search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramya"

    • தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் தனது நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார்.

    இந்நிலையில் ரம்யா நாயை தொலைத்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தொலைந்த தனது நாயை கண்டுபிடித்து தருமாறு அனைவரிடமும் கோரிக்கை வைத்து, கண்டுபிடித்து கொடுப்போருக்கு அரிய பரிசு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    • கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா.
    • இவர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.


    ரம்யா - ராகுல் காந்தி

    சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் பல்வேறுவிஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையை இழந்து 2 வாரங்களுக்குப் பிறகு நான் பாராளுமன்றத்தில் இருந்தேன். அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? யாரிடமும் எது குறித்துப் பேச வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன். அப்பாவின் பிரிவு துயரை நான் அரசியல் பணிகளில் ஈடுபட்டு மறக்க முயற்சித்தேன்.

    அப்படித் தொடர்ந்து என்னை பணியாற்ற வைத்தது மாண்டியா மக்கள்தான். என் வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வமாக நான் நினைப்பது என் அம்மா, அப்பா, அதற்குப் பிறகு ராகுல்காந்தி. என் அப்பா இறந்த பிறகு நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். நிறையவும் உடைந்து போயிருந்தேன். தேர்தலிலும் தோற்றிருந்த அந்த நேரம் மிகவும் துக்கம் நிறைந்த சமயம். அந்த நேரத்தில் எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது ராகுல்காந்திதான். நான் மீண்டுவர அவர் உதவினார் என்று கூறியிருக்கிறார்.

    • கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா.
    • இவரின் பிறந்தநாளையொட்டி ரசிகர் ஒருவர் அவருக்கு சிறப்பு பரிசு கொடுத்துள்ளார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார். திரைத்துறைக்கு ரம்யா மீண்டும் மறுபிரவேசம் செய்து உள்ளார்.

    ரம்யா

    ரம்யா

     

    'உத்தர கன்னடா' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது 40-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடினார். அவர் வலைத்தளப் பக்கத்தில் 'தனக்கு 40 வயது ஆகிவிட்டதாகவும், 40 வயதை எட்டியோர் பட்டியலில் நானும் இடம்பெறுகிறேன்' என்றும் குறிப்பிட்டிருந்தார். ரம்யாவுக்கு திரை உலகினர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

    ரம்யாவின் ரசிகர் வரைந்த ஓவியம்

    ரம்யாவின் ரசிகர் வரைந்த ஓவியம்

     

    இந்நிலையில் ரம்யாவின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர் ஒருவர் சுவரில் 35 அடி உயரத்திற்கு ரம்யாவின் உருவத்தை வரைந்து அவரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார். பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர் நடிகை ரம்யாவின் தீவிர ரசிகர் ஆவார். சீட்டுக்கட்டுகளில் ஆர்ட்டின் ராணி கார்டு இருப்பது போல் ரம்யாவின் படத்தை வரைந்து, அவரது தலையில் கிரீடம் சூட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் நடிகை ரம்யாவின் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. அந்த படத்திற்கு அவர்கள் லைக் செய்து வருகின்றனர்.

    • தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.


    ரம்யா எழுதிய புத்தகம்

    இந்நிலையில், இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை சமந்தா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    தனுஷ் பாடலுக்கு அதரவு தெரிவித்து ட்விட் செய்த நடிகையும், அரசியல்வாதியுமான ரம்யாவை, ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். #Dhanush #RowdyBaby #Ramya
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார்கள். இந்த பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், சர்வதேச அளவிலான பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம் பெற்று சாதனை புரிந்தது. பில்போர்ட் இசைப்பட்டியல் என்பது, அந்தந்த வாரத்தில் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியல். தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது. 

    விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் முறியடித்துள்ளது. தற்போது வரை தமிழ் சினிமாவில் முதன்முதலாக 10 கோடி பார்வைகளைத் தொட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது.



