search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rejects"

    • திட்டப்பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.
    • அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் வக்கீல் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் 20-வது வார்டு கவுன்சிலர் சேக் ஹுசைன் நகர் மன்ற கூட்டத்தில் பேசியதாவது:-

    கடந்த கால கூட்டங்களில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என்னென்ன? எங்கே? எவ்வளவு? சதுர அடியில் இடம் உள்ளது என ஆய்வு செய்து பொதுமக்களும், எங்களுக்கும் தெரியும் வண்ணம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது இன்று வரை நடக்கவில்லை.

    நகரில் உள்ள வார்டுகள் குளறுபடிகள் பற்றி நான் மட்டுமல்ல, பல உறுப்பி னர்கள் அதை நிவர்த்தி செய்ய கோரிக்கையை முன் வைத்தனர். யார், யாருக்கு எந்த வார்டு என்பது பற்றி தெரியவில்லை. அதை தெரிவிக்க நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்களிடம் விளக்கி அவரவர் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறை வேறவில்லை. நகரின் மெயின் ரோடு பகுதி அழ காகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டி ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதித்து, ஆக்கிரமிப்பு களை குறைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் நடக்கவில்லை.

    கீழக்கரையில் ஒப்பந்ததா ரர்கள் பணிகள் தரமானதாக வும், விரைவாகவும் நேர்மை யாகவும் இருக்கும் வண்ணம் சமூக ஆர்வலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் கண்டு கொள்ளவில்லை. எங்களின் நியாயமான கோரிக்கைக்கான பதிலை அடுத்த கூட்டத்தில் தெரி விக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி, லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #LaluPrasadYadav #FodderScam
    புதுடெல்லி:

    கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வயது மூப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தன் மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் பெற்ற லாலு, 3 வழக்குகளில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லாலு மேல்முறையீடு செய்தார்.



    இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் மற்றும் சிபிஐ தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, லாலுவின் ஜாமீன் விஷயத்தில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி லாலுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர். #LaluPrasadYadav #FodderScam

    பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக எம்பிக்கள் கொண்டு வந்த 8 மாற்று திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. #Brexit #BritishParliament
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
     
    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.

     “பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்று டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, பிரெக்சிட் விவகாரத்திற்கு அறுதி பெரும்பான்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை முடிவுசெய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரிட்டனின் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை எம்பிக்கள் ஓட்டெடுப்பின் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக நேற்று 8 மாற்று ஒப்பந்தங்களை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. #Brexit #BritishParliament
     
    மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னா வீடு தங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் கூறியிருப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். #JinnahHouse
    இஸ்லாமாபாத்:

    மும்பை மலபார் ஹில் பகுதியில் முகமது அலி ஜின்னா 1930-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீடு உள்ளது. அந்த வீடு சீரமைக்கப்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இப்போது பாகிஸ்தான் அதனை உரிமை கொண்டாடி உள்ளது.



    பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறும்போது, “மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னா வீடு பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அதனை இப்போது வேறு யாரும் உரிமை கொண்டாட அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

    ஆனால் இந்தியா இதனை மறுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவேஷ்குமார் கூறும்போது, “ஜின்னா வீடு இந்திய அரசுக்கு சொந்தமானது. அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். #JinnahHouse

    மாயமான மலேசிய விமானம் எம்எச்370 தொடர்பாக போயிங், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt
    வாஷிங்டன்:

    மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமான எம்எச்370, மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டது. அதில் 227 பயணிகள், 12 ஊழியர்கள் பயணித்தனர். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அது ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

    விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் எந்த பகுதியில் விழுந்தது? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்ன நடந்தது? என்பதற்கு விசாரணக்குழுவின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில் மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலேசிய விமான விபத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்இ  ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜேக்சன், வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மலேசிய விமான நிலையத்தில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்ட விமானம் மாயமானது தொடர்பான வழக்கு என்பதால் அமெரிக்காவில் விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதி தெரிவித்தார். #MalaysiaAirlines #MH370 #PlaneMissing #USCourt

    தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt #BallotPaper
    புதுடெல்லி:

    மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க ஓட்டுச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு எந்திரத்தின் மூலம் ஓட்டுப் போடும் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளியாகின்றன. அரசுக்கு செலவும் குறைந்து உள்ளது.

