search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sophia"

    தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கின் விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Sophia #Tamilisai
    மதுரை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அந்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாணவி சோபியா திடீர் கோஷமிட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் சோபியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் சோபியாவுக்கு தூத்துக்குடி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    இந்தநிலையில் தன் மீது தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி சோபியா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், “விமானத்தில் கோஷமிட்டது தொடர்பாக போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தை பறிப்பதாகும். எனவே தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் என் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்கவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தூத்துக்குடி கோர்ட்டில் மனுதாரர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Sophia #Tamilisai
    ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டு செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்.

    பின்னர் அவர்கள் மற்றொரு புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த நான்(சோபியா) என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதற்கு என்று ஒரு தொலைக்காட்சி கேட்டதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேரை இணைப்பதற்காகத் தான் குற்றாலம் சென்றோம். அதனால் நாங்கள் அதை பதிவு செய்கிறோம் என்கிறார்கள். எந்த அளவுக்கு உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது. எனவே இதை சட்டப்படி எதிர்கொள்வேன். அதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பில் டி.டி.வி.தினகரனும், தி.மு.க.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக பேச ராகுல்காந்திக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்தையே நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது என்று கூறுகிறார். ஆனால், அவர்கள் கட்சியினரால் கோஷ்டி பூசல் இன்றி சும்மா இருக்க முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia 
    விசாரணைக்காக பறிமுதல் செய்த பழைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடி கோர்ட்டில் மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார். #Sophia
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா (வயது 28). இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால், சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி சார்பில் வக்கீல் அதிசயகுமார் நேற்று காலை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை போலீசார் கடந்த 3-ந் தேதி விசாரணைக்காக எனது பழைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். அதற்கான எந்த அத்தாட்சி சான்றும் தரவில்லை. எனது அமெரிக்க விசா, பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது. ஆகையால் எனது பழைய பாஸ்போர்ட்டை எனக்கு திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    கோர்ட்டில் ஏற்கப்பட்டு உள்ள இந்த மனு வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளதாக வக்கீல் தெரிவித்தார். #Sophia

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.

    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    விமானத்தில் தமிழிசையுடன் பிரச்சினை செய்த சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #ArjunSampath #Sophia
    கோவை:

    வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சி. நினைவு மண்டபத்தில் அவரது சிலை மற்றும் அவர் இழுத்த செக்குக்கு இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வ.உ.சி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கோவை மாநகரில் வ.உ.சி.க்கு சிலை வைக்க வேண்டும். கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையை பராமரிப்பு செய்ய வேண்டும். அவினாசி சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

    தூத்துக்குடி சென்ற விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசையுடன் பிரச்சினையில் ஈடுபட்ட சோபியா என்ற பெண் தமிழிசையுடன் பயணம் செய்வதாக டுவீட் செய்துள்ளார். விமானத்துக்குள் கோ‌ஷம் எழுப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்பது கனடா சென்று பெண்ணுக்கு தெரியும். அந்த பெண் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.

    எனவே தான் தமிழிசை முறையாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சோபியா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுபோன்றவர்களுக்கு ஆதரவு தரக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath #Sophia

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என மாணவி சோபியாவுக்கு ஆதரவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.


    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். #MKStalin #DMK #Sophia
    சென்னை:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    நேற்று இது தொடர்பாக கருத்து பதிவிட்ட திமுக தலைவர், “ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! ‘பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!’ ” என ட்வீட் செய்திருந்தார்.



    இந்நிலையில், இன்றும் இது தொடர்பாக அவர் இட்டுள்ள பதிவில், “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.
    பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியா கைது செய்யப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். #Sophia #Kamal
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியாவை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.



    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

    பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள்  ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான்  என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.

    இவ்வாறு கமல் கூறியுள்ளார். #Sophia #Kamal
    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து இருக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். #Sophia #TamilisaiSoundararajan
    கோவை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கோவையில் உள்ள மாவட்ட கட்சி அலுலவகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து வருகிற 18-ந் தேதி சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது.

    இதனை மார்க்சிஸ்டு ஆதரிக்கிறது. கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சனையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக என்.டி.சி. மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.