    இந்த சாதனையை பாராட்டி நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான குத்து ரம்யா ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அற்புதமான பாடலை 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்றும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நடிகை குத்து ரம்யாவை கண்டித்து கன்னட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    பிரபல கன்னட நடிகர் யஷ் நடித்து வெளியான கே.ஜி.எப். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல மொழிகளில் அந்த படத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும், தற்போது அந்த படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தை பற்றி அவர் பேசி இருக்கலாம். ஆனால் அப்படி பேசவில்லை. சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கிக் கொண்டதை பற்றியும் அவர் பேசி இருக்கலாம். அதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை பற்றி மட்டும் பேச அவருக்கு நேரம் இருக்கிறது. இதற்காக அவருக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    இன்று (சனிக்கிழமை) மண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. 2 தேர்தலில் வாக்களிக்காத நடிகை ரம்யா இன்றாவது மண்டியாவுக்கு வந்து ஓட்டுப்போடுமாறு பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #BJP
    பெங்களூரு :

    கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    பின்னர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகருமான அம்பரீசுக்கும், நடிகை ரம்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் நடிகை ரம்யா மண்டியா மாவட்ட அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவியாக நடிகை ரம்யா நியமிக்கப்பட்டார். அவர் சமூகவலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

    கடந்த 31-ந்தேதி குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதுதொடர்பான படத்தையும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி வெள்ளை நிற உடையுடன் காட்சி அளித்தார். அதற்கு நடிகை ரம்யா, இது என்ன பறவையின் எச்சமா? என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க நடிகை ரம்யா மறுத்துவிட்டார்.

    இதற்கிடையே நடிகை ரம்யா 2014-ம் ஆண்டுக்கு பிறகு மண்டியா சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் இதுவரை அவர் வாக்குப்பதிவு செய்யவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைத்தளங்களில் வாக்களிப்பது நமது கடமை என தேர்தலின் போது மட்டும் கருத்து கூறுகிறார். ஆனால் அவர் வாக்களிக்க வருவதில்லை என்று பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகியான சிவக்குமார் ஆராத்தியா என்பவர், நடிகை ரம்யா மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக ஓட்டளிக்க வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அக்கா... வணக்கம்... ஞாபகம் இருக்கா அக்கா. மண்டியா பாராளுமன்ற இடைத்தேர்தல் நாளை (அதாவது இன்று) நடக்கிறது. நீங்கள் மண்டியா மாவட்டத்தின் மகள். அக்கா இந்த தேர்தலில் ஓட்டுப்போட நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம். எங்கள் கட்சி (பா.ஜனதா) வேட்பாளருக்கு ஓட்டுப்போட கண்டிப்பாக மண்டியாவுக்கு வாருங்கள். நீங்கள் பெங்களூருவில் இருந்தாலும், வேறு மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தாலும் வந்து ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள் என நையாண்டி கலந்த கிண்டலுடன் அவர் கூறினார். இது கன்னட செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP
    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல்களுக்கு குத்து ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார். #Ramya #Congress
    பெங்களூரு:

    ‘குத்து’ படத்தில் அறிமுகமான நடிகை ரம்யா காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளராக உள்ளார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை குத்து ரம்யா ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் “பிரதமர் மோடியின் மெழுகு சிலை உருவப்படத்தில் இந்தியில் திருடன் என்ற பொருள்படும் வார்த்தையை பதிவு செய்து இருந்தார்”. லக்னோவைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தரப்பிரதேச மாநில போலீசார் நடிகை குத்து ரம்யா மீது ஐ.டி. சட்டப்பிரிவு 67 மற்றும் சட்டப்பிரிவு 124-ஏ.வின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நடிகை குத்து ரம்யா டுவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் பரவின.

    இதுகுறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ‘காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர்’ என்ற வரி நீக்கப்பட்டு உள்ளது. நான் தற்போது விடுமுறையில் உள்ளேன். விரைவில் ஊருக்கு திரும்புவேன். நான் காங்கிரசில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவல் தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #ramya
    ×