search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idols"

    சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பம் வைடிப்பாக் கம் சாலை அருகே மோரை எவெரட்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென்று சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.இது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் நெல்லிக்குப்பம் போலீ சாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், வருவாய் துறை வருவாய் ஆய்வாளர் அன்வர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு விரைந்து சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிவ லிங்கம் மற்றும் நந்தியை அகற்ற வலியுறுத்தினர்.அப்போது அங்கிருந்த சுரேஷ் உட்பட 5 பேர், இந்த இடம் அரசுக்கு சொந்த மானது என்பதால் சாமி சிலைகள் வைக்கப்பட்டுள் ளது என போலீசாரிடம் தெரிவித்தனர். யாருடைய இடமாக இருந்தாலும், சாமி சிலைகளை வைத்து வழிபட உரிய அனுமதி பெற வேண்டும். எனவே, இங்கிருந்து சாமி சிலை களை உடனடியாக அகற்ற வேண்டும் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்த னர்.

    அங்கிருந்தவர்கள் திடீ ரென்று சிவன், நந்தி சிலை களை கட்டிப்பிடித்து போலீ சாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சாமி சிலைகளை அகற்ற அனுமதிக்கமாட்டோம் என போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சாமி சிலைகளை அதிரடியாக அகற்றினார்கள். மேலும், அகற்றப்பட்ட சாமி சிலை களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் திடீர் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு ட்பட்ட சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபி ஷேகத்துக்கு யாகசாலை அமைக்க கோவிலின் நந்தவனத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

    அப்போது 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், தேவாரப்பதிக செப்பேடுகள், தங்க மூலாம் பூசப்பட்ட பூஜை பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    பின்னர், இவை அனைத்தும் கோவியிலில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளன.

    இந்நிலையில், சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் மேற்பார்வையில், பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் புனிதவதி, பிரசன்னா ஆகியோர் வழிகாட்டுதலின்படி ஐந்தாம் வகுப்பு மாணவ-மாணவிகள் 140 பேர், சமூக அறிவியல் பாடத்தில் பழைமையான சிலைகள் மற்றும் அகழ்வா ராய்ச்சி குறித்த பாடத்திற்காக இக்கோவி லுக்கு வந்து, மேற்கண்ட ஐம்பொன் சுவாமி சிலைகளையும், தேவாரப்பதிக செப்பேடு களையும் பார்வையிட்டனர்.

    இச்சிலைகளின் தொன்மை, வரலாறு குறித்து சமூக அறிவியல் ஆசிரியை சொர்ணா விளக்கிக் கூறினார்.

    சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்த சிலைகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    • ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
    • விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 10 சிலைகள் போலீஸ் பாதுகாப்போடு விதிமுறைகளுடன் ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்ப தற்காக திட்டமிட்டனர்.

    ஆனால் படகு ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களிடம் வலியுறுத்தினார்.

    கையில் எடுத்து சென்றால் சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்து முன்னணி அமைப்பு பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

    பின்னர் படகு வந்ததும் அதில் கொண்டு சென்று நடுக்கடலில் விநாயகரை விஜர்சனம் செய்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் குழும போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நகரில் மொத்தம் 41 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சீர்காழி நகர் மற்றும் புளிச்சக்காடு, நந்தியநல்லூரர், பட்டவி ளாகம், திட்டை, கோயில்பத்து, வினாயக ர்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆபத்து காத்தவிநாயகர், கணநாதர், சித்திவிநாயகர்,விஸ்வரூப விநாயகர்.

    மாணிக்க விநாயகர், செங்கழுநீர் விநாயகர், ராஷ்ட்ர விநாயகர், சித்திவிநாயகர், வீரசக்திவிநாயகர், செல்வவிநாயகர் என 41 இடங்களில் விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3தினங்கள் வழிபாடு நடைபெற்றது.இதனிடையே திங்கள்கிழமை 5விநா யகர்சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில் செவ்வாய் இரவு மீதமுள்ள 36விநா யகர்சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பேன்டு வாத்தியம், வாணவே டிக்கையுடன் ஊர்வலமாக பழைய பேருந்துநிலையத்தில் ஒன்றிணைந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர் ஊர்வலமாக உப்பனாற்றுக்கு சென்றது.

    உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சர ண்ராஜ்,விநாயகர் சதுர்த்தி விழாக்குழு ஒருங்கிணை ப்பாளர் வி.கே.செந்தில்கு மார், மற்றும் பலர் பங்கே ற்றனர். சீர்காழி டி.எஸ்.பி.லா மெக் மேற்பார்வையில் , காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் ௨௦௦-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டி ருந்தனர். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்டு பூதலூர் பெரியார் புரத்தில் இருந்து அதிரடி இசை முழங்க ஊர்வலம் தொடங்கியது.ஊர்வலம் வடக்கு பூதலூர் வந்த போது மழை பெய்தது மழையில் நனைந்து கொண்டே விநாயகர் ஊர்வலம் சென்று வெண்ணாற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

    • அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம்.
    • சிலைகளை செய்வதற்கு ரசாயன வண்ணங்கள் பயன்படுத்த தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும் தோப்பு துறை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியும் இணைந்து மாசில்லாத இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    வேதாரண்யம் நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் கடைவீதி வழியாக உப்பு சத்தியாகிரகம் நினைவு மண்டபம் வரை நடைபெற்ற பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியை நகராட்சி தலைவர் புகழேந்தி தெரடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொழுது களிமண், மஞ்சள் ,அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம், ரசாயன வண்ணங்களை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக், தர்மாகோல், ரங்கோலி ஸ்டிக்கர், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்,

    இயற்கையில் கிடைக்கும் மரப்பட்டைகள் இயற்கை வண்ணங்கள் பூக்கள் வண்ணக்கற்கள் தென்னை தோரணங்கள் மாவிலை இவற்றை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம், அலங்காரம் செய்த குப்பைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு ,பிளாஸ்டிக் மறுசுழற்சி, மறு பயன்பாடு இவற்றின், மூலம் பிளாஸ்டிக் நீர் நிலைகளை சென்றடையாமல் தவிர்க்கலாம், மாசில்லாமல் விநாயகர் வழிபட்டு சுற்றுச்சூழலை காப்போம் என்று மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்து பேரணியில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செயஙயபட உள்ளது.
    • செவ்வாய்க்கிழமையன்று மாலை கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் புதிய பஸ் நிலையம், திருவள்ளுவர் நகர், கல்லாங்காடுவலசு, குமாரவலசு, லைப்ரரி, உப்பு பாளையம், புதுக்காடு, சிவநாதபுரம், ஏபி புதூர், சீரங்க ராய கவுண்டன் வலசு, ஓலப்பாளையம் அருகே உள்ள அனுமந்தபுரம், முத்தூர், எல் கே சி நகர் தண்ணீர் டேங், நடேசன் நகர், பழனிசாமி நகர், மணியக்காரன் பேட்டை, ஆகிய 16இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    பிறகு செவ்வாய்க்கிழமையன்று மாலை வீரகுமாரசாமி திருக்கோவில் வளாகத்திலிருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடுமுடி ஆற்றில் கொண்டு சென்று கரைக்க போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிலைகள் 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
    • இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    பல்லடம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18 ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக பல்லடம் அருகே உள்ள அலகுமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இங்கு திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கந்த சஷ்டி கவசத்தை போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர்,கொரோனாவை வென்ற விநாயகர், சிவலிங்கத்தை தூக்கி வரும் பாகுபலி விநாயகர், ஆறு கரங்கள் ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி புத்தி என இருவருடன் எழுந்தருளும் விநாயகர், உள்ளிட்ட புதிய வடிவ விநாயகர் சிலைகள் உள்ளன . 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது :-

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர்,கோவை, ஊட்டி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. விநாயகர் சிலைகள் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற ரசாயனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இதனால் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையாது. சுற்றுப்புற சூழல் மாசு அடையும் என்கின்ற நோக்கில் அரசு ரசாயன கலவை மூலம் சிலைகள் தயாரிக்க தடை விதித்தது. தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகித கூழ் மாவு,குச்சி கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கை பொருட்களால் சிலைகளை தயாரித்துள்ளோம். சிலைகளை விசர்ஜனம் செய்யும்போது மிக எளிதில் தண்ணீரில் கரைந்து விடும்.

