search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Chatuthi"

    • மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவை கொண்டாடி மகிழந்தனர்.
    • முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    திருப்பூர்

    திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டும் அவரது பிறப்பின் வரலாற்றைக் கூறும் விதமாக நாடகம் நடத்தியும் பாடல்கள் பாடினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி , செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன் ,துணைசெயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா கலந்து கொண்டனர்.

    விழாவின் முடிவில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள் என்று கலெக்டர் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது.

    நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி விநா யகர் சதுர்த்தி விழா வினை கொண்டா டும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்ப தற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வழிமுறைகள்

    பொதுமக்கள் களி மண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகா ப்பான முறையில் கரைக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் வகுத்துள்ள படி விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வா கத்தினால் கடையம் ராமநதி அணை, ஆழ்வார் குறிச்சி கடனா ஆறு, யானை பாலம் அருகில் சிற்றாறு, இலஞ்சி, தென்காசி, குற்றாலம், செங் கோட்டை குண்டாறு அணை, ஹரிகர ஆறு, லாலா குடியிருப்பு, புளி யரை, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில் பாவூர்சத்திரம் குளம், பாவூர்சத்திரம், கடைய நல்லூர் தாமரை குளம், மேல கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், ராயகிரி பிள்ளையார் மந்தையாறு ஆகிய இடங்களில் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

    விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டுக ்கொள்ள ப்படு கிறார்கள். சிலைகள் வைப்பது, கரைப்பது தொடர்பான சந்தேகங்க ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிர ண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் ஆகி யோரை நேரில் அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • ரசாயனங்கள் கலக்காத விநாயகர்சிலை களை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதே போல் வீடுகளிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடு வார்கள்.

    சிலை தயாரிப்பு பணி

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி கடந்த மாதமே தொடங்கியது. மாநகர பகுதி களில் பாளை சமாதானபுரம், கிருபாநகர், மார்க்கெட் பகுதிகள், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சிலை தயாரிப்பு பணிகள் இரவு- பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் ஒரு அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வண்ணங்க ளில் வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.

    இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த சிலைகளை பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் சிறிய அளவிலான சிலைகளை வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதே போல் கைகளில் எடுத்து செல்லும் வகையி லான சிறிய சிலைகளும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இது போல சிவன் பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர், கிருஷ்ணர் ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், சுயம்பு விநாயகர் என பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப் படுகிறது. இதே போல் அம்பை, வள்ளியூர் உள்பட மாவட்டம் முழு வதும் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, இலஞ்சி பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையா புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு நீர் நிலை களில் கரைத்த இடங்களில் இந்த ஆண்டும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ரசாயனங்கள் கலக்காத விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×