search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "list"

    • தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
    • தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

    இவர் தொகுதி மக்களை சரிவர சந்திக்க வில்லை என்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர் சுப்பராயனிடம் , தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், ஒரு கோடி ரூபாயுடன் என் எம்.பி., அலுவலகத்திற்கு வந்தால், திருப்பூர் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்.எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

    • கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
    • பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.

    இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.

    ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.

    28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.

    இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

    1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

    தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.

    மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார்.
    • ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது.

    பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்தது. ஆனால் இந்த கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    கட்சிக்காக உழைத்து மக்கள் மத்தியில் செல்வாக்குடனும், தொண்டர்கள் பின்புலத்துடனும் இருப்பவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1.01.2024- ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெறவுள்ளது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியி டப்பட்டுள்ள 11 தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,41,717 பேர் , பெண்கள் 14,50,621 பேர், இதரர் 271 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 28,92,609 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி களுக்கான படிவங்கள் 27.10.2023 முதல் 9.12.2023 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    1.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 - ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7- ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.04.2024, 1.07.2024 மற்றும் 1.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 9.12.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ப ட்டு 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
    • கூட்டுறவு சங்க வங்கிகளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் தமிழ்நங்கை விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே, உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்க வங்கிகளில் அளிக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். மேற்படி அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்போது எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும்.

    எனவே, மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க வங்கி களில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
    • அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

    மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.

    காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

    காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
    • கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தை பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கடந்த 3 மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புச்சாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் தமிழகத்திலேயே சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்த தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியி டப்பட்டு வருகிறது.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜூன் மாத தரவரிசை பட்டியலில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதே போல் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தையும், மகர்நோம்புசாவடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 38-வது இடத்தையும், சீனிவாச புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 39-வது இடத்தையும் பிடித்து தஞ்சை மாநகராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
    • 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

    இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    பின்னர் அவர் தெரிவித்தாவது:மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூரா ட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், தி.மு.க ஒன்றியச் செயலர் முரசொலி, அ.தி.மு.க ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பா.ஜ.க காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட திட்டமிடும் குழு தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடபடவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்
    • இந்த பட்டியல், இன்று அந்தந்த அலுவலகங்களில் பொதுவான தகவலுக்காக வெளியிடப்படவுள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் படி, கரூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு இன்றைய நிலையில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் கொண்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், இன்று (2) அந்தந்த அலுவலகங்களில் பொதுவான தகவலுக்காக வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுக்கோட்டை பா.ஜ.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது
    • பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை:

    பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவரும், அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளை கண்காணிக்க "சக்தி கேந்திர பொறுப்பாளர்" என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு தலைவர், பார்வையாளர், செயலாளர், முகவர் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் என்ற வீதத்தில் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி புதுக்கோட்டை நகரில் திலகர் திடல், வடக்கு ராஜ வீதி, அம்பாள்புரம் அக்கச்சியாவயல், பல்லவன் குளம் சந்து, சீதாபதி பிள்ளையார் கோவில் தெரு, மேல 2, மேல3, தெற்கு 2 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 87 முதல் 91 வரையிலான ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு, 65 உறுப்பினர்கள் கொண்ட புகைப்படத்துடன் கூடிய பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்த புதுக்கோட்டை மேற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன், தமிழ்நாடு பாஜக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பட்டியலை வழங்கினார். இதனை மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆலோசனையுடன், புதுக்கோட்டை நகர பாஜக தலைவர் லெட்சுமணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.


    • மதுரை மாநகராட்சி ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும் என பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.
    • இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா யாருடன் கூட்டணி? என்பது பற்றி உயர் மட்ட குழு கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும். எங்களை பொருத்தவரை பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

    அதாவது கடந்த 2009-ம் ஆண்டு பொன். ராதா கிருஷ்ணன் தலைமையி லான கூட்டணி, தனித்துப் போட்டியிட்டு பெருவாரி யான வாக்குகளை பெற்றது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும்.

