிரச்சனையில் கோடையில் வாரம் இரண்டு நாள் வரை நீங்கள் தலைகுளியலை மேற்கொள்வீர்கள்.

    அதனால் இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூந்தலின் அடி அடுக்குவரை கண்டிஷனிங் செய்வதை உறுதி செய்யலாம்.


    சூடான கருவிகள் பொறுத்தவரை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தலைமுடிக்கு சூடான கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் முடியின் ஈரப்பதம் மேலும் குறைகிறது.

    இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள். பிறகு தூங்குவதற்கு முன்பு தலையை பின்னலிட்டு தூங்குங்கள். இது கூந்தல் இழைகள் ஒன்றோடொன்று உரசி பாதிப்பில்லாமல் செய்வதை தடுக்கும்.

    அழகான கூந்தல் அலங்காரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் கோடைக்காலத்தில் இதை அதிகமாக செய்ய வேண்டாம். கூந்தலை சிக்கில்லாமல் வைக்க போனிடெயில் அல்லது எளிதான பின்னல் மூலம் அலங்காரத்தை முடிவு செய்யுங்கள்.

    முடி ஃப்ரீஸ் ஆவதற்கு எதிரான பாதுகாப்பை நீங்கள் செய்து கொள்வதன் மூலம் கூந்தலின் ஈரப்பதத்தை காக்கலாம். இந்த காலத்தில் கூந்தல் நிபுணரின் ஆலோசனையின் பெயரில் கூந்தலை மென்மையாக்கும் எண்ணெய், சீரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கண்டிப்பாக தரமானதாக பயன்படுத்துங்கள்.

    • வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம்.
    • பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்க்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமாக வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தினமும் மூன்று நேரம் குளியல் என்ற நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு மூன்று வேலை குளிக்கும் போதும் நமது உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து விடுபடலாம்.

    அதையும் தாண்டி உங்களுக்கு வியர்குரு வந்தால் நல்ல ஆன்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் லேசான காட்டன் உடைகளை பயன்படுத்துதல் நல்லது.

    அதிக படியான இந்த வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வியர்வை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    அதிகப்படியான பழம், பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    • மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர்.
    • ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 350-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.

    புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது. புதுச்சேரியில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுச்சேரியில் பீருக்கு என தனித்துவமான பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்துவிட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். இதனால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.

    மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக 2 பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் நாளை சித்ரா பவுர்ணமி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் 4.16 மணி முதல் அடுத்த நாள் 24-ந்தேதி அதிகாலை 5.47 மணி உள்ளதால் கூட்டம் அலை மோதும்.

    தற்போது கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், காவல் துறையும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும்
    • தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

    இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

    • தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
    • பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.

    இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.

    தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.

    • மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் சுட்டெரித்தது.
    • காய்கறி பயிர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கருகின.

    மயிலாடுதுறை:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. தண்ணீர் இருப்பை பொறுத்து சாகுபடி பரப்பளவு ஆண்டுதோறும் மாறுதல் அடைந்து வருகிறது.

    இதில் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துடன், மீன்பிடி தொழிலும் பிரதான தொழிலாக விளங்குகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், முடிகண்டநல்லூர், கிடாரங்கொண்டான், புன்செய், கஞ்சா நகரம், காலகஸ்திநாதபுரம், ஆறுபாதி, காழியப்பநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல், சீனி கரும்பு, செங்கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு, பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கொத்தவரை, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் சுட்டெரித்தது. கோடையையொட்டி பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கருகின. செடிகள் வாடி, வதங்கியதால் எதிர்பார்த்த மகசூல் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இந்த நிலையில் செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில் ஒரு ஈடு அறுவடைக்குப் பிறகு வெயில் தாக்கத்தால் செடிகள் காய்ந்து கருகிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    • இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
    • பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்ததி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

    1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்பட ல்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

    இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

    எனவே பள்ளிகள் திறப் பது மீண்டும் தள்ளி போகுமா? இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    ×