    இந்த ஆண்டு 3 அடி முதல் 9 அடி வரையிலான சித்தி விநாயகர், பால விநாயகர், சிம்மவிநாயகர் கந்த சஷ்டி கவசம் போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர் உள்பட பல்வேறு புதிய தோற்றங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வாட்டர் கலர் என்னும் இயற்கை வர்ணம் கொண்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. விநாயகர் சிலை குளம், குட்டைகளில் கரைத்தவுடன் அங்கு வாழும் மீன்களுக்கு அவை உணவாகப் போகும் வகையில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    சிலை தயாரிப்பில் எந்த இடத்திலும் ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு அன்னை தமிழைக் காக்க ஆன்மீகம் வளர்ப்போம் என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உள்ளோம். திருப்பூர் மாவட்டத்தில் 5,000 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலை பிரதிஷ்டை செய்து யாகவேள்வி வழிபாடு நடத்தி ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்து சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

    கடந்த ஆண்டு கோவை கோட்டத்தில் ஐந்தாயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு சிலை பிரதிஷ்டை செய்து பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்தி அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருப்பூர் மாநகரில் 4 நாட்களும் பல்லடத்தில் 3 நாட்களும் பொங்கலூர் பகுதியில் 2 நாட்களும் என விநாயகர்சதுர்த்தி விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உடன் இந்து முன்னணி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் இருந்தார்.

    • அண்ணா, பெரியார் பிறந்தநநாளையொட்டி அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தன்மானமுள்ள தமிழர்களுக்கு திருவிழாவாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது-

    பகுத்தறிவு என்கின்ற சுயமரியாதை விதையை நமக்கு ஊட்டி தட்டி எழுப்பிய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி, அதைப் போன்று ஐயா பெரியாரின் தலைமைச் சீடர் காஞ்சி தந்த கருவூலம், தென்நாட்டு பெர்னாட்சா, தமிழ்நாட்டு இங்கர்சால், மறுமலர்ச்சி தமிழினத்தின் தூதுவன், காஞ்சித் தலை வன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நாளை (15-ந் தேதி) இரண்டும் உண்மை யான திராவிட இயக்க தொண்டர்களுக்கு, தன்மானமுள்ள தமிழர்க ளுக்கு திருவிழாவாகும்.

    அந்த அடிப்படையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஐயா அவர்க ளின் பிறந்தநாளையும், அண்ணா அவர்களின் பிறந்த நாளையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து அணி களின் நிர்வாகிகள், கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை உள்ள பொறுப் பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி யும், அதைப்போன்று பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித் தும் இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாட வேண்டுகி றேன்.

    சிலைகள் இல்லாத்த இடத்தில் ஐயா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டா டிட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் தலைமைக் கழகத் தின் சார்பில் கேட்டுக்கொள் கின்றேன்.

    தலைமைக் கழகம் சார்பில் மதுரையில் அன்னை இல்லம் பல்லவன் நகர் 3-வது தெருவில் எனது தலைமையில் காலை 9 மணிக்கு நாளை (15-ந் தேதி) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும் கொண்டா டப்படும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர்.
    • சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    தாராபுரம்:

    விநாயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களில் ஒரு அடி முதல் பல அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதனை நீர்நிலைகளில் கரைத்து விழாவினை நிறைவு செய்வர். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி அன்று வருகிறது. அதையொட்டி தாராபுரம், உடுமலை பகுதியில் மண்பாண்ட கலைஞர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தாராபுரம் உடுமலை ரோடு பகுதியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடுவர். அன்றைய தினம் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். அதில் காவல் விநாயகர், மோட்டார் வாகன விநாயகர் என பல உருவங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். அன்று விநாயகருக்கு பிடித்தமான கொளுக்கட்டை, அவல்,பொறி மற்றும் இனிப்புகள் படையல் வைத்து பூஜைகள் நடைபெறும். சில இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    பின்னர் அடுத்த நாள் அல்லது 3 நாட்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதற்கான விநாயகர் சிலைகள் தற்போது தயாரித்து வருகிறோம். அந்த சிலைகள் அரை அடிமுதல் 3 அடி உயரம் வரை உள்ளதாக தயார் செய்து உள்ளோம். அவற்றிற்கு கண்ணை கவரும் வண்ணங்கள் கொடுத்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.

    விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • ரசாயனங்கள் கலக்காத விநாயகர்சிலை களை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதே போல் வீடுகளிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடு வார்கள்.

    சிலை தயாரிப்பு பணி

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி கடந்த மாதமே தொடங்கியது. மாநகர பகுதி களில் பாளை சமாதானபுரம், கிருபாநகர், மார்க்கெட் பகுதிகள், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சிலை தயாரிப்பு பணிகள் இரவு- பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் ஒரு அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வண்ணங்க ளில் வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.

    இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த சிலைகளை பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் சிறிய அளவிலான சிலைகளை வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதே போல் கைகளில் எடுத்து செல்லும் வகையி லான சிறிய சிலைகளும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இது போல சிவன் பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர், கிருஷ்ணர் ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், சுயம்பு விநாயகர் என பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப் படுகிறது. இதே போல் அம்பை, வள்ளியூர் உள்பட மாவட்டம் முழு வதும் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, இலஞ்சி பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையா புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு நீர் நிலை களில் கரைத்த இடங்களில் இந்த ஆண்டும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ரசாயனங்கள் கலக்காத விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
    • விநாயகர் சிலைகளை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

    சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நிலைய எழுந்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி செந்தில் குமார், சம்பத்,சண்முகம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொ ண்டனர்.

    கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார் பேசுகை யில், விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது.

    கடந்த வருடம் வைத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.

    சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.

    விநாயகர் சிலை களை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.

    விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு தினமே சிலைகளை கரைக்க வேண்டும்.

    ஊர்வலத்தின் போது ஜாதி மதம் சார்ந்த கோஷங்களை பாடல்களை பயன்படுத்தக் கூடாது.

    எளிதில் தீப்பிடிக்கும் கொட்டகைகளில் சிலைகளை வைக்கக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினார்.

    இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முத்து, முருகானந்தம், ஹரி, கமல், கண்ணன், குருசாமி உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.

    • 6 அரை அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
    • நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதில் கரைந்து விடும்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.

    இது தவிர அனைத்து விநாயகர் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 13 நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகளின் விற்பனையும் மும்முரம் அடைந்துள்ளன.

    அதன்படி தஞ்சை வெண்ணாற்றங்கரை ஆனந்த வல்லியம்மன் கோவில் தெருவில் நரசிம்மா ஹேண்டி கிராப்ட் மூலம் பல வண்ணங்களில் பல வகைகளில் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    அரை அடி முதல் 6 அரை அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து விநாயகர் சிலைகளும் எந்தவித ரசாயனமும் இல்லாமல் இயற்கையான முறையில் பல விதங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

    தஞ்சை மட்டுமல்லாது அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து நரசிம்மா ஹேண்டி கிராப்ட் பூங்குழலி சண்முகம் கூறும் போது:-

    காஞ்சிபுரத்தில் இருந்து பலவித வண்ணங்களில் எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறோம்.

    ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விநாயகர் சிலைகள் உள்ளது. லாரிகள் மூலம் அனைத்து சிலைகளும் கொண்டுவரப்படுகிறது.

    லாரி வாடகை, மூலப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.

    இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். எங்களிடம் உள்ள சிலைகள் அனைத்தும் காகித கூழால் தயாரிக்கப்பட்டது.

    இதனால் நீர் நிலைகளில் கரைக்கும் போது எளிதில் கரைந்து விடும். சிம்ம விநாயகர், அன்னபட்சி விநாயகர், மயில்வாகன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விநாயகர் சிலைகள் உள்ளன. விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது என்றார்.

    ×