search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagarjuna"

    • இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார்
    • முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.




    மேலும் தலைவர் -171 படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

    ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.




    மேலும் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் இப்படத்தின் ''டைட்டில்' இன்று மாலை ( 22 - ந் தேதி) 6 மணிக்கு வெளியாக உள்ளது. தலைவர் - 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த 4 ல் ஒன்று தான் இப்படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு  நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா.
    • நடிகர் நாகர்ஜுனாவின் 16 வீடுகள் கட்டுமான பணிக்கு அதிகாரிகள் திடீர் தடை விதித்துள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா கோவா மாநிலம், மாண்ட் ரெம் பஞ்சாயத்துகுட்பட்ட மலையை ஒட்டிய பிராப் எர்டி பகுதியில் பல ஏக்கரில் நிலம் வாங்கி உள்ளார். அங்கு 16 வீடுகள் மற்றும் ரெஸ்ட்ரான்ட் கட்டுவதற்கு மாண்ட் ரெம் பஞ்சாயத்தில் தற்காலிகமாக அனுமதி வாங்கி இருந்தார்.

     

    நாகார்ஜுனா

    நாகார்ஜுனா


    அந்த இடத்தில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனை ஆய்வு செய்த பஞ்சாயத்து அதிகாரிகள் அந்த இடத்தில் பல இடங்களில் மிக ஆழமான துளைகள் போடப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் எந்த வகையான கட்டிடம் கட்டப்பட உள்ளது என்ற விவரம் அடங்கிய பெயர் பலகை எதுவும் வைக்கவில்லை.

     

    நாகார்ஜுனா

    நாகார்ஜுனா


    இதையடுத்து அதிகாரிகள் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர். நோட்டீசை கண்ட நாகார்ஜுனா அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு பதில் மனு அனுப்பினார். அதில் தொழில் தொடங்குவதற்காக கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் இதற்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் தடையில்லா அனுமதி வாங்கி உள்ளதாகவும், பணி நிறுத்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்து இருந்தார்.


    நாகார்ஜுனா

    நாகார்ஜுனா

    ஆனால் நாகார்ஜுனா அனுமதி வாங்கியதற்கான எந்தவிதமான பதிவேடும் பஞ்சாயத்து அலுவலகத்தில் இல்லாததால் மேற்கொண்டு பணியை தொடர அனுமதி வழங்க முடியாது என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். நீதிமன்றம் அணுகி அனுமதி பெற்று கட்டுமான பணியை தொடங்குங்கள் அதுவரை கட்டுமான பணியை தொடர அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கட்டுமான பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டுமான பணி தாமதம் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கட்டுமான பணிக்கு தடை விதித்தால் மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனா விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நாகார்ஜுனா மட்டுமன்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


    நாகர்ஜுனா

    மேலும், இந்த வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த சீசன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    பிரமாஸ்திரா

    ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவது போல் இருக்கிறது. எனது பயணம் இங்கு தான் தொடங்கியது. "விக்ரம்" திரைப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர வெளியீட்டு உரிமையை நடிகர் நாகர்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    கார்த்தி - நாகர்ஜுனா

    இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி " நாகர்ஜுனா காருவுடன் நான் இருக்கும் போது எப்போதும் நல்ல விதமாக உணர்வேன். தற்போது அவர் என் படத்தின் பின்னால் இருப்பதனால் என்னை மிக உறுதியானவனாக உணர்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    மேலும் சர்தார் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, தன்னுடைய மருமகள் சமந்தாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
    சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். 

    தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. 



    ‘மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி’ என்று நாகார்ஜுனா உற்சாகமாக கூறியிருக்கிறார். 
    நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், தங்களது திருமண நாளை, இருவரும் குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடி உள்ளனர். #Samantha #NagaChaitanya
    தென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா - நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.

    ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

    குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.



    என்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். #Samantha #NagaChaitanya

    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில், அதிதி ராவ் நாயகியாக நடிக்கும் நிலையில், இயக்குநராக தனுஷ் தன்னை கவர்ந்துவிட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #DD2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    தற்போது பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தனுஷ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல்  உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு பிறகு அதிதி ராவ் நடிக்கும் படம் இது. தனுஷ் இயக்கத்தில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, 



    ‘முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார் தனுஷ்’ என்று பாராட்டி உள்ளார். #DD2 #Dhanush #AditiRaoHydari

    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், நடிகை அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் தற்போது மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். அந்த வகையில் பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வருகிறார். 

    படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 



    தற்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை அனு இமானுவேல் இணைந்துள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு தமிழ் தவிர தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel

    சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நாகர்ஜுனா, சமந்தா கின்னஸ் சாதனைக்கு முயற்சிப்பதாக கிண்டல் செய்தார். #UTurn #Samantha
    சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களும் அவரது கணவர் நாகசைதன்யா நடிப்பில் ‘சைலஜா அல்லுடு ரெட்டி’ என்ற தெலுங்கு படமும் ஒரே தேதியில் வெளியாகி யுள்ளது.

    தெலுங்கு யூ டர்ன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா, “ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார்” என கிண்டல் செய்துள்ளார்.

    மேலும் “பவன் குமார் இயக்கத்தில் சுயாதீன படமாக உருவான ‘லூசியா’ கன்னடத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து மிகப்பெரும் வெற்றியாக ‘யு டர்ன்’ அமைந்தது. அதன் டிரெய்லர் பார்த்து வியந்தேன்.



    இந்தப் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அந்தக் கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் திருப்புமுனையான காட்சிகள் என்னை வியக்கவைத்தன. திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் வெற்றியும் பெற வேண்டும்” என்று வாழ்த்தி உள்ளார். #UTurn #Samantha #Nagarjuna

    பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் பலரும் படத்தில் இணைந்துள்ளனர். #DD2 #Dhanush
    தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஏ.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக அதிதி ராவ் ஹிடாரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படத்தின் கலை பணிகளை முத்துராஜ் மேற்கொள்கிறார். #DD2 #Dhanush

    தென்னிந்திய நடிகர்களில் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, அடுத்ததாக சூப்பர் ஹீரோ பேன்டஸி படத்தில் நடிக்க இருக்கிறார். #Nagarjuna
    தென்னிந்திய நடிகர்களில் ஒரு முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் நாகார்ஜுனா. தெலுங்கு நடிகரான இவர் தெலுங்கு மட்டுமில்லாது பிற மொழிப்படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.

    தற்போது இந்தி திரை உலகில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் நாகார்ஜுனா. அயன் முகர்ஜி இயக்கும் இப்படத்துக்கு ‘பிரம்மாஸ்திரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா. 

    சூப்பர் ஹீரோ பேன்டஸி படமாக உருவாகும் இதை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தின வெளியீடாக வர இருக்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘லாக் கார்கில்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார் நாகார்ஜுனா.



    ஜே.பி.தத்தா தயாரித்து இயக்கியிருந்த இப்படத்தில் அஜய் தேவ்கன், சஞ்சய் தத், கரண் நாத், சுனில் ஷெட்டி, சஃயீப் அலிகான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், ஈஷா தியோல், ரவீனா டாண்டன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தனர். அதன் பிறகு இப்போதுதான் இந்திப்படத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா.
    ×