search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்பாஸ்"

    • பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது.
    • இதன் டைட்டிலை நடிகை அர்ச்சனா வென்றார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.



    இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள்.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருது கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ளன.
    • பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் அறிவிப்பு.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருப்பதை அடுத்து ஏழாவது சீசன் தொடங்கப்படட்டது. இன்று ஏழாவது சீசனுக்கான போட்டியாளர்கள் யார் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

     

    பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு..,

    சரவணா விக்ரம்

    மாயா எஸ் கிருஷ்ணா

    விஷ்னு விஜய்

    ஐஷூ

    ஜோவிகா விஜயகுமார்

    அக்ஷயா உதயகுமார்

    மணிசந்திரா

    வினுஷா தேவி

    நிக்சென்

    பிரதீப் அந்தோனி

    ரவீனா தாஹா

    பூர்ணிமா ரவி

    கூல் சுரேஷ்

    யுகேந்திரன் வாசுதேவன்

    விசித்ரா

    இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை போன்றே ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர்.

    • பிக்பாஸின் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது.
    • இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.


    இந்நிலையில், 'பிக்பாஸ்' 7-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




    • பிக்பாஸ் ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆறாவது சீசனில் நடிகர் அசீம் டைட்டிலை வென்றார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டேனி.
    • இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் பொல்லாதவன், பையா, ரௌத்திரம் படத்தில் நடித்த டேனி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் மியாவ், மரகத நாணயம், ரங்கூன், இரண்டாம் குத்து, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.



    இந்நிலையில் நடிகர் டேனி, நடிப்பு பயிற்சி பட்டறையின் மூலம் பல நடிகர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், ராதா ரவி, சீமான், வெற்றிமாறன், தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த நடிப்பு பயிற்சி பட்டறை வருகிற மே 19, 20, 21ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டேனியின் நடிப்பு பயிற்சி பட்டறைக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார்.
    • இரண்டாவது இடம் விக்ரமனுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    பிக்பாஸ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த சீசனில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.

    பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கு இடையே போட்டி தீவிரமானது.

    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 104 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்நிகழ்ச்சியின் புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, கதிர், அமுதவாணன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 4 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 104 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், கடந்த பிக்பாஸ் சீசனின் போட்டியாளர் கவின் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது ஜாலியா வாங்க அப்பறம் ஜாலியா எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என்று தற்போதைய போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அப்போது பேசிய பிக்பாஸ் கவின் உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசினு தெரியல நேத்து பெட்டி போச்சு இன்னைக்கு நீங்க வந்துருக்கீங்க என்று ஜாலியாக கலாய்த்து பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.
    • இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏடிகே, கதிர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 5 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 101 நாட்களை நெருங்கியுள்ளது.


    திருமாவளவன் பதிவு

    நேற்றைய நிகழ்ச்சியில் பணப்பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு கதிர் வெளியேறினார். இந்நிலையில், இறுதி போட்டிக்கு சென்ற விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    திருமாவளவன் பதிவு

    அதில், "தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் DisneyPlusID  app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம்வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 98 நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் ஏ.டி.கே. வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில், வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 96 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், மகேஷ்வரி வீட்டிற்குள் வருகிறார். அப்போது கவுஸ் மேட்ஸ் அனைவரும் கலந்து பேசி ஒரு சாக்ரிஃபைஸ் டாஸ்க் விளையாட வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு தனலட்சுமி விக்ரமனுக்கு ஒரு பகுதி தாடியை எடுத்து விட வேண்டும் அசீம் அண்ணா சாரி அல்லது சுடிதார் இந்த இரண்டு உடைகளில் எதாவது ஒன்றை அணிய வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு அசீம் இது வந்து கீழ போனும் என்பது போல் இருக்கிறது என்று சொல்கிறார். இதற்கு மகேஷ்வரி சாரி அல்லது சுடிதார் அணிந்தால் கீழ போனும் அப்படீனு அர்த்தம் இல்லை என்று கூறுகிறார். வந்ததுமே உங்க வேலையை ஆரம்பிக்காதீங்க என்று மகேஷ்வரியை அசீம் கத்துகிறார். இதற்கு மகேஷ்வரி நான் பெருக்கு, தொடைக்கதுக்குலாம் வரல இதுக்கு தான் வந்துருகேன் என்று சொல்கிறார். அதற்கு அசீம் அதுக்கு தான் நீங்க வெளியவும் போனீங்க பேசாம உட்காருங்க என்று சொல்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. எப்படியோ பிக்பாஸ் வீட்டில் ஒரு கலவரம் உருவாக போவது உறுதி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது.
    • இதில் இன்று வெளியான புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் தற்போது 7 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இந்த வீட்டில் நீங்கயெல்லாம் ஏன் பெஸ்ட் என்று இன்னொருத்தரை எடுத்து சொல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கதிர் கூறுகிறார். இதற்கு ஏடி.கே., மைனா மாதிரி ஒரு பாசிடிவ் மனிதரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என்று கூறுகிறார். இதன்பின் பேசிய விக்ரமன், அசீம் சில நேரங்களில் காட்டும் அன்பு அவரது பேச்சு திறமை எந்த இடத்திலும் சோர்ந்து விடாமல் 14 வாரங்கள் கடுமையான விமர்சனங்களை அவர் சுமந்து தான் வந்திருக்கிறார். இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். அடுத்து பேசிய அசீம், கோபம் வந்து எந்த விதத்திலும் பாதித்துவிட கூடாது என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாக விக்ரமனை பார்க்கிறேன் என்று கூறினார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    ×