search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓரினச்சேர்க்கை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    • நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள்.

    ஆஸ்திரேலிய தொழில்முறை கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் கேவல்லோ. இவர் ஏ லீக் மென் கிளப் அடிலெய்டு யுனைடெட்டின் மத்திய மிட்பீல்டராக விளையாடுகிறார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.

    ஏனென்றால் இவர் தனது திருமணம் குறித்த தகவலை எக்ஸ் தள பதிவில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் யாருமே இல்லாத கிளப் அடிலெய்டு யுனைடெட் ஆடுகளத்தில் தனது வருங்கால பார்ட்னரிடம் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக முட்டிக்கால் போட்டு ப்ரபோஸ் செய்தார். உடனே லெய்டன் வெட்கத்துடன் முகத்தை மூடி கொண்டார்.

    மேலும் என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி. 

    உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள். இது சாத்தியம் என்று நான் கனவிலும் நினைக்காத ஒன்று. மேலும் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் உண்மையாக வாழ ஊக்குவித்தேன்.

    இந்த சிறப்பு தருணத்தை ஆடுகளத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருந்தது.

    இவ்வாறு எக்ஸ் தளத்தில் கூறினார்.

    ஆண்கள் கால்பந்து வீரர்கள் மறைமுகமாக ஓரினசேர்க்கையாளராக இருந்த போதிலும் வெளிப்படையாக அறியப்பட்ட ஒரே ஓரினச்சேர்க்கையாளர் கேவல்லோ ஆவார். 

    • சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புனே:

    மராட்டிய மாநிலம் புனேயில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் 21 வயது மாணவர் ஒருவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை இவர் வாகோலி பகுதியில் உள்ள பகோரி சாலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஓரினச்சேர்க்கை தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் விசாரணையை தொடங்கினோம்.

    அப்பகுதியில் நடை பெற்று வரும் ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருடன் ஓரினச்சேர்க்கை தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கொலையாளியை கைது செய்ய 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    அந்த கல்லூரியில் ரவிக்குமார் என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது லாட்ஜில் வைத்து பேராசிரியர் ரவிக்குமார் மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்த நிலையில் கும்பகோணம் சுவாமி மலை போலீசிலும் புகார் செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சம்பவம் நடந்த இடம் கன்னியாகுமரி என்பதால் இந்த வழக்கை கன்னியாகுமரியில் விசாரிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

    நாகர்கோவில்

    மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந் தார்.

    அந்த கல்லூரியில் ரவிக்குமார் என்பவர் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கல்லூரியில் இருந்து கன்னி யாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது லாட்ஜில் வைத்து பேராசிரியர் ரவிக்குமார் மாணவரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதுடன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இந்த நிலையில் கும்பகோணம் சுவாமிமலை போலீசிலும் புகார் செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சம்பவம் நடந்த இடம் கன்னியாகுமரி என்பதால் இந்த வழக்கை கன்னியாகுமரியில் விசாரிக்க தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாணவன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க கன்னியாகுமரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், பேராசிரியர் ரவிக்குமார் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓர்பால் ஈர்ப்பு சட்டவிரோதம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Section377
    புதுடெல்லி:

    இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377ன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாகும். இந்த குற்றத்துக்கு, ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்க தற்போதுள்ள சட்ட வழிவகை செய்கிறது. இந்நிலையில் கடந்த 2009ம் தேதி, இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி, இயற்கைக்கு மாறான  உறவு சட்டவிரோதமல்ல என உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து 2013ம் தேதி இந்த உத்தரவுக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம்" என தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரின சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யும் படியும், 377 சட்டப்பிரிவை நீக்கும் படியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

    ஆனால், மத்திய அரசு மேலும் அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    ×