    இல்லையென்றால் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

    மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெறப்படு கிறது. இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது. அதே போல குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்துள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப் படும்.

    தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன.

    அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளி யிட்டுள்ளார். அதனை திருப்புவதற்காக தேவை யற்ற விவரங்களை தி.மு.க. பெரிதுபடுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 9,93,844 பேரும், பெண் வாக்காளா்கள் 10,49,103 பேரும், இதர பாலினத்தவா்கள் 169 பேரும் என மொத்தம் 20,43,116 வாக்காளா்கள் உள்ளனா்.

    இதில், 2022 நவம்பா் 9ஆம் தேதி முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை புதிதாக சோ்ப்பதற்கு 33,351 படிவங்களும், இறந்த, இடம் பெயா்ந்தவா்களை நீக்குவதற்கு 23,389 படிவங்களும், அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.

    இந்த வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வை க்காக வைக்கப்படவுள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

    நிகழாண்டு முழுவதும் நடைபெறவுள்ள தொடா் திருத்தப் பணியில் 18 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மையத் தகுதிநாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய காலாண்டின் தகுதி நாளில் முன்கூட்டியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6ஐ வட்டாட்சியா் அலுவலகத்தில் பெற்று பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வயது, இருப்பிடத்துக்கான ஆவண ஆதாரங்களை இணைத்து நிறைவு செய்யப்பட்ட படிவத்தை தொடா்புடைய வட்ட அலுவலகத் தோ்தல் பிரிவில் வழங்கலாம். (அல்லது) NVSP Portal என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

    திருவிடைமருதூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,28,359 -, பெண் வாக்காளர்கள் 1,30,839 , மூன்றாம் பாலினத்தவர் 16. மொத்தம் 2,59,214.

    கும்பகோணம்

    ஆண் வாக்காளர்கள் 1,32,152, பெண் வாக்காளர்கள்-1,39,285, மூன்றாம் பாலினத்தவர் - 17, மொத்தம் - 2,71,454.

    பாபநாசம்

    ஆண் வாக்காளர்கள்- 1,27,552, பெண் வாக்காளர்கள் - 1,33,607 , மூன்றாம் பாலினத்தவர்- 19, மொத்தம் - 2,61,178.

    திருவையாறு

    ஆண் வாக்காளர்கள் - 1,29,872, பெண் வாக்காளர்கள் - 1,36,620 , மூன்றாம் பாலினத்தவர்- 20, மொத்தம் - 2,66,512.

    தஞ்சாவூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,33,991 , பெண் வாக்காளர்கள்- 1,46,184, மூன்றாம் பாலினத்தவர் - 59, மொத்தம் - 2,80,234.

    ஒரத்தநாடு

    ஆண் வாக்காளர்கள் - 1,19,004, பெண் வாக்காளர்கள் - 1,26,065, மூன்றாம் பாலினத்தவர் - 5, மொத்தம் - 2,45,074.

    பட்டுக்கோட்டை

    ஆண் வாக்காளர்கள் - 1,16,604, பெண் வாக்காளர்கள் - 1,26,521 , மூன்றாம் பாலினத்தவர்- 24, மொத்தம் - 2,43,149.

    பேராவூரணி

    ஆண் வாக்காளர்கள் - 1,06,310, பெண் வாக்காளர்கள் - 1,09,103 , மூன்றாம் பாலினத்தவர்- 9, மொத்தம் - 2,16,301.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, எல்.ஜி.அண்ணா, புண்ணியமூர்த்தி (தி.மு.க) , சரவணன் ( அ.தி.மு.க ), ஜெய்சதீஷ், விநாயகம் , முரளிதரன் ( பா.ஜ.க ), மோகன்ராஜ், பழனியப்பன் ( காங்கிரஸ் ), அடைக்கலம் , லக்கி செந்தில் ( தே.மு.தி.க) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×