    ஆனால் மின்னணு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், இதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் சில கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதை மறுத்துள்ள தேர்தல் கமிஷன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் நம்பகமானது என்றும், அதில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்றும் பலமுறை விளக்கம் அளித்து உள்ளது. அதை நிரூபித்தும் காட்டி இருக்கிறது.



    இந்த நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வரவேண்டும் என்று கோரி ‘நியாய பூமி’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியும் என்றும், எனவே தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அந்த எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்றும், இனிவரும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையையே அமல்படுத்துமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், எல்லா நடைமுறைகள் மற்றும் எந்திரங்களையுமே தவறாக பயன்படுத்த முடியும் என்றும், சந்தேகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  #SupremeCourt #BallotPaper
    மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். #Malaysia #MahathirMohamed
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 பெண்கள் ஒரு காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, பிடிபட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு தலா 3,300 ரிங்கிட் (சுமார் ரூ.57 ஆயிரம்) அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அவர்களுக்கு தலா 6 பிரம்படியும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

    அதைத் தொடர்ந்து அந்த கோர்ட்டில் வைத்து சுமார் 100 பேர் முன்னிலையில் அந்தப் பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது. இதற்கு எதிராக அங்கு கருத்துக்கள் எழுந்தன.

    வடக்கு மாகாணமான டெரங்கானுவில் இப்படி பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

    இந்த நிலையில் அந்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த தண்டனை தொடர்பாக நான் மந்திரிகளிடம் விவாதித்தேன். அவர்கள் இந்த தண்டனை, இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று கருதுகின்றனர். இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதேபோன்ற குற்றங்கள் நடக்கிறபோது, சற்று லேசான தண்டனைகளை நாம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாம் என்பது மக்களை இழிவுபடுத்துகிற மதம் அல்ல என்பதை நாம் காட்ட வேண்டியது முக்கியம்” என குறிப்பிட்டார். #Malaysia #MahathirMohamed 
    மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் பரோலில் விட முடியாது என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #BombayHighCourt #AbuSalem
    மும்பை:

    மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அபு சலீம் (வயது 46). இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் கவுசர் பகர் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். எனவே இதற்காக தனக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

    எனவே இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் அவர் முறையிட்டார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி வி.கே.தகில்ரமணி, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அபு சலீமை பரோலில் விட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரது பரோல் மனுவை தள்ளுபடி செய்தனர்.  #BombayHighCourt #AbuSalem  #tamilnews
    காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். #UNReport #BipinRawat
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலும், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மனித உரிமை மீறல் நடப்பதாகவும், இதில் ராணுவமும் ஈடுபடுவதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதை நிராகரித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஒருதலைப்பட்சமானது எனக்கூறி கண்டனமும் பதிவு செய்தது.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராணுவ தளபதி பிபின் ராவத்திடம், ஐ.நா. அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்திய ராணுவத்தின் மனித உரிமை அறிக்கை குறித்து பேசுவதற்கு தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது அனைவருக்கும் நன்கு தெரியும். காஷ்மீர் மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரியும்’ என்று கூறினார்.

    எனவே ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கூறிய பிபின் ராவத், இத்தகைய சில அறிக்கைகள் தூண்டுதலின் பேரில் தயாரிக்கப்பட்டவை என்றும், இந்திய ராணுவத்தின் மனித உரிமை பேணும் தரவுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை என்றும் தெரிவித்தார்.  #UNReport #BipinRawat #Tamilnews 
    பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அதிபர் முஷரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. #Pakistan #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  ஜூன் 13-ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்திருந்தனர்.

    ஆனால் குறிப்பிட்ட தேதியில் முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முஷரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிமன்றம், முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் அதிரடியாக திரும்ப பெற்றது.

    இந்நிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முஷரப் அளித்திருந்த வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வரும் 22-ம்  தேதி மேல்முறையீடு செய்ய இருப்பதாக முஷரப் தரப்பு தெரிவித்துள்ளது. #Pakistan #PervezMusharraf
    ×