    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபிகா தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய விவகாரத் தில் பழி வாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை புகார் அளித்துள்ளார். இது தமிழிசைக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாணவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது போல் தமிழிசை மீது மாணவி தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sophia  #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி மாணவி சோபியா மீது புகார் கூறிய பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன். பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக.



    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    தமிழிசையின் புகார் மீது அரசு அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுத்து, ஆராய்ச்சி படிப்பு முடித்து நாடு திரும்பும் ஓர் இளம்பெண்ணை இரவோடு இரவாக சிறையில் தள்ளி தங்கள் விசுவாசத்தை காட்டியிருக்கிறது.

    ஆனால், தமிழிசையின் தூண்டுதலின் பேரில் பா.ஜனதாவினர் தனது மகளை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினார்கள், தனது மகள், மனைவி மற்றும் தனக்கு தமிழிசையே அத்தனைபேர் மத்தியிலும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அவரது தந்தை கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-



    பா.ஜ.க.வை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன்.

    முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுகிறது. சகிப்புத்தன்மையற்று, எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக் கூடாது என்பதான ஏதேச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இயக்குனர் பாரதிராஜா தனது குரலிலேயே பேசி ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘நீங்கள் தமிழக பி.ஜே.பியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்களெல்லாம், தேசிய சிந்தனையுடைய இலக்கிய வாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

    பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

    அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான வி‌ஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை.

    அந்தப் பெண்ணைப் பற்றி முறையிட்ட வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது” என்று பேசியுள்ளார். #TamilisaiSoundararajan #Sophia
    விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையைப் பார்த்து சோபியா முழக்கமிட்டது தவறு என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Shphia #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அவரைப் பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.



    இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். தமிழிசை சவுந்தரராஜனின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் மட்டுமே சோபியாவின் செயலை கண்டித்தனர்.



    இந்த சம்பவம் குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராடலாம். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை யாரும் எதிர்க்கப்போவதில்லை. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் இடம், பொருள், ஏவல் ஒன்று உள்ளது. விமானத்திலோ விமான நிலையத்திலோ ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது.

    கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால், விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? விளம்பரத்திற்காக இதுபோன்று சிலர் கோஷமிடுகின்றனர். இப்படி கோஷமிடுவதை அனுமதித்தால், விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேடை அமைத்து தங்கள் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Shphia #MinisterJayakumar
    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து பேசிய பாரதிராஜா, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும் என்றார். #Sophia
    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது,

    என் இனிய சகோதரி தமிழிசைக்கு பாசத்துடன் பாரதிராஜா,

    நீங்கள் தமிழகத்தின் பாஜ கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் மிகப்பெரிய மதிப்புமிக்க இலக்கியவாதியாக தேசிய சிந்தனையுள்ள குமரி ஆனந்தன் அவரின் புதல்வி என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது, எதையும் நீங்கள் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கூட பல இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நமக்கு எதிரி என்று நாம் சிலரை நினைப்போம். நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல, கருத்து வேறுபாடு. ஜனநாயக அரசில் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. உங்கள் விமான பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா, தாய் மண்ணை விட்டு பிரிந்து வாழ்வியலுக்காக கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து, புகுந்த மண்ணின் பெருமையையும் காத்தவள் சோபியா. 



    சமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவம் அவளை தான் பிறந்த மண்ணில் எவ்வளவு பாதித்திருக்க வேண்டும் என்ற வேதனையில், உரிமையில் அவர் ஒரு வீர தமிழச்சியாக தமிழிசைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் உங்கள் தகுதிக்கு, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா. அந்த வீரமுள்ள தமிழச்சி புகார் கொடுத்து அவளை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வுளவு அநாகரிகமான விஷயம். அந்த பெண்ணை பற்றிய முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்று அந்த வீரமுள்ள தமிழச்சியை விடுதலை பெறச் செய்யுங்கள். இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது. #BJP #TamilisaiSoundararajan #Sophia

    பாரதிராஜா பேசிய வீடியோ கேட்க:

    ×